slide

slide2
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு ...!
slide2
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு ...!
slide3
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
slide4
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

கூகுல் தேடலில் தமிழ்ச் சங்க ஊழல் படங்களை காட்டலில் முன்னேற்றம்

தமிழ் மொழியை விட சமக்கிருத மொழி பழைமையானது எனத் தமிழக அரசின் ஆங்கிலப் பாடநூலில் குறிப்பிட்டது குறித்தோ அல்லது 10, 12 வகுப்பில் மொழிப்பாடமாகத் தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு  செய்தால்  போதும்  எனத் தமிழக அரசு அறிவித்த  போதும் அது குறித்துப் புதுவைத் தமிழ்ச் சங்கம் ஏதேனும் கண்டனங்களைத் தெரிவித்தார்களா? என்று இன்று நான் இணையத்தில் தேடினேன். 

ஆனால், என் கண்ணுக்கு ஒன்றும் தென்படவில்லை. இன்று புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று படங்களில் தேடியபோது மொத்தமுள்ள பதினொரு (11) படங்களில் ஒன்பது (9) படங்கள் தமிழ்ச் சங்கத்தின் முறைகேடுகள் குறித்த படங்கள் தான் வந்தது முன்பு தேடியபோது 15 படங்களில் 6 படங்கள் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேடு குறித்து வந்த நிலையில் இன்று 11 ப்டத்திற்கு 9 படங்கள் முறைகேடு குறித்து முன்னேற்றம் கண்டுள்ளதைக் கவனித்தேன். இந்த இணைப்பை கிளிக் செய்து நீங்களும் பாருங்களேன் புதுவைத் தமிழ்ச் சங்கம்



ஞாயிறு, 17 மார்ச், 2019

ஊழல் எனத்தேடினால் இனி தமிழ்ச் சங்கம் எனப் பொருள் வருமா?

புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று நீங்கள் இன்று கூகுலில் தேடினால் தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பான செய்திப் படங்கள் தான் முந்தி நிற்கின்றன.

இனி ஊழல் என்று இணையத்தில் தேடினால் அதற்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று விரைவில் பொருள் வருமா தெரியவில்லை. மூன்று வரிசையில் மொத்தமாக ஆறு படங்கள்  தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடு தொடர்பான படங்களாகும்.




கேள்வி கேட்பவர்களை நீங்கள் புறக்கணிக்கலாம். ஆனால், உலகத்தின் கண்களில் இருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதைத் தான் இந்த செய்திகள் நமக்குச் சொல்பவை. 

முன்பெல்லாம் தமிழ்ச் சங்கத்தை எதிர்த்த சுவரொட்டிகள் ஒட்டிய போது பல எதிர்ப்புக் குரல்கள் தொலைபேசி வழியாக வந்தன. ஆனால், இப்போது அப்படி வருவதில்லை. ஏனெனில் புதுவைத் தமிழ்ச் சங்கம் குறித்து இன்று பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

முகநூலிலும் வெளியில் இருப்பவர்கள் கூட எந்த எதிர்ப்புக் குரலும் எங்களுக்கு தெரிவிப்பது இல்லை. காரணம் நாங்கள் எதையும்  ஆதாரம் இல்லாமல் எழுதுவதில்லை என்பது தான். 

இந்த வலைப்பதிவில் கூட தொடர்புடைய ஒரு  படம் இல்லாமல் ஒரு செய்தி கூட இல்லை என்பதை  நீங்கள் அறியலாம். 



வெள்ளி, 15 மார்ச், 2019

புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழினத்திற்காக போராடியதாக செய்தி உண்டா?


நற்றமிழில், தமிழகத்தில்
நல்லெண்ணம் இல்லாத
நரிக்கூட்டத்தைக்
கற்றுவைக்க அமைப்பதினும்
கடிநாயை அமைத்திடலாம்!
                                                 - பாரதிதாசன்

தமிழ்ச் சங்கம் என்பது உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டால், அல்லது தமிழ் மொழிக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் புதுவையில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளும் போராடியதைப் பார்த்திருக்க முடியும். 

புதுவைத் தமிழ்ச் சங்கம் மொழிக்காகவும் இனத்திற்காகவும் ஒருபோதும் போராடியதில்லை. ஈழத்தமிழர்களுக்காக உலகெங்கும் போராடிய போது புதுவைத் தமிழ்ச் சங்கம் மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவர்கள் போராடுவதெல்லாம் பதவிக்காக மட்டும் தான்.

எனக்குத் தெரிந்து இவர்கள் இயற்றிய ஒரே தீர்மானம்:
"புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது தான்."

இந்த முறை மாநாட்டில் ஏதோ தீர்மானம் நிறைவேற்றினார்களாம்...

இணையத்தில் தேடிப்பாருங்கள் தப்பித் தவறி தமிழினத்திற்காக போராடியதாக செய்தி வந்திருக்கிறதா பாருங்கள் வாய்ப்பு இல்லை. (வேறு சில அமைப்புகளுடன் நடத்தும் போது செய்திகள் உள்ளது.)




வியாழன், 14 மார்ச், 2019

ஊழல் தமிழ்ச் சங்கத்தை முதல்வர் சரி செய்வாரா?

புதுவை முதல்வர் அவர்கள் தமிழுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

முதல்வர் அப்படி உதவி செய்வதாய் இருந்தால் முதலில் இந்த ஊழல் தமிழ்ச் சங்கத்தின் முறைகேடுகளை சரி செய்வது தான் முதன்மையான பணியாகும் அதனை செய்வாரா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





...........................................
தமிழ் சங்க பொன்விழா மாநாடு: தமிழுக்கும்,தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் நாராயணசாமி உறுதி

புதுவை மாநிலத்தில் தமிழுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் நமது அரசு உரிய மரியாதை செலுத்தி வருகிறது. புதுவை மாநில மக்களின் நலன் கருதி தற்போது நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன் என்றால் இதன் மூலம் அரசு தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அறியலாம்.

புதன், 13 மார்ச், 2019

முத்துவின் ஊழல் மோசடி பற்றி சுவரொட்டி ஒட்டியதால் அதிக வாக்களித்தார்களாம்!

தமிழ்ச் சங்கத் தேர்தல் முடிந்தவுடன்  முத்து அவர்கள் அளித்த பத்திரிக்கை அறிக்கையை கீழே அளித்துள்ளோம். தினமலர் செய்தி (14-02-2017)

தேர்தலில் முறைகேடு நடந்ததை ஒட்டி முத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. உள்ளூரின் கடுமையான எதிர்ப்பு உள்ளதால் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புகளை இணைத்தால் தான்  இதனை தமிழ்ச் சங்கம் போல் நடத்த முடியும் என்பதை அறிந்துள்ளார்.  உள்ளூரில் விலை போகவில்லை. வெளியூரில் வியாபாரம் செய்தாக வேண்டியுள்ளது. 

அப்போது எடுத்த முடிவின் படிதான் அவர் உள்ளூரில் உள்ள தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு அனுப்பாமல் வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி இருந்தார் என்பதை இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். 

இவரின் மோசடிகளைப் பற்றி சுவரொட்டி ஒட்டியதால் தான் தமிழ்ச் சங்கத்தினர் இவருக்கு அதிக வாக்கு அளித்தார்களாம்.  மோசடி என்று சுவரொட்டி ஒட்டியதாலேயே வாக்களித்தார்கள் என்றால், அவர் எத்தகையவர்களை  உறுப்பினர்களாக சேர்த்து வைத்துள்ளார் என்பதைப் பாருங்கள்.


செவ்வாய், 12 மார்ச், 2019

தமிழ்சங்கம் மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றாத வாக்குறுதிகள்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக முத்து தேர்வு செய்த போது வெளிவந்த செய்தி இது.

இந்த செய்தியில் முத்து அவர்கள் குறிப்பிட்ட மூன்று செய்திகளை நாம் நினைவு கூற வேண்டியுள்ளது. 

  • ஒரு அணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெறுவது சங்க வரலாற்றில் இதுவே முதல் முறை. :     
  • அவர் சொல்லும் செய்தி என்னவென்றால் இதுவரை இல்லாத அளவு தேர்தல் மிக மோசமான வடிவில் நடந்தது என்பது தான் அது. அரசியல் கட்சி போல பணம் "பிரியாணி உணவு" வாகனங்களில் அழைத்து வந்து  வாக்களிக்க வைத்தது. வெளியூரிலிருந்து அழைத்து வந்து மண்டபத்தில் தங்க வைத்து வாக்களிக்க வைத்தது என்ற பல்வேறு முறை கேடுகளும் தான்  இந்த முறை அவர்கள் அணி மட்டுமே வெற்று பெறக் காரணமாக இருந்தது. 

  • சங்கத்தில் மேல்மாடி கட்டவும், தொலைபேசி அலைபேசி கணினி வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.      பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருட்டிணன் தமிழ்ச் சங்க மேல்மாடி கட்டுவதற்கு ஒதுக்கிய 36 இலட்சம் நிதியை தன் சோம்பேரித் தனத்தினாலேயே அந்த நிதியை பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களைப் போன்றோர் நிர்வாகத்தில் இருக்கும் வரை எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. தேர்தல் நேரத்தில் சொன்ன எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை
  • சங்கத்தின் கணக்கில் இருந்து இதுவரை நான் நிதியை எடுத்ததே இல்லை. : சங்கத்தின் நிதியையும் தன் சொந்த நிதி என்று இவர் கருதுவதால் அது சங்கத்தின் நிதி என்று அவர் ஒருபோதும் கருதியதே இல்லை. ஏனெனில் சங்கத்தில் வந்த வருமானம் எதையும் இவர் வங்கிக் கணக்கில் செலுத்துவதே இல்லை. பொருளாளர் என்பவரை ஒரு பெயருக்காகவே வைத்துள்ளனர். 
  • கடந்த 2013-2017 காலகட்டத்தில் திரு தி.கோவிந்தராசு அவர்கள் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளராக இருந்தார். அவர் பொருளாளராக இருந்தவரை அவரிடம் தமிழ்ச் சங்க நிதி தொடர்பான எந்த கணக்கையும் அவரிடம் ஒப்படைக்கவில்லை.  இதனைக் கண்டித்து அவர் பணி விலகுவதாகவும் அறிவித்தார். எதற்கும் அஞ்சாத முத்து எந்தக் கணக்கையும் அவரிடம் ஒப்படைத்ததில்லை. 

  • 2010 முதல் 2013 ஆண்டு நிறைவடைந்த பொருளாளரிடமிருந்து கணக்கை 2017-ஆண்டு தொடக்கத்தில் தேர்வு செய்த பொருளாளருக்கு கணக்கு மாற்றியதாக தகவல். அப்படியானால் 2013 ஆம் ஆண்டுமுதல் 2017 ஆண்டு தொடக்கம் முதல் பொருளாளரிடம் கணக்கு ஒப்படைக்கவில்லை என்பது தான் உண்மை.
  • வங்கியிலும் பணம் செலுத்தவில்லை. "ஆம் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் பணம், வாடகைப் பணம்  உள்ளிட்ட எல்லாம் முத்துவின் பணம் தான்"
  • நிதி குறித்து சரியான கணக்கில்லை என்று உறுப்பினர்கள் கூறிய போது ஒரு கூட்டத்தில் 

வெள்ளி, 8 மார்ச், 2019

தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை பொது நூலகமாக்க கோரிக்கை

19-04-2017 புதுச்சேரி ராசீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர்  ரகுபதி அவர்கள் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தை பொது நூலகமாக்க மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பொது நூலகக் கட்டிடம் கட்டுவதற்கு என ரூ 20 லட்சம் நிதி பெற்று தமிழ்ச் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது. 

ஆனால், அந்த கட்டிடத்தில் நூலகம் என்ற பெயர் பலகை வைக்காமலேயே இவர்கள் செய்தித் தாள்கள், வார இதழ்கள் ஆகியவற்றை கடந்த 2006 ஆண்டு முதல் 2015 வரை கலைப் பண்பாட்டுத் துறை ரூ 48,167 வழங்கியுள்ளது. 

இருப்பினும் இதனை முழுமையான பொது நூலகமாக செயல்படுத்தாமல் முற்றிலும்  தமிழ்ச் சங்கக் கட்டிடமாக மாற்றி நிகழ்வுகள் அரங்கமாக வாடகைக்கு விட்டு, வியாபார நோக்கோடு செயல்படுத்தி வருகின்றனர். 

இதனால், பொது மக்களுக்கோ, தமிழ் வளர்ச்சிக்கோ, தமிழ் ஆர்வலர்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.
எனவே, பொது மக்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பயன் பெறும் வகையில் பொது நூலகத்தை அக்கட்டத்தில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


தமிழ்ச் சங்கம் பற்றி புதுச்சேரி முதல்வரிடம் புகார்

புதுச்சேரி முதல்வர் அவர்களிடம் கடந்த 31-01-2017 அன்று தமிழ்ச் சங்க முறைகேடுகள் பற்றிய  புகார் ஒன்று  அளிக்கப்பட்டது.

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள இயலுமா என சட்டத்துறைக்கு அனுப்பி கேட்பதாக தெரிவித்தார். 

......................

தமிழ்ச் சங்கம் கட்டுவதற்காக பாராளுமன்ற  உறுப்பினரின் மூலமாக அரசு நிதி வழங்கி இருப்பதால், அரசு தமிழ்ச் சங்கத்தினை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. அல்லது அதனை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் உள்ளது. அதனை இந்த அரசு செய்து தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு அளிக்கும் கோரிக்கை மனு: 
ஐயா,
புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் திரு முத்து அவர்கள் 2007 ஆம் ஆண்டுகள் பொருளாளராகவும், அதன்பின் ஆறு ஆண்டுகள் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவரது காலங்களில் முறையாக ஆண்டு தோறும் மே/ஜுன் மாதங்களில் கூட்ட வேண்டிய பொதுக்குழு ஒருமுறைகூட கூட்டப்படவில்லை. ஆறு ஆண்டுகளில் ஒருமுறைகூட செலவுக் கணக்குகளை காட்டவில்லை. நிதி முறையீடுகளுக்கு உரிய பதில் இல்லை.
தொடர்ந்து தானே தலைவராக இருக்கும் நோக்கில் சங்கத்தில் தனக்கு வேண்டியவர்களை கமுக்கமாக உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். தேர்தலில் அவரே போட்டியிட வேண்டுமென்று ஆதரவாளர்கள்களைக் கூட்டி சிறப்பு பொதுக்குழுவில  ஒப்புதல் பெற்றுள்ளார். இந்நிலையில் சங்கத்தின் உறுப்பினர்கள் முன்னாள் நீதியரசர் சேது. முருகபூபதியைக் கொண்டு கடந்த சனவரி 7 ஆம் தேதி கூட்டி வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தலை அறிவித்துள்ளார்கள்.
தேர்தல் தேதியில் பல குறைபாடுகள் உள்ளன. வாக்களர் பட்டியலை உறுப்பினர்கள் பார்வையிட வாய்ப்பே வழங்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் உள்ளது. ஒருவர்  பெயரே இரண்டு இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. முகவரியே குறிப்பிடாமலும் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது.
முத்து அவர்கள் தமக்கு ஆதரவாக புதிதாக சேர்த்த உறுப்பினர்களை பிறர் அறிந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கில் உறுப்பினர்கள் சேர்க்கை வரிசை எண்ணை குறிப்பிடாமல் அகர வரிசையில் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.வாக்களர் உறுப்பினர் பட்டியலில் புகைப்படம் சேர்க்கப்படவில்லை.  இதனால் தேர்தலில் கள்ள வாக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையர் வெளியிடவில்லை. முறைகேடாக தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு தேர்தலை அறிவித்துள்ளது. இதில் தேர்தல் நெறிமுறைகளில் உள்ள தேதிக்கும், தேர்தல் அட்ட வணையில் உள்ள தேதிக்கும் முரண்பாடுகள் உள்ளன.
தேர்தல் விதிமுறைகளின் படி வேட்பாளரின் பெயர் மற்றும் தலைப்பெழுத்தும் தமிழில் எழுத வேண்டும் என்ற விதி முறை உள்ளது. ஆனால், அவ்வாறு போட இயலாது என்று மறுத்த திரு முத்து அவர்களின் வேட்பு  மனு
                             தொடர்ச்சி --2      

                               
-2-
தள்ளுபடி செய்யப்பட வேண்டிய நிலையில் அது முறைகேடாக ஏற்றுக் கொள்ளப்  பட்டுள்ளது. இது போல் தேர்தல் ஆணையர் ஒருதலைப் பட்சமாகசெயல்படுவதால், இந்த தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கருதுகிறோம்.
இவ்வகையான செயலால் அப்பாவி தமிழ் அறிஞர்கள் உறுப்பினர்கள் பலர் பாதிக்கப்படுவதால், ஒருவகையான பதட்டம் நிலவுகிறது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை உருவாகும் நிலையும் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
எனவே, இந்த விசயத்தில் அரசே ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்து சரியான வாக்காளர் பட்டியல் வெளியிட்டு நியாயமான முறையில் தேர்தலை நடத்தித்தர ஆவண செய்யும்படி கேட்டுக்  கொள்கிறேன்.

இப்படிக்கு

இரா. அழகிரி


திங்கள், 4 மார்ச், 2019

ஊழல் தமிழ்ச் சங்கத்திற்கு புதுவை முதல்வர் 5 இலட்சம்

ஊழல் தமிழ்ச் சங்கத்திற்கு புதுச்சேரி முதல்வர் 5 லட்சம் மாநாட்டு நிதியாக வழங்கி இருக்கிறார்.


கடந்த ஐந்து ஆண்டுகளாக நிதி தணிக்கை செய்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை என தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலர் புகார் கூறும் நிலையில், புதுச்சேரி முதல்வர் அவர்கள் ஊழல் நிதிக்காக மேலும் தொகையை அளித்திருப்பது, தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.




கீழே உள்ள புதுச்சேரி சங்கப் பதிவாளர் சட்டம் 1969 பிரிவு 4, 4-ஆ மற்றும் பிரிவு 22 இன்படி புதுவைத் தமிழ்ச் சங்கம் ஒரு காலாவதியான சங்கமாகும்.

ஒரு காலாவதியான சங்கத்திற்கு  முதல்வர் நிதி அளித்தது ஏற்றுக் கொள்ள தக்கதல்ல வருந்தத்தக்க நிகழ்வாகும்..

புதுச்சேரி சங்கப் பதிவாளர் சட்டம் 1969

http://www.lawsofindia.org/pdf/puducherry/1969/1969Pondicherry9.pdf

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

உறுப்பினர்களுக்கே அழைப்பு இல்லாமல் மாநாடு நடத்திய தமிழ்ச் சங்கம்


புதுவைத் தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களுக்கே அழைப்பு அனுப்பாமல் தனது பொன் விழா மாநாட்டை நடத்தியுள்ளது.

இதனால் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் கள் தமிழ்ச் சங்க நிர்வாகி கள் மீது மிகுந்த சினத்தில், வருத்தத்தில் இருக்கிறார்கள்.

   இது போன்ற புலம்பல்கள் தான் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் பலர் சொல்லும் தகவல். வரவு செலவுக் கூட்டத்திற்காவது அழைப்பு வருமா? என்று முருகன் என்பவர் இக்குழுவில் கேட்டுள்ளார் வரவு செலவுக் கணக்கே கடந்து 9 ஆண்டுகளுக்கு மேலாகக் காட்டவில்லை. இந்த ஆண்டு மட்டும் எப்படி அவருக்கு அழைப்பு வரும்?. வரப்போவதில்லை என்பதே உண்மை.

வாழ்நாள் உறுப்பினர்களின் பணத்தில் அவர்களுக்கே சொல்லாமல் மாநாடு நடத்திவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் போது, வெளிநாட்டுத் தமிழர்களின் காசில் உல்லாச ஊர் சுற்றலுக்குத் தான் இந்த மாநாடே தவிர தமிழை வளர்ப்பது என்பதெல்லாம் மிகப்பெரிய பொய்....

வியாழன், 14 பிப்ரவரி, 2019

வெளிநாட்டுத் தமிழர்கள் புதுச்சேரி மாநாட்டை புறக்கணிக்க கோரிக்கை

அன்புடையீர் வணக்கம்,

தாங்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டுக்கு வருவதாக அறிந்தோம். எனவே, புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்களாகிய நாங்கள் தமிழ்ச் சங்கம் பற்றி தங்கள் கவனத்திற்கு வராத சில நிகழ்ச்சிகளையும்  தகவல்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.



புதுச்சேரி தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களிடம் வாழ்நாள் கட்டணமாக ரூ.1000/- என 800 புதிய உறுப்பினர்களிடம் வாங்கிய "ரூபாய் எட்டு இலட்சம்" மற்றும் சென்ற ஆண்டு இருப்பு எனவும் தமிழ்ச் சங்கக் கட்டிடம் வாடகை எனப் பதிமூன்று இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தைப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் பொதுக் குழுவைக் கூட்டாமல் பொதுக்குழு ஒப்புதல் பெறாமலும் ஒரு பெரிய மாநாட்டை நடத்துவதாகத் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.

"எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமல் அவர்கள் தம் சுய விளம்பரத்திற்காக மாநாடு நடத்துவது ஒரு மாபெரும் மோசடி என்கிறார்கள் தமிழ்ச் சங்க  வாழ்நாள் உறுப்பினர்கள்".

உள்ளூரில் அம்பலப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டுத் தமிழர்களிடம் ஆதரவைத் திரட்டவும் வெளிநாட்டுத் தமிழர்களை அழைத்து இந்த மாநாட்டை நடத்துகிறது தமிழ்ச்சங்கம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு (உத்தமம்) எனும் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் (INFITT) புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் முறை கேடினை அறிந்து அவர்களை நீக்கிவிட்டு உலகத் தமிழிணைய மாநாட்டை புதுவையில் நடத்தியதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்துப் புதுவை நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்குத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மோசடியாகத் தேர்தல் வைத்து வெற்றிப் பெற்றது. இரண்டாவது வழக்கு பொதுக்குழு கூட்டி இந்த மாநாடு நடத்த ஒப்புதல் பெறாதது, நிதி மோசடி, (வழக்கு எண் :2601/2018) உள்ளிட்டவைகளை அடங்கிய இந்த மாநாட்டைத் தடை செய்யக் கோரியதுமாகும்.

உறுப்பினர்களுக்குக் கூட மாநாட்டு விழாவிற்கு அழைப்பு அனுப்பவில்லை, மாறாக வெளிநாட்டு பங்கேற்பாளர்களுக்கு மட்டும் அழைப்ப்பு அனுப்பிப் பல்வேறு மோசடி செய்து இந்த மாநாடு நடக்கிறார்கள். இதனை மறைக்கவே பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒன்றிணைந்த மாநாடு போல் அரசியல் தலைவர்களின் அரங்கமாக இந்த மாநாடு நடைபெறுகிறது. எங்கே தமிழ் வாழப் போகிறது இவர்களிடம்?

தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் உள்ளக்குமுரலை வெளிநாட்டுத் தமிழறிஞர்களிடம் சொல்ல எங்களுக்கு வழி இல்லை. ஆகவே இந்த வலைப் பதிவுகள் மூலம் தங்களுக்குத் தெரிவிக்க விழைகிறோம். ஏதோ காழ்ப்புணர்ச்சியில் எழுதுகிறார்களோ என்று நீங்கள் கருதாமல் இருக்க எல்லாச் செய்திகளுக்கும் முடிந்தவரை தொடர்புடைய ஆவணகளை இணைத்துள்ளோம்.


https://puduvaithamizhpathukappu.blogspot.com/

இதனால், புதுவை மற்றும் தமிழகத் தமிழர்களை இந்த மாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி வருகிறோம். தாங்கள் வருகைபுரிந்தால் புதுவைத் தமிழ்ச் சங்கத்தினர் அவர்கள் செய்த மோசடிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவார்கள் என்ற செய்தியை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புலவர் பட்டம் பெறாமையால் பாரதிதாசனைக் கூட உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளாத புதுவை தமிழ்ச் சங்கம் இன்று ஓட்டுக்காகக் குப்பைக் கூட்டுபவர், (பார்க்க வலைப்பதிவு) கேள்வி கேட்காத எளிய மக்கள் தமிழுக்காகக் கடந்த காலங்களின் எவ்வித பணியும் செய்யாதவர்களை அரசியல் கட்சி போல வாக்குக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.

எனவே, அன்பு கூர்ந்து இது போன்ற போலித் தமிழ்ச் சங்கத்துக்கு இனிவரும் காலங்களில் ஆதரவு தரவேண்டாம் எனத் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள்
புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள்
தொடர்புக்கு: +91 9443105825

சனி, 9 பிப்ரவரி, 2019

முருகேசன் பேட்டி புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டுக்கு எதிர்ப்பு

புதுச்சேரி தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களிடம் வாழ்நாள் கட்டணமாக ரூ 1000 என 800 புதிய உறுப்பினர்களிடம் வாங்கிய "ரூபாய் எட்டு இலட்சம்" மற்றும் சென்ற ஆண்டு இருப்பு எனவும் தமிழ்ச் சங்க கட்டிடம் வாடகை என பதிமூன்று இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு அந்த பணத்தை பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் பொதுக் குழுவைக் கூட்டாமல் பொதுக்குழு ஒப்புதல் பெறாமல்  ஒரு பெரிய மாநாட்டை நடத்துவதாக அறிவித்துள்ளது புதுவைத் தமிழ்ச் சங்கம்.

"எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு எங்கள் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமல் அவர்களின் சொந்த விளம்பரத்திற்காக மாநாடு நடத்துவது ஒரு மாபெரும் மோசடி என்கிறார்கள் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள்" 

இப்படி கேள்வி கேட்பவர்களில் ஒருவர்தான் ப.முருகேசன் இவர் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் நடத்தும் பொன்விழா மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார். 


தமிழ்சங்க பொன் விழா மாநாட்டை புறக்கணிக்கக் கோரிக்கை

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சியை தமிழர்கள் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

புதுவைத் தமிழ்ச் சங்கம் "பிரைவேட் லிமிட்டெட்"  உறுப்பினர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பொன் விழா நடத்த ஏற்பாடு செயதுள்ளதாக அறிவித்துள்ளது.

பொதுக்குழுவைக் கூட்டாமல் இருப்பது வரவு செலவுக் கணக்கை காட்டாமல் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற போலியாக உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்காக உறுப்பினர்கள் கட்டணத்தை தாமே செலுத்துவதாக கூறி உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டனர். அந்த தொகை செலுத்தப்பட்டதா தெரியவில்லை.

முகநூல் பதிவில்

ஒரு விழா வைத்தால் எல்லா கணக்கையும் சரி செய்துவிடலாம். எல்லாவற்றையும் செலவுக் கணக்கில் காட்டவே விழா ஏற்பாடு நடக்கிறது.

இதை இல்லை என்று மறுத்தால் முதலில்  பொதுக் குழு கூட்டி முறைப்படி ஒப்புதல் பெற வேண்டியது தானே!!

இது போன்ற மோசடிகளை மூடி மறைக்கவே அரசில் தலைவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்.

எனவே, இந்த விழாவை அனைவரும் புறக்கணிப்பு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

#புதுவைத்தமிழ்ச்சங்கம்


செகநாதன் உரை புதுவைத் தமிழ்ச் சங்க முறைகேடுகள்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் நிலச் சான்றிதழை தொலைந்து போனது என்று சொல்கிறார்கள். அதனை வாங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த நிலத்தை அடமான வைத்துவிட்டார்களா? எனக் கேட்கும் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலர் கோ.அ.செகநாதன் அவர்கள்


சுகுமாரன்- புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஏன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலரும் மனித உரிமை செயல் பாட்டாளரான கோ. சுகுமாரன்- புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஏன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் என்பதை விரிவாக பேசினார்.

தமிழ்ச் சங்கத்தை முன்னேற்றுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்காக எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருட்டிணன் அவர்கள் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தின் மேற் பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக  முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ஒதுக்கி இருந்தார். ஆனால், தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அந்த பணத்தை பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த தொகை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது.

மிழ்ச் சங்க கட்டிட ஆவணம் தொலைந்து விட்டது என்று சொல்கிறார்கள். பல ஆண்டுகளாக புதிய ஆவணத்தை ஏன் இவர்கள் விண்ணப்பித்து பெறவில்லை என்பது  மர்மமாக இருக்கிறது. .. உள்ளிட்ட முறைகேடுகளை பட்டியலிட்டார்.....


சீனு தமிழ்மணி புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை கண்டித்து உரை

புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக பல ஆண்டுகளாக போராட வேண்டியிருந்தது. ஆனால், எங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் "குப்பை கூட்டும் பெண்ணை" கூட வாக்கு போடுவதற்காக இப்போது சேர்த்திருக்கிறார்கள்.

முத்து அவர்களின் கல்லூரியில் படிக்கும் பெண்கள் பலரை  புதுச்சேரியில் போலி முகவரி போட்டு  வாக்கு போடுவதற்காக சேர்த்து தமிழ்ச் சங்கத்   தேர்தலில் வெற்றி பெற்றார்கள் இப்போதைய நிர்வாகிகள்.

புலவர் பட்டம் பெறவில்லை என்பதற்காக புரட்சிக்கவி பாரதிதாசனைக் கூட உறுப்பினராக்க மறுத்தது  அன்றைய புதுவைத் தமிழ்ச் சங்கம் அன்று ஆனால் இன்றைய நிலைமையைப் பாருங்கள்.  அதன் கேட்டினைப் பாருங்கள்...!


புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் -முத்து

பார்வேர்டு பிளாக் கட்சியின் முத்து அவர்கள்  பேசுகையில் புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்களா என்று பார்த்து உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. குறிப்பாக சில குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. அது ஒரு சாதிச்சங்கமா தமிழ்ச் சங்கமா?

புதுவைத் தமிழ்ச் சங்க முறைகேடு - ம.இளங்கோ

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தேர்தல் எப்படி நடந்தது. அதில் எந்தவடிவில் முறைகேடாக நடந்து கொண்டனர் என்பதை சுருக்கமாக பேசுகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கையை திடீரென நிறுத்தினர். எல்லா வேட்பாளர்களையும் இரவில் வெளியேற்றுகிறார்கள். அவர்கள் சாப்பிட வேண்டுமாம். 

நள்ளிரவில் ஏல்லோரையும்  வெளியேற்றி விட்டு வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்தார்கள்.  வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என எதிர் அணியினர் புறக்கணித்து  வெளியேறிய பின் தாங்களாகவே வாக்கை எண்ணி வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டனர் தற்போதைய தமிழ்ச் சங்க நிர்வாகிகள்.

என்று தேர்தலில்  போது பார்வையாளராக பங்கேற்ற  தந்தைப் பெரியார் திராவிடர்க் கழகத்தின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் ம. இளங்கோ  தன் கருத்தை பதிவு செய்தார்.



லோகு அய்யப்பன் - புதுவைத் தமிழ்ச் சங்கத்தை கண்டித்து உரை


கடந்த  2013 ஆம் ஆண்டு தமிழ்ச் சங்கத் தேர்தலில் முறைகேட்டை கண்டித்து  நீதி மன்றம் சென்ற போது நீதிபதிகள் எப்படி நடந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டு நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன. ஏன் நீதிமன்றங்கள்  இப்படி செயல்படுகின்றன என விரிவாகப் பேசினார் பெரியார் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பன் அவர்கள்.



தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து - ப.முருகேசன்

சாகித்திய அகாதமி உறுப்பினரும், புதுவை வரலாற்றை தேடித்தந்த புதுவை  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களைக் கூட உறுப்பினராக சேர்த்துக் கொள்ள மறுத்த தமிழ்ச் சங்கம் அது.  இவர்கள் அறிவாளிகளை மறுத்து செயல்படுகிறார்கள்.

என்னையும்  உறுப்பினராக சேர்க்கவில்லை, என தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன்  வருத்ததுடன்  பகிர்ந்து கொண்ட தகவலை  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ப.முருகேசன் அவர்கள்.

2013 ஆம் ஆண்டு தமிழறிஞர்கள் இல்லாத தமிழ்ச் சங்கம் என்று நாங்கள் குறிப்பிட்டு போராட்ட முன்னெடுப்பு செய்த போது அவரை உறுப்பினராக்கினர்.