இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

உறுப்பினர்களுக்கே அழைப்பு இல்லாமல் மாநாடு நடத்திய தமிழ்ச் சங்கம்


புதுவைத் தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களுக்கே அழைப்பு அனுப்பாமல் தனது பொன் விழா மாநாட்டை நடத்தியுள்ளது.

இதனால் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் கள் தமிழ்ச் சங்க நிர்வாகி கள் மீது மிகுந்த சினத்தில், வருத்தத்தில் இருக்கிறார்கள்.

   இது போன்ற புலம்பல்கள் தான் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் பலர் சொல்லும் தகவல். வரவு செலவுக் கூட்டத்திற்காவது அழைப்பு வருமா? என்று முருகன் என்பவர் இக்குழுவில் கேட்டுள்ளார் வரவு செலவுக் கணக்கே கடந்து 9 ஆண்டுகளுக்கு மேலாகக் காட்டவில்லை. இந்த ஆண்டு மட்டும் எப்படி அவருக்கு அழைப்பு வரும்?. வரப்போவதில்லை என்பதே உண்மை.

வாழ்நாள் உறுப்பினர்களின் பணத்தில் அவர்களுக்கே சொல்லாமல் மாநாடு நடத்திவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் போது, வெளிநாட்டுத் தமிழர்களின் காசில் உல்லாச ஊர் சுற்றலுக்குத் தான் இந்த மாநாடே தவிர தமிழை வளர்ப்பது என்பதெல்லாம் மிகப்பெரிய பொய்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக