இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திங்கள், 2 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல்.- பேராசிரியர் நா.இளங்கோ

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல்.
https://www.facebook.com/nagailango/posts/10219479249285237
-----------+++++++++----------
ஆண்டுதோறும் பொதுக்குழுவைக் கூட்டாமல் சங்க கணக்குகளைத் தணிக்கை செய்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள், புதுவைத் தமிழ்ச் சங்கத்தைப் பாழடித்து வருகின்றனர்.
எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்குப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க விரும்பிய உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்காமல் அடிதடி, மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளின் மூலம் தமிழ்ச் சங்கத்தைச் சீர்குலைத்து விட்டனர்.
இந்த லட்சணத்தில் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் சிலரைத் தகுதி நீக்கம் செய்யவும் பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலை கொள்ளவும் கண்டனக் குரல் எழுப்பவும் உரிய தருணமாக இச்சூழலை நான் கருதுகிறேன்.
-முனைவர் நா.இளங்கோ.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல் மேலும் தொடர்கிறது.
-----------+++++++++----------
ஆண்டுதோறும் பொதுக்குழுவைக் கூட்டாமல் சங்க கணக்குகளைத் தணிக்கை செய்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் தன் விருப்பம் போல் தமிழ்ச் சங்கத்தை விருது வழங்கும் சங்கமாக மாற்றி வருகின்றனர்.
எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்குப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க விரும்பிய உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்காமல் அடிதடி, மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளின் மூலம் தமிழ்ச் சங்கத்தின் பெருமையைச் சீர்குலைத்து விட்டனர். இந்த லட்சணத்தில் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் சிலரை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யவும் பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலை கொள்ளவும் கண்டனக் குரல் எழுப்பவும் உரிய தருணமாக இச்சூழலை நான் கருதுகிறேன்.
நான்காவது முறையாக மீண்டும் மீண்டும் வே. முத்து, மு. பாலசுப்பிர மணியன் குழுவே தமிழ்ச் சங்கத்தைச் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளனர். இது ஜனநாயக விரோதப் போக்கு. இச்செயலை ஜனநாயக சக்திகள் கண்டிப்பாக எதிர்த்தல் வேண்டும்.
-முனைவர் நா.இளங்கோ.

புதுவைத் தமிழ்ச் சங்க அவலம் -8
-----------------+++++++-----------------
தமிழ்ச் சங்கத்தில் என்ன சிக்கல்?
------------++++++++----------
வெ.முத்து எப்பொழுது தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு வழியாக உள்ளே நுழைந்தாரோ அன்று தொடங்கியது புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அழிவுக் காலம்.
பதவி, புகழ், பட்டங்களை என்ன விலை கொடுத்தும் வாங்கிவிட முடியும் என்பது அவர் கொள்கை.
புதுவைத் தமிழன்பர்கள் இரண்டு அணியாகப் பிளவுபட்டு நிற்க அவரே முதல் காரணம். மற்றவர்கள் துணைக் காரணம்.
சிந்திப்பீர், செயல்படுவீர்.

புதுவைத் தமிழ்ச் சங்க அவலம் -9
----------------++++++++-----------------
புதுச்சேரி தமிழ் சங்க தலைவர் வெ.முத்து தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள செய்தியின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது அந்தப் பகுதியைப் படித்துப்பாருங்கள்.
-------------++++++++------------
மாதம் 25 ஆயிரம் செலவாகிறது என்கிறார். வரவு 19 ஆயிரம் என்று சொல்லுகிறார்.
ஆனால் தமிழ்ச் சங்க இருப்பு நிதி 9 இலட்சத்தில் 12 இலட்சமாக உயர்ந்துள்ளது என்கிறார். (இந்த 12 இலட்சம் யாருடைய வங்கிக் கணக்கில் உள்ளது?)
எல்லாமே தன்னுடைய சொந்த காசில் செலவு செய்வதாக சொல்கிறார்.
-------------------+++++++-----------------
இந்த அறிக்கையில் உள்ள முரண்பாடுகளைக் கூர்ந்து கவனியுங்கள்.

ஞாயிறு, 1 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்க தேர்தல் முறைகேடுகள் குறித்து பேராசிரியர் நா. இளங்கோ





கூகுள் குரல் தட்டச்சு மூலம் தட்டச்சிடப் பட்டது. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை.!!..



புதுச்சேரியில் தமிழ்ச்சங்கம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை சந்திக்கிறது. இப்பொழுது இருக்கிற ஆட்சிக்குழு அதாவது, கடந்த ஆட்சிக் குழு மூன்று முறை அதனுடைய தலைவரும் செயலரும் பொறுப்பேற்று தமிழ்ச்சங்கத்தின் நடத்தினார்கள். இப்போது நான்காவது முறையும் அவர்கள் போட்டியிடுகிறார்கள். பெரும்பாலும், அவர்கள் வெற்றி பெறுவதற்கு உரிய வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதற்கான சில காரணங்களும் அவர் வைத்திருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், அவர்களுக்கு வேண்டிய கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவர்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவர்கள் சேர்த்து உறுப்பினராக வைத்திருக்கிறார்கள். தனக்கு ஓட்டுப் போட கூடியவர்களை பொதுமக்களில் தமிழறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள் யாரேனும் உறுப்பினராக சேர வேண்டும் என்று விரும்பினால் அவர்களை அவர்கள் அவர்களை அனுமதிப்பது இல்லை. எனவே தனக்கு வேண்டியவர்களை வைத்து நடத்துகிற ஒரு தேர்தலாக தமிழ்ச் சங்கத் தேர்தலில் இருக்கிறது.

கடந்து மூன்று முறை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது ஒரு முறை கூட அவர்கள் முறையாக பொதுக்குழுவை கூட்டவில்லை ஒரு முறை கூட அவர்கள் முறையாக கணக்கு காண்பிக்கவில்லை பொதுக்குழுவில் அதுகுறித்து விவாதிக்க வில்லை வங்கிக்கணக்கு முறைப்படி இப்பொழுது இருக்கிற பொருளாளர் ஒரு பெயரில் மாற்றப்படவில்லை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இந்த சங்கம் ஒரு காலாவதியான சங்கம் என்று சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் கடந்த 2020 ஜனவரி வரை. இப்படி ஒரு காலாவதியான சங்கமாக  அதை நடத்திக்கொண்டு, வசூலிக்கிற பணத்திற்கு சரியான கணக்கும் காட்டாமல் பொதுக்குழுவை கூட்டாமல், விவாதிக்காமல், தமிழுக்கு அபூர்வமான எந்தப் பணியையும் செய்யாமல் இந்த சங்கம் இயங்கி கொண்டு இருக்கிறது. 

குறிப்பாக, முத்து அவர்களும், பாலசுப்பிரமணியன் அவர்களும் இந்த சங்கத்தின் உடைய தலைவர் செயலராக இருந்து தன்னை வளர்த்துக் கொள்வதில் தங்களுடைய புகழை பெருக்கிக் கொள்வதில் தங்களுக்கு விருதுகளை வாங்கிக் கொள்வதில் அவர்களுக்கு உள்ள ஆர்வம் தமிழ் வளர்ச்சிக் தமிழுக்கான ஆக்கபூர்வமான பணிகளை செய்வதற்கு அவர்கள் செயல்படுத்தவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் அவர்கள் நடத்தியதெல்லாம் வெறும் விழாக்களும் விருது வழங்கும்  நிகழ்ச்சிகளும் தான். விருதுகளும், நிகழ்ச்சிகளும் ஒரு அமைப்பிற்கு தேவைதான். அது எப்போதாவது நடக்கலாம், ஆனால், அதையே முழுநேரப் பணியாக எடுத்துக் கொண்டு அவர்கள் செய்கிறார்கள். தமிழுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கோ, தமிழ் ஆட்சி மொழியாக  ஆவதற்கோ தமிழை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கும் தாய்மொழி வழிக் கல்விக்கோ, பெயர்ப் பலகைகளில் தமிழ் மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவோ எதற்காகவும் அவர்கள் குரல் கொடுத்ததில்லை. அதற்காக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை, அதற்காக போராட்டங்களை நடத்தியது இல்லை. ஒரு சங்கம் ஜனநாயக பூர்வமாக இயங்க வேண்டும் என்கிற அந்த அடிப்படையை மீறி, தனிநபர் சொத்து போல தனி நபருடைய கையிருப்பில் வைத்துக் கொள்கிற ஒரு தனியார் அமைப்பு போல தமிழ்ச்சங்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


 நாங்கள் இதை எதிர்த்து தான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சொல்லும் பதில் என்னவென்று சொன்னால், எல்லாம் பொய் தான்!!. எல்லாம் நாங்கள் சரியாக செய்கிறோம்! சரியாக செய்கிறோம்!! குறிப்பாக முத்து வந்த பிறகுதான் உலகத்திற்கே தமிழ்ச்சங்கம் தெரிந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள்!!! உலகத்திற்கு தமிழ்ச் சங்கம் தெரிந்தது, எப்படி என்றால், வெளியிலிருந்து வருகிறவர்கள் அழைத்து வந்து இவர்கள் விருது கொடுக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு போகும்போது அங்கே போய் விருது வாங்கிக் கொண்டு வருகிறார்கள். அதனால், தெரிகிறதேத் தவிர தமிழுக்குப் பணிசெய்து இந்த தமிழ்ச் சங்கம் வெளியே தெரியவில்லை.  

எனவே, தொடர்ந்து இதனை ஒரு குற்றச் சாட்டாக வைத்துக் கொண்டிருக்கிறோம் எங்களில் யாருக்கும் பதவி ஆசை கிடையாது குறிப்பாக நான் எந்த பதவிக்கும் எந்தக் காலத்தில் போட்டியிட விரும்பாதவன் எங்களுக்கு பதவி நோக்கமல்ல, யார் இருக்கிறார்கள் என்பது கூட எங்களுக்கு நோக்கமல்ல. தமிழ்ச்சங்கம் தமிழை வளர்க்கிற சங்கமாக தமிழுக்கு ஆக்கபூர்வமான பணியாற்றக் கூடிய சங்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கடந்த 9 ஆண்டுகளாக அதை செய்யாதவர்கள், இப்பொழுது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதை செய்வார்கள் என்று நம்புவதற்கு என்னுடைய மனம் இடம் தரவில்லை. எனவே, இப்படி தொடர்ந்து அவர்களை அந்த பொறுப்பில் வந்தால் இது தனிநபர் கைக்கு மாறி, தனியார் சொத்து போல ஆகிவிடும். காலங்காலமாக இந்தத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி அதற்காகப் பாடுபட்ட தமிழறிஞர்கள் உடைய நம்பிக்கையும் கனவையும் தகர்ப்பதாக அது மாறிவிடும். எனவே, வியாபாரிகளின் கையில் தமிழ்ச்சங்கம் போய்விடக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம் சிந்திப்பீர்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்

புதுவைத் தமிழ்ச் சங்கக கட்டிடம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக கோ.சுகுமாரன்...



கூகுள் குரல் தட்டச்சு மூலம்  தட்டச்சு செய்யப்பட்டது.. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை.!!..

புதுவைத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பு இருந்து கொண்டிருக்கிறது இந்த புதுவைத் தமிழ்ச்சங்கம் முறையாக செயல்படாத காரணத்தினால் மறைந்த அண்ணன் அழகிரி அவர்கள் தலைமையில் புதுச்சேரியை தமிழ் பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கினோம். இந்த குழுவினுடைய நோக்கம் புதுவைத் தமிழ்ச் சங்கத்தை சரியான பாதையில் செயல்பட வைப்பதற்காகவும் புதுச்சேரியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த குழுவை ஏற்படுத்தினோம்.

 இந்த குழு சார்பாக புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருத்தவரை அது ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு சங்கமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று சொன்னாலே, அது அரசாங்கத்தின் கட்டுப்பட்ட ஒரு அமைப்பு .ஆனால், இவர்கள் எந்த வகையிலும் தமிழுக்கு பங்களிப்பு செய்யாமல் சட்ட விரோதமாகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது 2002 முதல் 2006 முடிய தமிழ்ச் சங்க கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்திற்கு அப்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் சிபி திருநாவுக்கரசு அவர்கள் 20 லட்சம் ரூபாய் அவருடைய பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தது கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் அரசாங்க நிதி பெற்று கட்டப்பட்ட ஒரு கட்டடம், இந்தக் கட்டடம் கட்டுவதற்காக தமிழ்ச் சங்கத்தில் அப்போது தலைவராக இருந்த பாவேந்தர் பாரதிதாசன் அவருடைய மகனார் மன்னர்மன்னன் அவர்களும் புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இருவரும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தமிழ்ச்சங்கத்தினுடைய கட்டிடம் என்பது தமிழ்ச் சங்கத்தை நிர்வாகம் செய்வதற்காக கட்டடம் அல்ல. அந்தக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட கட்டடம் அதைச் சொல்லித்தான் அந்தநிதி பெற்றிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அந்த கட்டிடத்தில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்தாலும், அல்லது ஏதாவது பணப்பயன் ஏற்படுகின்ற வகையில் அதை கட்டணத்தை பயன்படுத்தினாலோ தவறு என்றுச் சொல்லி இந்த ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். ஆனால், இதுநாள் வரையில் அந்த தமிழ் சங்கத்திலே நூலகம் இயங்கவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவில்லை. மாறாக தங்களுக்கு வேண்டியவருக்கு எல்லாம் இடம் கொடுத்து கூட்டம் நடத்தக் கூடிய ஒரு கூட்ட அரங்காக அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில் வரக்கூடிய வருவாய் கூட முறையாக ஒரு கணக்கு வைக்கவில்லை. நிறைய ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 இந்த அடிப்படையில் இந்த விதிமுறை நடக்க இருக்கின்ற காரணத்தினால் இந்த கட்டடம் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடம் என்ற அடிப்படையிலேயே எப்பொழுது வேண்டுமானாலும் அந்த கட்டடத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான அது ஒப்பந்தத்தில் ஒரு பிரிவு வைத்து இருக்கின்ற காரணத்தினால் விதியை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிற அந்த கட்டடத்தை அரசாங்கம் எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதை முறையாக செயல்படுத்த வேண்டும் எனச் சொல்லி தன்மையிலே டில்லி சென்றபோது இதற்கான தொடர்புடைய அமைச்சகத்தில் ஒரு மனு அளித்தேன். அந்த மனுவை பொதுச் செயலாளருக்கும் மற்றவர்களுக்கும் அளித்திருக்கிறோம். ஆளுனர் அந்த மனுவை உடனடியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அவர்களுக்கு அனுப்பி வைத்து விளக்கம் கேட்டிருக்கிறார்.

 அதாவது தமிழ்ச்சங்கம் முறையாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம். தமிழ்ச்சங்கம் என்று சொன்னாலே இன்றைக்கு புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் மத்தியில் ஊழல் முறைகேடு நிறைந்த சங்கமாக இந்த சங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

புதுவைத் தமிழ்ச் சங்கம் குறித்து பொறிஞர் இரா.தேவதாசு




கூகுள் குரல் தட்டச்சு மூலம் தட்டச்சிடப் பட்டது. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை



நம்முடைய தாய்மொழி தமிழ் மொழி அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது நான் சொல்ல இது என்ன யுனசுகோ நிறுவனம் சொல்கிறது. அவருடைய தாய் மொழியை பேச மறுப்பது நாள் பிறமொழி சொற்களை கலந்து பேசினால் அவருடைய தாய் மொழி பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் அழிந்துவிடும் பட்டியலிலே அந்தந்த தாய்மொழிகள் இடமளிக்கிறது அதில் நமது தாய் மொழியான தமிழ் மொழியும் இடம் பெற்று இருக்கிறது என்று ஒரு வருத்தமான செய்தியே என யுனசுகோ நிறுவனம் தன்னுடைய ஆய்வுகளில் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் எல்லாம் நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று சொன்னால் நம்முடைய தமிழ்ச் சங்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து அவர்களுடைய நிலைப்பாட்டுடன் போராடினால் நம்முடைய தமிழ் மக்களுக்கு மொழியை மீண்டும் பேசவும் எழுதவும் இளைய தலைமுறையினரை மழலை இறை தமிழ்க்கல்வி கற்க வேண்டிய கடமைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. அதை நாம் செய்கிறோமா அதுக்கு தான் நம்ம தமிழ் மொழி நம்முடைய தமிழ்ச் சங்கங்கள் அதற்காகப் பாடுபட வேண்டும் அந்த நிலைப்பாட்டை புதுவைத் தமிழ்ச்சங்கம் செயல் என்றுதான் எங்களுடைய கவலை அதுதான் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

 ஏன் இதை சொல்கிறேன் என்று சொன்னால் ஒரு அமைப்பு வலுவாக இருந்தால்தான் அந்த அமைப்பினுடைய செயல்பாடுகள் சிறப்பாக அமைப்பு வலுவாக இருக்கணும்னா அதனுடைய சட்டதிட்டங்கள் துணைவிதிகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் அது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் உறுப்பினர்கள் செய்கின்ற செயல்பாடுகள் எல்லாம் கொண்டு செல்ல வேண்டும் இதைத்தான் நாங்கள் கேட்கிறோம் 01/1968 என்ற பதிவை பதிவு செய்யப்பட்டது சங்கங்கள் என்னுடைய பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட பொன் விழாவை கண்டு தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஒரு நூறு உறுப்பினர்களே இருந்த இந்த தமிழ்ச் சங்கம் இன்று 1000 உறுப்பினர்களை அடைந்திருக்கிறது .

அப்போது இந்த சங்கத்தின் உடைய சட்ட திட்டங்கள் முறையாக பின்பற்றப்பட்டு இருக்கிறதா இதனுடைய கணக்கு வழக்குகள் முறையாக உறுப்பினர்களுக்கு சென்றடைந்து இருக்கிறதா இதனுடைய செயல்பாடுகள் எல்லாம் மக்கள் உற்றுநோக்கி இருக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?. 

9 ஆண்டுகாலமாக ஆட்சிக் குழுவில் இருப்பவர்களிடம் எத்தனையோ முறை தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் ரொம்ப ரொம்ப வேதனைக்குரிய செய்தி ஒரு அமைப்பை மொழிக்காகவும் மக்களுக்காகவும் செயல்படாமல் தங்களைப் பற்றிய செய்திகளுக்கும், தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்கும், தங்களைப் பற்றிய பெருமைகளை பேசுவதற்கும், ஒரு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதை நாம் அனுமதிக்கவே முடியாது. சங்கத்தினுடைய சட்டவிதிகள் துணைவிதிகள் அழகாக இருக்கிறது. ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதம் பொதுக்குழுவைக் கூட்டி உறுப்பினர் எல்லாம் கூட்டு ஆண்டுதோறும் என்னென்ன செலவு செய்து இருக்கிறார் அந்த கணக்கை தணிக்கை செய்து உறுப்பினர்களிடம் கொடுங்க வேண்டும். உறுப்பினர் படிச்சு பார்த்துட்டு அவனுடைய ஐயப்பாடுகளை உங்ககிட்ட சொல்ல போறோம் நீங்க அந்த கருத்துக்களை சொல்லுங்க அது ஒரு வலுவான ஒரு அமைப்பை பார்க்கும் அமைப்பு கருத்துமோதல்கள் வந்து அதற்கான தீர்வு கண்டு அந்த செயல்பாடுகளை செஞ்சு பாருங்க தமிழ்ச்சங்க எங்கே போய் நிற்கும்.

அய்யாவிடம் பலமுறை நான் நேரிலும் சொல்லி இருக்கிறேன் கடிதங்களும் கொடுத்திருக்கிறான் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக இது மாதிரி செய்றீங்களா உங்கள நீங்க கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இதில் என்ன பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதில் உங்களுக்கு என்ன சிக்கல் கணக்கு காட்டுவது என்ன சிக்கல் இது என நாங்க பலமுறை கேட்க்கிறோம். 

ஆண்டுக்கணக்கை பதிவர் அலுவலகத்தில் ஒப்படைக்காமையால்  சங்கம் செயலிழந்துவிட்டது. நாங்கள் சங்கங்களின் பதிவாளர் மிகத்தெளிவாக தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கு பதிலளித்திருக்கிறார். புதுவைத் தமிழ்ச்சங்க தன்னுடைய நிலை என்ன என்று கேட்டபோது புதுவைத் தமிழ்ச்சங்கம் ஆறு ஆண்டுகளாக அதனுடைய கணக்கு வழக்குகளை தணிக்கை செய்து எங்களிடத்தில் சமர்ப்பிக்கவில்லை எங்களிடத்தில் பொதுக்குழு கூட்டம் தகவல் இல்லை எங்களிடத்தில் புதுப்பிக்கவில்லை. அதனால் அந்த சங்கம் சட்டப்படி செயலிழந்து விட்டது.. என்றால் இது தான்  உங்களின் 9 ஆண்டு ஆட்சிக் காலத்தின் சிறப்பு.  தமிழுக்காக ஒரு போராட்டம் செய்து இருக்கிறீர்களா? குரல் கொடுத்து இருக்கிறீர்களா? உங்களுடைய பெருமையை பேசுவதற்கு அல்ல தமிழ்ச் சங்கம்.

புதுவைத் தமிழ்ச்சங்கம் குறித்து பெ.பராங்குசம் அவர்கள்




கூகுள் குரல் தட்டச்சினால் தட்டச்சு செய்யப்பட்டது. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை.


தமிழ் சங்கங்கள் என்று சொன்னாலே தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் பாடுபடுகின்ற ஒரு சங்கமாக உலகம் போராட்டங்களையும் கொண்டிருக்கும் போது ஒரு தொழிற்சங்கம் ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது புதுச்சேரி சென்று தமிழ் அமைப்புக்கள் ஒன்றுகூடி வழங்கப்பட இருப்பதாகவும் ஆனால் புதுச்சேரி தங்களின் கலந்துகொள்ளாது அந்த களப்பணியாற்ற வேண்டும் அப்போதுதான் நலம் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க என்ற பாவேந்தர் சொல்ல வரிக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும் புதுச்சேரி தமிழ்ச்சங்கம் அது பற்றி கவலைப் படுவதே துரோகம் இழைப்பது போல் ஒரு நாளைக்கு ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள் விழா நடத்துவது மாதமாக விழா நடத்துவது ஆண்டு விழாவை நடத்துகிறார்கள் தமிழர்கள் 1035 உறுப்பினர்கள் தெரிகிறது அவர்கள் எங்கே போனார்கள் தேர்தலுக்குப் பிறகு சேர்த்துக் கொள்கிறார்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது
யாருக்கு ஆசை கிடையாது அவரே தலைவராக இருக்க முடியவில்லை என்பதே

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தப்புத் தாளங்கள் - நக்கீரன் 8-2-2020

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் வில்லியனூரில் நடந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொதுக்குழுவைக் கூட்டாமல் தேர்தலுக்காக மட்டும் சிறப்புப் பொதுக்குழுவை கூட்டுகின்றனர். வரவு செலவு கணக்குக் காட்டவில்லை.

உறுப்பினர்கள் பலருக்கு பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புகள் அனுப்பவில்லை.

இதனைத் தட்டிக் கேட்டவர்களை குண்டர்களை வைத்து மிரட்டித் தாக்கினர். இதில் பாவேந்தர் பாரதிதாசனார் பெயரன் பாதிக்கப்பட்டார்.

வரவு செலவுக் கணக்குகள் தணிக்கை செய்து பதிவர் அலுவலகத்தில் கொடுக்காமையால் தமிழ்ச் சங்கத்தை செயலற்ற சங்கம் என அறிவித்துள்ளனர். 


தமிழ்ச் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு - தினகரன்

Add caption

புதுவைத் தமிழ்ச் சங்கம் முன் போராட்டம்














புதுச்சேரி தமிழ்ச் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு- இந்து தமிழ்


தமிழ்ச் சங்க பொதுக்குழுக் கூட்டம் தள்ளுமுள்ளுடன் நிறைவடைந்தது -தினமலர்






புதுவைத் தமிழ்ச் சங்கம் வரவு செலவுக் கணக்கை 9 ஆண்டுகளாக ..

கடந்த 25-1-2020 வரை பதிவாளர் அலுவலகத்தில் தணிக்கை செய்த கணக்குகளை ஒப்படைக்க வில்லை எனஙே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழ்ச் சங்கம் சட்டப்படி சங்கம் என்ற நிலையிலேயே உள்ளது. 
 

தமிழ்ச் சங்கத் தேர்தலை நேர்மையாக நடத்த அரசுக்கு கோரிக்கை


புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலை முறையாக நடத்த வேண்டும்