மெனு புதியது
- முகப்பு
- எங்களைப் பற்றி
- புதுவைத் தமிழ்ச் சங்கம்
- தமிழ்ப் பாதுகாப்புக் குழு
- பத்திரிக்கைச் செய்திகள்
டெச்ட்
!doctype>
இழைவியக்கம்
திங்கள், 15 டிசம்பர், 2014
ஞாயிறு, 30 நவம்பர், 2014
சனி, 29 நவம்பர், 2014
வியாழன், 27 நவம்பர், 2014
வெள்ளி, 14 நவம்பர், 2014
இரா.அழகிரி வெ.முத்து சந்திப்பு
புதுவைத் தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்ய இருப்பதாக அதன் தலைவர் திரு முத்து அவர்கள் தெரிவித்ததாக புதுவைத் தமிழ்பாதுகாப்புக் குழு தலைவர் திரு அழகிரி தெரிவித்தார்.
தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்ன பதில் சொல்வார் என்பதை முன்னமே அறிவோம். காலம் கடத்துவது அவரது முடிவாகும் ஏற்கனவே ஒரு மாதகாலம் ஆன நிலையில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல் மேலும் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் அழகிரி தெரிவித்தார்.
பத்து நாள் என்பதை மேலும் நீட்டித்து, பின்னர் அவர் சொல்ல இருக்கும் பதில் " பொதுக்குழுவில் இப்போது உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது" என கூறுவார் என்றே நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் கடந்த கால அனுபவம் அப்படித்தான் உள்ளது.
எனவே. நாங்கள் சென்ற வாரத்திற்கு முன் எடுத்த முடிவின் படி நகரம் முழுவதும் தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து முதல்கட்டமாக சுவரொட்டி ஒட்டுவது என முடிவெடுத்தபடி எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை நடைபெறும்.
சென்ற வாரம் "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" அமைக்கப்பட்ட பின்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முத்து அவர்களை சந்தித்து விருப்பமுள்ளவர்களை தமிழ்ச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
எனவே, இன்று காலை "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" வின் தலைவர் திரு. இரா.அழகிரி அவர்களிடம் தமிழ்ச் சங்கத்தின் தலைவரை இக்குழு சந்திப்பதற்கான நேரத்தை தொலை பேசி மூலம் பேசி உறுதிப்படுத்தும்படி கேட்டிருந்தேன்.
உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழுவில் முடிவெடுத்து தெரிவிப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதுவரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படின் இக்குழு சந்திப்பதா அல்லது மேல் நடவடிக்கை மேற்கொள்வதா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும்
ஞாயிறு, 12 அக்டோபர், 2014
தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்க கோரி சுவரொட்டி
புதுவைத் தமிழ்ச் சங்கத்தை கண்டித்து புதுவையில் சில இடங்களில் காணப்படும் சுவரொட்டி இது. இரண்டு மாத காலம் அவர்களின் பதிலுக்கு காத்திருந்து பின்னர் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். பிரச்சினைகள் தொடங்கிய பின் நாங்களாக முன்வந்து பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் அதை கருத்தில் கொள்ளாமல் அலட்சியம் செய்வது நல்லதல்ல.
திங்கள், 22 செப்டம்பர், 2014
பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் புதுவைத் தமிழ்ச்சங்கம் நீக்கம்
புதுச்சேரியில் கடந்த 2014 ஆண்டு செப்டம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் 13வது இணைய மாநாட்டை புதுவைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்துவதாக முடிவு செய்திருந்தது.
ஆனால், புதுச்சேரித் தமிழ்ச் சங்கம் ஊழல் முறைகேடுகளை செய்து வருவதால் புதுவைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 13வது தமிழ் இணைய மாநாட்டை நடத்தக் கூடாது நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த மாநாட்டுக் குழுவில் தமிழ்ச் சங்கத்தை "உத்தமம்" நிறுவனம் விலக்கிவிட்டு அந்த மாநாட்டை நடத்தியது.
மாநாட்டு அறிவிப்பு இணைப்பு கீழே உள்ளது.
மாநாட்டில் தமிழ்ச் சங்கத்தை நீக்கி தொடக்கவிழா நிறைவு விழா நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.
----------------------------------------
பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு¸ புதுச்சேரி, இந்தியா
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும், புதுவைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து புதுச்சேரியில் நடத்தும் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு
பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு¸ புதுச்சேரி, இந்தியா
உத்தமம் நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ம் நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துஉலகெங்கிலும் உள்ள தமிழர்களை
இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ளத் தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும்.
இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ளத் தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும்.
தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துத் தமிழ்க் கவிஞர் கனியன் பூங்குன்றனார் தன்னுடைய அழகான புறநானூறு பாடலில் இயம்பியிருப்பது போல “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்னும் வாக்கைச் சிறப்புற நடைமுறைப்படுத்தி வருவதில் உத்தமம் நிறுவனம் பெருமை கொள்கிறது.
இம்மாநாடுகள் “நீர் வழிப் படூம் புணைபோல முறைவழிப் படூம் ஆருயிர்” என்னும் நம் கவிஞர் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க கணினி வழி தமிழர்களின் ஆருயிரை முறைவழிப்படுத்தி வருவது பெருமைக்குரிய ஒன்றே! இவ்வகையில் உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும்! நம் மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் கணினி குறித்துத் தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைவது எண்ணித் தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்.
இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன் கல்வி நிறுவனங்கள், அரசு சார், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும் உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய நாட்கள் ஆகியன குறித்தான செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் வெளியிடுவோம். மேலதிக செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.
வாசு அரங்கநாதன், தலைவர், உத்தமம் நிறுவனம்,தமிழ்ப் பேராசிரியர்¸ பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம், அமெரிக்கா
புதுச்சேரியில் செப்டம்பரில் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு
புதுச்சேரியில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு!
ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014
"பாண்டி டைம்சு" செய்தி
"பாண்டி டைம்சு" என்ற செய்தி ஏட்டில் புதுவைத் தமிழ்ச் சங்கம் பற்றிய செய்தி எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழுவில் உள்ள நபர்களை வைத்தே போராட்டம் வலுவாக நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளதாக நான் கருதுகிறேன். ஆகவே, தமிழ்ச்சங்கம் விழித்துக் கொண்டால் நல்லது என்றும் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சங்கம் விழித்துக் கொள்ளுமா? பார்க்கலாம்.
சனி, 23 ஆகஸ்ட், 2014
புதன், 20 ஆகஸ்ட், 2014
சனி, 16 ஆகஸ்ட், 2014
தமிழ்ப் பாதுகாப்புக் குழு தொடக்கம்
தமிழ் வளர்த்தெடுத்து என்றும் பெருமை கொண்டது புதுவை. பாரதிதாசன்
உறுப்பினராக இருந்த புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கோருபவர்களைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகளைச் சேர்த்துக் கொள்வதில்லை. தமிழ் ஆர்வலர்களையும் அறிஞர்களையும் உறுப்பினர்களாகச்
சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்ற 16-08-2014 அன்று "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக்
குழு" தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பு இவ்வமைப்பின்
மூலம் தமிழ்ச் சங்க நிர்வாகிகளை பலமுறை தொடர்பு கொண்டு உறுப்பினர்களாக
விரும்புகிறவர்களை தமிழ்ச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை
நேரிலும் எழுத்து மூலமும் கேட்டுக் கொண்டும் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் இந்த
கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். பொதுக்குழுவை
அடுத்த ஆண்டு (2014) பிப்ரவரி மாதம் கூட்டி உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது பற்றி
முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் 55 பேர்களைச் சேர்க்கும் போது பொதுக் குழுவை கூட்டி
உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. உறுப்பினர்கள் சேர்க்கை செய்வதற்கு
பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், தமிழ்ச்சங்கத்தின் விதிமுறையில்
இல்லை. எனவே, புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள்
சொல்லும் பொய்யான காரணம் தான் பிப்ரவரி மாதம் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுப்பதாகத் தெரிவித்திருப்பதாகும். போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால்
அதனை தொடர்ந்து திசைத் திருப்பும் வகையிலும். காலம் கடத்தும் வகையிலும்
உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படும் என இப்போது தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் சென்ற முறை இவர்கள் பொறுப்பில் இருந்த போதிலிருந்தே அவர்கள் இப்படித்தான் தெரிவித்து
வருகிறார்கள்.
எனவே,
இந்தப் பொய்யான காரணங்களை
நம்பிக் கொண்டு பொதுக்குழு கூட்டும் வரை காத்திருந்து அவர்கள் அடுத்து சொல்ல
இருக்கும் வேறு காரணங்களுக்காகக்
காத்திருக்கத் தேவையில்லை என்று
முடிவெடுத்த "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" புதுவையில் உள்ள
பல்வேறு அமைப்புகளை
அழைத்து ஒரு கண்டனக் கூட்டம் நடத்துவது
எனத் தீர்மானித்துள்ளது.
சென்ற
முறை 2010 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17
ஆம் நாள் இச்சங்கத்தின் ஆட்சி மன்றக் குழுவிற்கு தேர்தல் நடந்தது. ஆட்சி மன்றக்
குழுவின் பதவி காலம் மூன்றாண்டுகளாகும். அதாவது 17.10.2013 ஆம்
நாளோடு பொறுப்பு முடிந்து
தேர்தல் வைக்க வேண்டும். ஆனால், தங்கள்
பதவிக்காலம் முடிந்த பின்பு முன் தேதியிட்டு மொத்தம் வாழ்
நாள் உறுப்பினர்கள் 155 பேரில் மேற்குறிப்பிட்ட 55 பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டு கடந்த 21-03-2014 அன்று தேர்தல்
நடத்தப்பட்டது.
தமிழ்ச்
சங்க விதிப்படி ஆண்டுதோறும் மே/ஜூன் திங்களில் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும்.
கடந்த முறை மூன்றாண்டு பொறுப்பில் இருந்தவர்கள் ஒரே ஒரு முறை கூட பொதுக் குழுவைக்
கூட்டவில்லை!
ஆண்டு தோறும் சங்கத்தின் வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கை செய்து சங்க உறுப்பினர்களுக்கு சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்கிறது சங்க விதி .ஆனால் ஒரு முறை கூட சங்க கணக்குகள் உறுப்பினர்களுக்கு காட்டப்படவில்லை!. பல உறுப்பினர்கள் கடிதம் அளித்தும் எதையும் செவிசாய்க்காமல் மதிப்பு அளிக்காமல் தாங்கள் எப்படியாவது பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் முறையற்ற செயல்களில் ஈடுபடுகிற்றனர்.
உறுப்பினர்கள் சேர்க்க வேண்டுமானால்
பொதுக்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்று தமிழ்ச் சங்க பதிவு விதி ஏதும்
சொல்லவில்லை. சாதி இன வேறு பாடு இன்றி யார் வேண்டுமனாலும் உறுப்பினராக சேரலாம் என
தமிழ்ச் சங்கம் விதி எண்’ 3. அ பிரிவு (Eligibility: All persons irrespective of their caste cread or
register or nationality are eligible for membership.) என்று
உறுப்பினர் சேர்க்கைக்கான விதி சொல்கிறது. அதே விதியின் அடிப்படையில் தான் தமது
பதவிக்காலம் முடிந்த பின்பு 55 பேரை முறைகேடாக தமிழ்ச் சங்க உறுப்பினர்களாகச்
தமக்கு வேண்டியவர்களைச் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களாகச் சேர்த்து
தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அப்போது உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்ட 55
பேருக்கும் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரி தமிழ்ச் சங்கத்தின் தலைவரே
உறுப்பினர்க் கட்டணத்தை செலுத்தி உள்ளதாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள்
தெரிவித்தார்கள்.
இது
போல பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால்
சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடத்திய “உலகத் தகவல் தொழில்
நுட்ப மன்றம் (உத்தமம்)” புதுவைத் தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று மாநாட்டுக் குழுவிலிருந்து தமிழ்ச் சங்கத்தை
விலக்கிவிட்டு மாநாட்டை புதுவையில் நடத்தியது.
தமிழ்ச்
சங்கம் முறைகேடாக செயல்பாடுகளால்
நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை முறைகேடுகள் உள்ள
தமிழ்ச் சங்கத்தை தமிழர்கள் பாதுகாக்க வேண்டுமெனில் அனைவரும் ஒன்றினைந்து போராடி
வெற்றி பெறச் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.
புதுச்சேரி
தமிழ் பாதுகாப்புக்குழு
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
உறுப்பினர் சேர்க்கைக்கான குழு ஆலோசனை
"புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" சுவரொட்டி ஒட்டுவதற்கு முன்பாக அதனைத் திட்டமிட்டுக்
காலம் கடத்தும் நோக்கில் ஒரு வார
காலத்தில் முடிவைச் சொல்கிறோம் என்று மூன்று முறை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினர்.
ஆனால், நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டிமுடிவு
செய்வது என முடிவெடுக்க இருப்பதாக ஒரு
காரணத்தைத் தமிழ்ச் சங்க
நிர்வாகிகள் தெரிவித்தாகத்
தெரிகிறது.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் 55 பேர்களைச் சேர்க்கும் போது பொதுக் குழுவை கூட்டியா சேர்த்துக்
கொண்டார்கள். இல்லையே, எனவே, சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் சொல்லும் பொய்யான
காரணம் தான் பொதுக் குழுவைக் கூட்டி
முடிவெடுப்பதாகத் தெரிவித்திருப்பது.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
புதுவைத் தமிழ்ச் சங்கத்தை
கண்டித்து புதுவையில் சில இடங்களில் காணப்படும் சுவரொட்டி இது.
இரண்டு மாத காலம் அவர்களின் பதிலுக்கு காத்திருந்து பின்னர் இந்த சுவரொட்டி
ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக அடுத்த கட்ட
நடவடிக்கைகள் தொடரும். பிரச்சினைகள் தொடங்கிய பின் நாங்களாக முன்வந்து
பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் அதை கருத்தில் கொள்ளாமல் அலட்சியம்
செய்வது நல்லதல்ல.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொன்விழா மாநாட்டைப் புறக்கணிப்போம்
!doctype>