புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை சரி செய்யலாம் என நினைத்தோம். ஆனால் இன்று மேலும் மேலும் சீர் கெட்டு போயுள்ளது.
குறிப்பாக தமிழறிஞர்களை உறுப்பினராக சேர்ப்பது தான் எங்களது நோக்கமாக இருந்தது. அதோடு எங்கள் பணி நிறைவு என நினைத்தோம்.
அப்போது தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் ஒரு கோரிக்கை வைத்தோம். உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு முன் எங்களோடு பேசுங்கள் என கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களைப் பொருட்படுத்தவில்லை. அது தான் எங்கள் நடவடிக்கை தொடங்கிய பின் அவர்கள் செய்த முதல் தவறு.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் நண்பர்களாக இருந்த போதும் ஒரு உடன்பாடான, இணக்கமான சூழலை அவர்கள் ஏற்படுத்த முயலவில்லை என்பது வருத்தமான செய்தி.
இத்தகைய மெத்தனப் போக்கோடு அவர்கள் தொடர்ந்து தமிழ்ச் சங்கத்தின் நோக்கத்துக்கு எதிராக செயல்பட்டனர்.
எனவே, நாங்கள் எங்கள் பணியை தொடர வேண்டியதாயிற்று. தமிழ்ச் சங்கத்தில் நிர்வாகக்குழுவில் சேரவே விருப்பமில்லாத என்னைப் போன்றவர்களும் தேர்தலில் நிற்க வேண்டியதாயிற்று.
இன்று அவர்கள் வெற்றி பெற்றாலும் அது மதிக்கத் தக்க வெற்றியாக இல்லை.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் இன்று வரை ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்த முன்வராதது அவர்களின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது.