மெனு புதியது
- முகப்பு
- எங்களைப் பற்றி
- புதுவைத் தமிழ்ச் சங்கம்
- தமிழ்ப் பாதுகாப்புக் குழு
- பத்திரிக்கைச் செய்திகள்
டெச்ட்
!doctype>
இழைவியக்கம்
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020
வெள்ளி, 21 பிப்ரவரி, 2020
வெள்ளி, 14 பிப்ரவரி, 2020
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் 2020 - முறைகேடாகவே தொடங்கியது
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் 2020 - 2023 ஆம் ஆண்டிற்கான தேர்தல் 23-2-2020 அன்று நடக்கும் என கடந்த 1-2-2020 அன்று கூட்டப்பட்ட சிறப்புக் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் தொடக்கமே முறைகேடாக தொடங்கியது.
முறைகேடு-1 பொதுக்குழுக் கூட்டத்திற்கு பலருக்கு அழைப்பு அனுப்பாமல் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழுவில் உறுப்பினர்கள் யாருக்கும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை. கேள்விகள் கேட்க முயன்றவர்களை அடியாட்களை வைத்துத் தாக்க முயன்றனர்.
முறைகேடு-2 : வழக்கம் போல இந்த முறையும் இறந்தவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. உறுப்பின்ர்களின் 35 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் முகவரிகள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தலில் நிற்பவர்களை அலைக்கழிக்கும் முயற்சியாகும்.
எல்லா உறுப்பினர்களுக்கும் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு அனுப்பி இருந்தால் அந்தக் கடிதம் திரும்பி வந்திருக்கும். அதை வைத்து முகவரி சரி செய்திருக்க முடியும். ஆனால், இவர்கள் பலருக்கு அழைப்பு அனுப்புவதிலை என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. நாங்கள் அப்படித்தான் இதனைக் கண்டறிந்தோம்.
முறைகேடு - 3 : வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் வெளியிடப் படவில்லை. இதனால் கள்ள வாக்குகள் பதிவு செய்ய வாய்ப்புகள் உள்ளது. தமிழ்ச் சங்க தேர்தலில் வாக்களிக்க தமிழ்ச் சங்கம் அனுப்பிய் கடிதம் அல்லது தமிழ்ச் சஙகம் வழங்கிய அடையாள அட்டை இரண்டில் ஒன்று வாக்களிக்க போதுமானதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் அனுப்பிய கடிதத்தை யார் வேண்டுமானாலும் எடுத்து வந்து கள்ள வாக்கு பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளது.
எல்லா உறுப்பினர்களுக்கும் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு அனுப்பி இருந்தால் அந்தக் கடிதம் திரும்பி வந்திருக்கும். அதை வைத்து முகவரி சரி செய்திருக்க முடியும். ஆனால், இவர்கள் பலருக்கு அழைப்பு அனுப்புவதிலை என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. நாங்கள் அப்படித்தான் இதனைக் கண்டறிந்தோம்.
முறைகேடு - 3 : வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் வெளியிடப் படவில்லை. இதனால் கள்ள வாக்குகள் பதிவு செய்ய வாய்ப்புகள் உள்ளது. தமிழ்ச் சங்க தேர்தலில் வாக்களிக்க தமிழ்ச் சங்கம் அனுப்பிய் கடிதம் அல்லது தமிழ்ச் சஙகம் வழங்கிய அடையாள அட்டை இரண்டில் ஒன்று வாக்களிக்க போதுமானதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் அனுப்பிய கடிதத்தை யார் வேண்டுமானாலும் எடுத்து வந்து கள்ள வாக்கு பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளது.
புதுவைத் தமிழ்ச் சங்கமா குண்டர்கள் கூடாரமா?
புதுவைத் தமிழ்ச் சங்கத்தை ஒரு குழு கைப்பற்றி வைத்துள்ளது.
தமிழுக்காக எந்த வகையிலும் பங்கேற்காதவர்களை மட்டுமே உறுப்பினர்களாக்கி
வாக்குகள் பெற்று தாமே நிரந்தரமான நிர்வாகிகளாக இருப்பதற்கான நிலையை
உருவாக்கி வைத்துள்ளனர்.
தமிழுக்காகச் செயலாற்றுபவர்கள் அறிஞர்கள்
யாரும் நிர்வாகக் குழுவில் இடம் பெறாமல் இருப்பதில் மட்டும் மிக்கக் கவனமாக
அவர்கள் இருப்பதைக் காணமுடிகிறது. இருந்தால் அவர்கள் தமிழுக்குச்
செயலாற்றாத துதிபாடிக் கூட்டமாக இருந்தாக வேண்டும்.
துதிபாடி, புகழ்பாடி அடிமைச் சிந்தனையோடு இருக்கும் ஒருவன் ஒருபோதும் உரிமைக்காகப் போராடுபவனாக இருக்க வாய்ப்பு இல்லை. இத்தனை நடப்பினும் ஒன்றுமே நடக்காதது போலப் புதுவைத் தமிழ் அறிஞர்கள் பலர் தூங்கி வருகின்றனர்.
வீரத் தமிழச்சி, புலியை முறத்தால் அடித்தாள், விளக்குமாற்றால் அடித்தாள் என மேடைகளில் அடிக்கடி பேசிவிட்டு தூங்கப் போய்விடுவார்கள்.
வீரத் தமிழச்சி, புலியை முறத்தால் அடித்தாள், விளக்குமாற்றால் அடித்தாள் என மேடைகளில் அடிக்கடி பேசிவிட்டு தூங்கப் போய்விடுவார்கள்.
இப்படி நடப்பதால் தான் தமிழ்ச் சங்கம் தமிழுக்காக இதுவரை எதுவும் செய்யாத கூட்டத்திடம் சிக்கித் தவிக்கிறது.
போராட்ட உணர்வுகள் மங்கிப் போன, உரிமைகள் பெற வேண்டும் என்பதில் அக்கரை
இல்லாதவர்கள் எனத் தமிழ்ச் சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட பலருக்குத்
தமிழ்ச் சங்கம் விருது வழங்கி அவர்களிடம் இருந்த கொஞ்சம் தமிழ் உணர்வையும்
மழுங்கடித்துள்ளது.
இதனால், தமிழ்ச் சங்கத்தை எதிர்த்து விருது பெற்றவர்கள் யாரும் பேசுவது இல்லை. பலர் விருது பெற்றதால் அமைதியானவர்களாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் ஆர்வலர்களும், உணர்வாளர்கள் ஒரு சில மானமுள்ள தமிழறிஞர்கள் மட்டுமே போராடி வருகின்றனர்.
இந்த நிலை கண்டு தமிழ்ச் சங்கத்தைச் சரியாக நடத்துங்கள் என்று கோரி போராடி வரும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரன் அவர்களைக் குண்டர்கள் வைத்துத் தமிழ்ச் சங்கம் மிரட்டியதும், தாக்கியதும் #வன்மையாகக்_கண்டிக்கத்_தக்கது
இதனால், தமிழ்ச் சங்கத்தை எதிர்த்து விருது பெற்றவர்கள் யாரும் பேசுவது இல்லை. பலர் விருது பெற்றதால் அமைதியானவர்களாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் ஆர்வலர்களும், உணர்வாளர்கள் ஒரு சில மானமுள்ள தமிழறிஞர்கள் மட்டுமே போராடி வருகின்றனர்.
இந்த நிலை கண்டு தமிழ்ச் சங்கத்தைச் சரியாக நடத்துங்கள் என்று கோரி போராடி வரும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரன் அவர்களைக் குண்டர்கள் வைத்துத் தமிழ்ச் சங்கம் மிரட்டியதும், தாக்கியதும் #வன்மையாகக்_கண்டிக்கத்_தக்கது
புதன், 12 பிப்ரவரி, 2020
தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு -ஆணையருக்கு திரு. பராங்குசம் அவர்கள் புகார்
அனுப்புநர் நாள்:12.02.2020
பெ.பராங்குசம் 691
19, இளங்கோ நகர், 3வது குறுக்கு விரிவு,
வெங்கட்ட நகர் அஞ்சல்,
புதுச்சேரி – 605 011.
கைபேசி- 9843224827
பெறுநர்
பொறிஞர் ஞா.சோசப் அதிரியன் ஆண்டோ
தேர்தல் ஆணையர்.
புதுவைத் தமிழ்ச் சங்கம்,
2. தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்ட நகர்,
புதுச்சேரி – 605 011.
அன்புடையீர், வணக்கம்
பெ.பராங்குசம் 691
19, இளங்கோ நகர், 3வது குறுக்கு விரிவு,
வெங்கட்ட நகர் அஞ்சல்,
புதுச்சேரி – 605 011.
கைபேசி- 9843224827
பெறுநர்
பொறிஞர் ஞா.சோசப் அதிரியன் ஆண்டோ
தேர்தல் ஆணையர்.
புதுவைத் தமிழ்ச் சங்கம்,
2. தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்ட நகர்,
புதுச்சேரி – 605 011.
அன்புடையீர், வணக்கம்
புதுவைத் தமிழ்ச் சங்கம் பொதுக்குழுவை 01.02.2020 அன்று கூட்டியது. ஆனால், அதற்கு முன்பாகவே தேர்தல் ஆணையராக தாங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தேர்தல் நெறிமுறைகள், வேட்பாளர் விண்ணப்பப் படிவம் அனைத்தும் முன்பாகவே அச்சடிக்கப்பட்டு விட்டன.
ஆனால் 01.02.2020 அன்று நடந்த பொதுக்குழுவில் தேர்தல் ஆணையராக பொறிஞர் ஞா.சோசப் அதிரியன் ஆண்டோ அவர்கள் நியமனம் செய்வதாக அறிவிகப்பட்டது.
உடனடியாகத் தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் நெறிமுறைகள் அனைத்தும் அஞ்சல் துறையில் சேர்க்கப்பட்டு, 4,5-02-2020 தேதிகளில் உறுப்பினர்களுக்கும் பட்டுவாடா செய்யப்பட்டன. தமிழ்ச் சங்கத்தில் 1035 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் உண்மையில் உறுப்பினர்களா? முறையாகப் பணம் கட்டி இரசீது கொடுக்கப்பட்டுள்ளதா?. எப்போது சேர்ந்தார்கள்? கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? போன்ற விபரங்களைத் தேர்தல் ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எதையுமே தாங்கள் ஆய்வு செய்யவில்லை. தேர்தல் அறிவிப்புக் கடிதத்தில் தேர்தல் ஆணையரின் கையொப்பம் இல்லை.
தேர்தல் ஆணையருக்குத் தெரியாமலேயே தேர்தல் அறிவிப்பு, நெறிமுறைகள் அனைத்தும் புதுவைத் தமிழ்ச் சங்கம் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு வேண்டாத, எனக்கும் என் மனைவி பூங்கொடி பராங்குசம் ஆகிய எங்களுக்கும் அனுப்பவில்லை. இது போன்று எத்தனைப் பேருக்கு அனுப்பவில்லை என்பது தெரியவில்லை.
கடந்த தேர்தலின் போது சங்க உறுப்பினர்கள் 913 பேர் இருந்தனர். இந்தத் தேர்தலில் 1035 பேர் இருப்பதாக வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 122 பேர் கமுக்கமாக - தேர்தலுக்காக - சேர்க்கப்பட்டுள்ளாகள். தமிழ் உணர்வாளர்களையும், தமிழ் அறிஞர்களையும் சேர்ப்பதில்லை. கேட்டால் இப்போது சேர்ப்பதில்லை. “பிறகு வாங்கப் பார்க்கலாம்” என்று கூறி விடுவார்கள். தொடர்ந்து ஆட்சி மன்றக் குழு தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என, தலைவர் விரும்புகிறார். யாரும் அவருடைய பதவிக்கு வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்.
எந்த ஒரு அமைப்பிலும் ஒரு முறை, இரு முறைக்கு மேல் தலைவர் பதவி வகிக்க அனுமதி கிடையாது. ஆனால் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பதவி என்பது எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் என்று அருதிப் பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
தேர்தலில் மற்றவர்கள் போட்டியிடுவதற்குத் தடை செய்ய வேண்டுமென்பதற்காக வேட்பாளர் விண்ணப்பப்படிவம் ஒன்று ரூ.1000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தலைவர் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்து வைத்து இருப்பதால் மற்ற உறுப்பினர்கள் தேர்தலில் நின்றால் வெற்றி பெற மாட்டோம் என்று கருதி, எதற்காக ரூ.1000/- செலுத்தி வேட்பாளர் படிவம் வாங்கி நட்டம் அடைவானேன் என்று சும்மா இருந்து விடுகின்றனர்.
தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் வேட்பாளர் விண்ணபப்படிவம் பெற ரூ.5000/- என்று இருந்தாலும் வாங்கிக் கொள்வார்கள் ஏனெனில் அவர்கள் தான் வெற்றி பெறப் போகிறவார்கள்.
எனவே வேட்பாளர் விண்ணப்பப்படிவம் ரூ.200/- என நிர்ணயம் செய்து இருக்க வேண்டும்.
மேலும் வேட்பாளர் பட்டியல் உறுப்பினர் எண் வரிசையில் தயார் செய்து இருக்க வேண்டும். ஆனால் ‘அ’ கர வரிசையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த உறுப்பினர்கள் எந்தெந்த தேதிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதை மறைக்கவே ‘அ’ கர வரிசையில் தயாரிக்கப்பட்டுள்ளது. (உம்) தமிழ்மாமணி மன்னர் மன்னன் உறுப்பினர் வரிசைப்படி ‘1’ இல் இருக்கிறார், ஆனால் ‘அ’ கர வரிசைப்படி ‘822’ இல் இருக்கிறார். இது ஒரு ஏமாற்று வேலை.
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் நெறி முறைகள் அனைத்தும் தங்களுத் தெரியாது. தாங்கள்தான் அனைத்தும் தயார் செய்து இருக்க வேண்டும். ஆனால் உங்களை மீறி அவர்களாலேயே செயல்படுத்தியுள்ளனர். உங்களை அவர்கள் ஒரு ‘கருவி’ யாகப் பயன்படுத்தி வருகின்றனர். என்பதை மட்டுமல்லாமல் தங்களுக்கு ‘வானளாவிய அதிகாரம்’ உள்ளது என்றும் சென்ற ஆட்சி மன்றக் குழுவிற்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்றும் அவர்கள் சாதாரண உறுப்பினரே என்பதைத் தங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தேர்தல் முடியும் வரை தமிழ்ச் சங்கக் கட்டிடம் தங்கள் பொறுப்பில் இருக்க வேண்டும். யாரையும் தேவையில்லாமல் அனுமதிக்கக்ககூடாது.
எனவே, மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்து, வேறொரு நாளில் சனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் மென்றுக் கேட்டுக் கெள்கிறேன்
இப்படிக்கு,
பெ.பராங்குசம்
வாழ்நாள் உறுப்பினர் எண்:691
புதுவைத் தமிழ்ச் சங்கம்.
சனி, 8 பிப்ரவரி, 2020
சனி, 1 பிப்ரவரி, 2020
தமிழ்ச் சங்கத்தின் பதிவுச் சான்றிதழ்
புதுவைத் தமிழ்ச் சங்கம் அதன் பதிவுச் சன்றிதழை கடந்த 1967 ஆம் ஆண்டு பதிவு செய்து பெற்றுள்ளது. அதன் இணைப்பு கீழே
PDF கோப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பதிவு சான்றிதழ்
PDF கோப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பதிவு சான்றிதழ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொன்விழா மாநாட்டைப் புறக்கணிப்போம்
!doctype>