இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

"பாண்டி டைம்சு" செய்தி


"பாண்டி டைம்சு" என்ற செய்தி ஏட்டில் புதுவைத் தமிழ்ச் சங்கம் பற்றிய செய்தி எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழுவில் உள்ள நபர்களை வைத்தே போராட்டம் வலுவாக நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளதாக நான் கருதுகிறேன். ஆகவே, தமிழ்ச்சங்கம் விழித்துக் கொண்டால் நல்லது என்றும் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சங்கம் விழித்துக் கொள்ளுமா? பார்க்கலாம்.
#புதுவைத்தமிழ்ச்சங்கம்

தினகரன் செய்தி உறுப்பினர் சேர்க்க கோரிக்கை


புதன், 20 ஆகஸ்ட், 2014

தமிழர்களை உறுப்பினர்களாக்க மறுக்கும் தமிழ்ச் சங்கம்

புதுச்சேரியில் ஒரு அதிசயம் ஒன்று உண்டு என்றால் தமிழர்களை தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைக்க மறுப்பது தான்.

புதுச்சேரி தமிழ்ச் சங்கம் எந்த அளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.


சனி, 16 ஆகஸ்ட், 2014

தமிழ்ப் பாதுகாப்புக் குழு தொடக்கம்


தமிழ் வளர்த்தெடுத்து என்றும் பெருமை கொண்டது புதுவை. பாரதிதாசன் உறுப்பினராக இருந்த புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கோருபவர்களைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகளைச் சேர்த்துக் கொள்வதில்லை. தமிழ் ஆர்வலர்களையும் அறிஞர்களையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்ற 16-08-2014 அன்று "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு இவ்வமைப்பின் மூலம் தமிழ்ச் சங்க நிர்வாகிகளை பலமுறை தொடர்பு கொண்டு உறுப்பினர்களாக விரும்புகிறவர்களை தமிழ்ச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை நேரிலும் எழுத்து மூலமும் கேட்டுக் கொண்டும் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். பொதுக்குழுவை அடுத்த ஆண்டு (2014) பிப்ரவரி மாதம் கூட்டி உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது பற்றி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் 55 பேர்களைச் சேர்க்கும் போது பொதுக் குழுவை கூட்டி உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. உறுப்பினர்கள் சேர்க்கை செய்வதற்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், தமிழ்ச்சங்கத்தின் விதிமுறையில் இல்லை. எனவேபுதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் சொல்லும் பொய்யான காரணம் தான் பிப்ரவரி மாதம் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுப்பதாகத் தெரிவித்திருப்பதாகும். போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் அதனை தொடர்ந்து திசைத் திருப்பும் வகையிலும். காலம் கடத்தும் வகையிலும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படும் என இப்போது தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சென்ற முறை இவர்கள் பொறுப்பில் இருந்த போதிலிருந்தே அவர்கள் இப்படித்தான் தெரிவித்து வருகிறார்கள்.
எனவே, இந்தப் பொய்யான காரணங்களை நம்பிக் கொண்டு பொதுக்குழு கூட்டும் வரை காத்திருந்து அவர்கள் அடுத்து சொல்ல இருக்கும் வேறு காரணங்களுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்த "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" புதுவையில் உள்ள பல்வேறு அமைப்புகளை அழைத்து ஒரு கண்டனக் கூட்டம் நடத்துவது எனத் தீர்மானித்துள்ளது.

சென்ற முறை 2010 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் இச்சங்கத்தின் ஆட்சி மன்றக் குழுவிற்கு தேர்தல் நடந்தது. ஆட்சி மன்றக் குழுவின் பதவி காலம் மூன்றாண்டுகளாகும். அதாவது 17.10.2013 ஆம் நாளோடு பொறுப்பு முடிந்து தேர்தல் வைக்க வேண்டும். ஆனால், தங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பு முன் தேதியிட்டு மொத்தம் வாழ் நாள் உறுப்பினர்கள் 155 பேரில் மேற்குறிப்பிட்ட 55 பேர் முறைகேடாக  சேர்க்கப்பட்டு கடந்த 21-03-2014 அன்று தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்ச் சங்க விதிப்படி ஆண்டுதோறும் மே/ஜூன் திங்களில் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். கடந்த முறை மூன்றாண்டு பொறுப்பில் இருந்தவர்கள் ஒரே ஒரு முறை கூட பொதுக் குழுவைக் கூட்டவில்லை!

ஆண்டு தோறும் சங்கத்தின் வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கை செய்து சங்க உறுப்பினர்களுக்கு சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்கிறது சங்க விதி .ஆனால் ஒரு முறை கூட சங்க கணக்குகள் உறுப்பினர்களுக்கு காட்டப்படவில்லை!. பல  உறுப்பினர்கள் கடிதம் அளித்தும் எதையும் செவிசாய்க்காமல் மதிப்பு அளிக்காமல் தாங்கள் எப்படியாவது பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் முறையற்ற செயல்களில்  ஈடுபடுகிற்றனர்.

     உறுப்பினர்கள் சேர்க்க வேண்டுமானால் பொதுக்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்று தமிழ்ச் சங்க பதிவு விதி ஏதும் சொல்லவில்லை. சாதி இன வேறு பாடு இன்றி யார் வேண்டுமனாலும் உறுப்பினராக சேரலாம் என தமிழ்ச் சங்கம் விதி எண்’ 3. அ பிரிவு (Eligibility: All persons irrespective of their caste cread or register or nationality are eligible for membership.) என்று உறுப்பினர் சேர்க்கைக்கான விதி சொல்கிறது. அதே விதியின் அடிப்படையில் தான் தமது பதவிக்காலம் முடிந்த பின்பு 55 பேரை முறைகேடாக தமிழ்ச் சங்க உறுப்பினர்களாகச் தமக்கு வேண்டியவர்களைச் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களாகச் சேர்த்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அப்போது உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்ட 55 பேருக்கும் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரி தமிழ்ச் சங்கத்தின் தலைவரே உறுப்பினர்க் கட்டணத்தை செலுத்தி உள்ளதாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்.

இது போல பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால்  சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடத்திய “உலகத் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்)” புதுவைத் தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று  மாநாட்டுக் குழுவிலிருந்து தமிழ்ச் சங்கத்தை விலக்கிவிட்டு மாநாட்டை புதுவையில் நடத்தியது.

தமிழ்ச் சங்கம் முறைகேடாக  செயல்பாடுகளால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை முறைகேடுகள் உள்ள தமிழ்ச் சங்கத்தை தமிழர்கள் பாதுகாக்க வேண்டுமெனில் அனைவரும் ஒன்றினைந்து போராடி வெற்றி பெறச் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.

புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக்குழு

உறுப்பினர்கள் சேர்க்கை : கலந்தாலோசனைக் கூட்டம்


புதுச்சேரி தமிழ்ச் சங்கம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு மறுத்து வரும் நிலையில் தமிழ் அறிஞர்களை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சேர்க்கை செய்யக் கோரி தமிழார்வலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது




வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

உறுப்பினர் சேர்க்கைக்கான குழு ஆலோசனை


  "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" சுவரொட்டி ஒட்டுவதற்கு முன்பாக அதனைத் திட்டமிட்டுக் காலம் கடத்தும் நோக்கில் ஒரு வார காலத்தில் முடிவைச் சொல்கிறோம் என்று மூன்று முறை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினர்.

 ஆனால், நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டிமுடிவு செய்வது என முடிவெடுக்க இருப்பதாக ஒரு காரணத்தைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தாகத் தெரிகிறது.

 தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் 55 பேர்களைச் சேர்க்கும் போது பொதுக் குழுவை கூட்டியா சேர்த்துக் கொண்டார்கள். இல்லையே, எனவே, சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் சொல்லும் பொய்யான காரணம் தான் பொதுக் குழுவைக் கூட்டி முடிவெடுப்பதாகத் தெரிவித்திருப்பது.

  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தை கண்டித்து புதுவையில் சில இடங்களில் காணப்படும் சுவரொட்டி இது. இரண்டு மாத காலம் அவர்களின் பதிலுக்கு காத்திருந்து பின்னர் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். பிரச்சினைகள் தொடங்கிய பின் நாங்களாக முன்வந்து பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் அதை கருத்தில் கொள்ளாமல் அலட்சியம் செய்வது நல்லதல்ல.

புதன், 13 ஆகஸ்ட், 2014

புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு எதிராக ஏன் போராட வேண்டும்?


புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் பல ஆண்டுகளாகத் தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் தம்மைத் தமிழ்ச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளும் படிபல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். ஆனால், தமிழ்ச் சங்கம் ஒருபோதும்  இவர்களின் கோரிக்கையை செவி சாய்க்கவில்லை.  எனவே, தற்போது பல்வேறு தமிழ் மற்றும் சமுதாய இயக்கங்கள் தம்மை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளது. 

பேராசிரியர் இளங்கோ தமிழ்ச் சங்கத்திடம் தான் ஒரு போதும் தேர்தலில் நிற்க போவதில்லை. அதில் பதவி வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் உறுப்பினராக ஆகவும் விரும்பவில்லை ஏற்கனவே தமக்குப் பல வேலைகள் உள்ள படியால் இதனுடன் என்னால் செயல்பட இயலாது. என்று குறிப்பிட்டுத் தம்மைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராக மட்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டேன். தமிழ்ப் பேராசிரியாரான என்னைக்கூட சேர்த்துக் கொள்ள மறுப்பதின் காரணம் உங்கள் எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

கோ.சுகுமாரன் பேசும் போது நான் மனித உரிமை தளங்களில் இயங்கி வருகிறேன். எனவே, எனக்கு இதில் இணைந்து எந்தப் பொறுப்பும் ஏற்க இயலாது. ஆனால், நான் இதனுடன் இணைந்துள்ளமைக்குக் காரணம் தமிழ்ச் சங்கம் நேர்மையற்ற முறையில் இவர்களை இணைத்துக் கொள்ள மறுக்கிறது எனவே தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஆதரவாக நானும் என்னை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட விரும்புகிறேன்.

இரா. அழகிரி நான் பல்வேறு இயக்கப் பணிகளில் இணைந்து செயலாற்றுகிறேன். தமிழ்ப் பணிகளைச் செய்ய வேறு பலர் இருக்கிறார்கள். நாங்கள் வேறு பணிகளைச் செய்பவர்கள். நான் போராட்ட குணம் நிறைந்தவன் பல்வேறு போராட்டங்களில் இணைத்துக் கொண்டு உரிமைகளை மீட்டுத் தரவேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளதால் நான் தமிழ் உணர்வாளர்களுக்கு ஆதரவாக நானும் என்னை இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இரா.சுகுமாரன் :  நான் பல்வேறு நண்பர் பணிசெய்யும் குழுவில் இருக்கிறேன். ஆனால் அந்தக் குழுவில் பெரிய அளவில் இப்போதெல்லாம் இணைந்து பணி செய்வதில்லை. 

வெளியில் உங்களுக்குப் பல்வேறு பணிகள் காத்துக் கிடக்கிறது அதில் நன்றாக இணைந்து செயல்படுங்கள் வெறும் கவிதைப் போட்டியும் கட்டுரைப் போட்டியும் நடத்தி தமிழை வளர்த்துவிட முடியாது. எனவே இது போன்ற அமைப்புகளில் உங்களை இணைத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். என எனது நண்பர் ரவிசங்கர் என்னிடம் சொன்ன தகவல், இன்றும் என் நினைவில் இருக்கிறது. எனவே, தமிழ்ச் சங்கத்தில் இணைந்து நானும் இணைந்து ஒன்று செய்துவிடப் போவதில்லை.

இருப்பினும் தமிழறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஆதரவாக நானும் இதில் இணைத்துக் கொண்டிருக்கிறேன்.

அன்பு நண்பர்களே நீங்களும் அவர்களுக்கு ஆதரவாக இணைத்துக் கொள்ளுங்கள்..