இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

உறுப்பினர்களுக்கே அழைப்பு இல்லாமல் மாநாடு நடத்திய தமிழ்ச் சங்கம்


புதுவைத் தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களுக்கே அழைப்பு அனுப்பாமல் தனது பொன் விழா மாநாட்டை நடத்தியுள்ளது.

இதனால் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் கள் தமிழ்ச் சங்க நிர்வாகி கள் மீது மிகுந்த சினத்தில், வருத்தத்தில் இருக்கிறார்கள்.

   இது போன்ற புலம்பல்கள் தான் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் பலர் சொல்லும் தகவல். வரவு செலவுக் கூட்டத்திற்காவது அழைப்பு வருமா? என்று முருகன் என்பவர் இக்குழுவில் கேட்டுள்ளார் வரவு செலவுக் கணக்கே கடந்து 9 ஆண்டுகளுக்கு மேலாகக் காட்டவில்லை. இந்த ஆண்டு மட்டும் எப்படி அவருக்கு அழைப்பு வரும்?. வரப்போவதில்லை என்பதே உண்மை.

வாழ்நாள் உறுப்பினர்களின் பணத்தில் அவர்களுக்கே சொல்லாமல் மாநாடு நடத்திவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் போது, வெளிநாட்டுத் தமிழர்களின் காசில் உல்லாச ஊர் சுற்றலுக்குத் தான் இந்த மாநாடே தவிர தமிழை வளர்ப்பது என்பதெல்லாம் மிகப்பெரிய பொய்....

வியாழன், 14 பிப்ரவரி, 2019

வெளிநாட்டுத் தமிழர்கள் புதுச்சேரி மாநாட்டை புறக்கணிக்க கோரிக்கை

அன்புடையீர் வணக்கம்,

தாங்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டுக்கு வருவதாக அறிந்தோம். எனவே, புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்களாகிய நாங்கள் தமிழ்ச் சங்கம் பற்றி தங்கள் கவனத்திற்கு வராத சில நிகழ்ச்சிகளையும்  தகவல்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.



புதுச்சேரி தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களிடம் வாழ்நாள் கட்டணமாக ரூ.1000/- என 800 புதிய உறுப்பினர்களிடம் வாங்கிய "ரூபாய் எட்டு இலட்சம்" மற்றும் சென்ற ஆண்டு இருப்பு எனவும் தமிழ்ச் சங்கக் கட்டிடம் வாடகை எனப் பதிமூன்று இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தைப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் பொதுக் குழுவைக் கூட்டாமல் பொதுக்குழு ஒப்புதல் பெறாமலும் ஒரு பெரிய மாநாட்டை நடத்துவதாகத் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.

"எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமல் அவர்கள் தம் சுய விளம்பரத்திற்காக மாநாடு நடத்துவது ஒரு மாபெரும் மோசடி என்கிறார்கள் தமிழ்ச் சங்க  வாழ்நாள் உறுப்பினர்கள்".

உள்ளூரில் அம்பலப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டுத் தமிழர்களிடம் ஆதரவைத் திரட்டவும் வெளிநாட்டுத் தமிழர்களை அழைத்து இந்த மாநாட்டை நடத்துகிறது தமிழ்ச்சங்கம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு (உத்தமம்) எனும் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் (INFITT) புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் முறை கேடினை அறிந்து அவர்களை நீக்கிவிட்டு உலகத் தமிழிணைய மாநாட்டை புதுவையில் நடத்தியதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்துப் புதுவை நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்குத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மோசடியாகத் தேர்தல் வைத்து வெற்றிப் பெற்றது. இரண்டாவது வழக்கு பொதுக்குழு கூட்டி இந்த மாநாடு நடத்த ஒப்புதல் பெறாதது, நிதி மோசடி, (வழக்கு எண் :2601/2018) உள்ளிட்டவைகளை அடங்கிய இந்த மாநாட்டைத் தடை செய்யக் கோரியதுமாகும்.

உறுப்பினர்களுக்குக் கூட மாநாட்டு விழாவிற்கு அழைப்பு அனுப்பவில்லை, மாறாக வெளிநாட்டு பங்கேற்பாளர்களுக்கு மட்டும் அழைப்ப்பு அனுப்பிப் பல்வேறு மோசடி செய்து இந்த மாநாடு நடக்கிறார்கள். இதனை மறைக்கவே பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒன்றிணைந்த மாநாடு போல் அரசியல் தலைவர்களின் அரங்கமாக இந்த மாநாடு நடைபெறுகிறது. எங்கே தமிழ் வாழப் போகிறது இவர்களிடம்?

தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் உள்ளக்குமுரலை வெளிநாட்டுத் தமிழறிஞர்களிடம் சொல்ல எங்களுக்கு வழி இல்லை. ஆகவே இந்த வலைப் பதிவுகள் மூலம் தங்களுக்குத் தெரிவிக்க விழைகிறோம். ஏதோ காழ்ப்புணர்ச்சியில் எழுதுகிறார்களோ என்று நீங்கள் கருதாமல் இருக்க எல்லாச் செய்திகளுக்கும் முடிந்தவரை தொடர்புடைய ஆவணகளை இணைத்துள்ளோம்.


https://puduvaithamizhpathukappu.blogspot.com/

இதனால், புதுவை மற்றும் தமிழகத் தமிழர்களை இந்த மாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி வருகிறோம். தாங்கள் வருகைபுரிந்தால் புதுவைத் தமிழ்ச் சங்கத்தினர் அவர்கள் செய்த மோசடிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவார்கள் என்ற செய்தியை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புலவர் பட்டம் பெறாமையால் பாரதிதாசனைக் கூட உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளாத புதுவை தமிழ்ச் சங்கம் இன்று ஓட்டுக்காகக் குப்பைக் கூட்டுபவர், (பார்க்க வலைப்பதிவு) கேள்வி கேட்காத எளிய மக்கள் தமிழுக்காகக் கடந்த காலங்களின் எவ்வித பணியும் செய்யாதவர்களை அரசியல் கட்சி போல வாக்குக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.

எனவே, அன்பு கூர்ந்து இது போன்ற போலித் தமிழ்ச் சங்கத்துக்கு இனிவரும் காலங்களில் ஆதரவு தரவேண்டாம் எனத் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள்
புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள்
தொடர்புக்கு: +91 9443105825

சனி, 9 பிப்ரவரி, 2019

முருகேசன் பேட்டி புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டுக்கு எதிர்ப்பு

புதுச்சேரி தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களிடம் வாழ்நாள் கட்டணமாக ரூ 1000 என 800 புதிய உறுப்பினர்களிடம் வாங்கிய "ரூபாய் எட்டு இலட்சம்" மற்றும் சென்ற ஆண்டு இருப்பு எனவும் தமிழ்ச் சங்க கட்டிடம் வாடகை என பதிமூன்று இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு அந்த பணத்தை பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் பொதுக் குழுவைக் கூட்டாமல் பொதுக்குழு ஒப்புதல் பெறாமல்  ஒரு பெரிய மாநாட்டை நடத்துவதாக அறிவித்துள்ளது புதுவைத் தமிழ்ச் சங்கம்.

"எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு எங்கள் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமல் அவர்களின் சொந்த விளம்பரத்திற்காக மாநாடு நடத்துவது ஒரு மாபெரும் மோசடி என்கிறார்கள் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள்" 

இப்படி கேள்வி கேட்பவர்களில் ஒருவர்தான் ப.முருகேசன் இவர் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் நடத்தும் பொன்விழா மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார். 


தமிழ்சங்க பொன் விழா மாநாட்டை புறக்கணிக்கக் கோரிக்கை

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சியை தமிழர்கள் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

புதுவைத் தமிழ்ச் சங்கம் "பிரைவேட் லிமிட்டெட்"  உறுப்பினர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பொன் விழா நடத்த ஏற்பாடு செயதுள்ளதாக அறிவித்துள்ளது.

பொதுக்குழுவைக் கூட்டாமல் இருப்பது வரவு செலவுக் கணக்கை காட்டாமல் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற போலியாக உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்காக உறுப்பினர்கள் கட்டணத்தை தாமே செலுத்துவதாக கூறி உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டனர். அந்த தொகை செலுத்தப்பட்டதா தெரியவில்லை.

முகநூல் பதிவில்

ஒரு விழா வைத்தால் எல்லா கணக்கையும் சரி செய்துவிடலாம். எல்லாவற்றையும் செலவுக் கணக்கில் காட்டவே விழா ஏற்பாடு நடக்கிறது.

இதை இல்லை என்று மறுத்தால் முதலில்  பொதுக் குழு கூட்டி முறைப்படி ஒப்புதல் பெற வேண்டியது தானே!!

இது போன்ற மோசடிகளை மூடி மறைக்கவே அரசில் தலைவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்.

எனவே, இந்த விழாவை அனைவரும் புறக்கணிப்பு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

#புதுவைத்தமிழ்ச்சங்கம்


செகநாதன் உரை புதுவைத் தமிழ்ச் சங்க முறைகேடுகள்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் நிலச் சான்றிதழை தொலைந்து போனது என்று சொல்கிறார்கள். அதனை வாங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த நிலத்தை அடமான வைத்துவிட்டார்களா? எனக் கேட்கும் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலர் கோ.அ.செகநாதன் அவர்கள்


சுகுமாரன்- புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஏன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலரும் மனித உரிமை செயல் பாட்டாளரான கோ. சுகுமாரன்- புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஏன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் என்பதை விரிவாக பேசினார்.

தமிழ்ச் சங்கத்தை முன்னேற்றுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்காக எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருட்டிணன் அவர்கள் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தின் மேற் பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக  முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ஒதுக்கி இருந்தார். ஆனால், தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அந்த பணத்தை பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த தொகை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது.

மிழ்ச் சங்க கட்டிட ஆவணம் தொலைந்து விட்டது என்று சொல்கிறார்கள். பல ஆண்டுகளாக புதிய ஆவணத்தை ஏன் இவர்கள் விண்ணப்பித்து பெறவில்லை என்பது  மர்மமாக இருக்கிறது. .. உள்ளிட்ட முறைகேடுகளை பட்டியலிட்டார்.....


சீனு தமிழ்மணி புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை கண்டித்து உரை

புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக பல ஆண்டுகளாக போராட வேண்டியிருந்தது. ஆனால், எங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் "குப்பை கூட்டும் பெண்ணை" கூட வாக்கு போடுவதற்காக இப்போது சேர்த்திருக்கிறார்கள்.

முத்து அவர்களின் கல்லூரியில் படிக்கும் பெண்கள் பலரை  புதுச்சேரியில் போலி முகவரி போட்டு  வாக்கு போடுவதற்காக சேர்த்து தமிழ்ச் சங்கத்   தேர்தலில் வெற்றி பெற்றார்கள் இப்போதைய நிர்வாகிகள்.

புலவர் பட்டம் பெறவில்லை என்பதற்காக புரட்சிக்கவி பாரதிதாசனைக் கூட உறுப்பினராக்க மறுத்தது  அன்றைய புதுவைத் தமிழ்ச் சங்கம் அன்று ஆனால் இன்றைய நிலைமையைப் பாருங்கள்.  அதன் கேட்டினைப் பாருங்கள்...!


புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் -முத்து

பார்வேர்டு பிளாக் கட்சியின் முத்து அவர்கள்  பேசுகையில் புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்களா என்று பார்த்து உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. குறிப்பாக சில குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. அது ஒரு சாதிச்சங்கமா தமிழ்ச் சங்கமா?

புதுவைத் தமிழ்ச் சங்க முறைகேடு - ம.இளங்கோ

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தேர்தல் எப்படி நடந்தது. அதில் எந்தவடிவில் முறைகேடாக நடந்து கொண்டனர் என்பதை சுருக்கமாக பேசுகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கையை திடீரென நிறுத்தினர். எல்லா வேட்பாளர்களையும் இரவில் வெளியேற்றுகிறார்கள். அவர்கள் சாப்பிட வேண்டுமாம். 

நள்ளிரவில் ஏல்லோரையும்  வெளியேற்றி விட்டு வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்தார்கள்.  வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என எதிர் அணியினர் புறக்கணித்து  வெளியேறிய பின் தாங்களாகவே வாக்கை எண்ணி வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டனர் தற்போதைய தமிழ்ச் சங்க நிர்வாகிகள்.

என்று தேர்தலில்  போது பார்வையாளராக பங்கேற்ற  தந்தைப் பெரியார் திராவிடர்க் கழகத்தின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் ம. இளங்கோ  தன் கருத்தை பதிவு செய்தார்.



லோகு அய்யப்பன் - புதுவைத் தமிழ்ச் சங்கத்தை கண்டித்து உரை


கடந்த  2013 ஆம் ஆண்டு தமிழ்ச் சங்கத் தேர்தலில் முறைகேட்டை கண்டித்து  நீதி மன்றம் சென்ற போது நீதிபதிகள் எப்படி நடந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டு நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன. ஏன் நீதிமன்றங்கள்  இப்படி செயல்படுகின்றன என விரிவாகப் பேசினார் பெரியார் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பன் அவர்கள்.



தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து - ப.முருகேசன்

சாகித்திய அகாதமி உறுப்பினரும், புதுவை வரலாற்றை தேடித்தந்த புதுவை  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களைக் கூட உறுப்பினராக சேர்த்துக் கொள்ள மறுத்த தமிழ்ச் சங்கம் அது.  இவர்கள் அறிவாளிகளை மறுத்து செயல்படுகிறார்கள்.

என்னையும்  உறுப்பினராக சேர்க்கவில்லை, என தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன்  வருத்ததுடன்  பகிர்ந்து கொண்ட தகவலை  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ப.முருகேசன் அவர்கள்.

2013 ஆம் ஆண்டு தமிழறிஞர்கள் இல்லாத தமிழ்ச் சங்கம் என்று நாங்கள் குறிப்பிட்டு போராட்ட முன்னெடுப்பு செய்த போது அவரை உறுப்பினராக்கினர்.

புதுவைத் தமிழ்ச் சங்க முறைகேடுகள் - பிராங்கிளின்

வியாழன், 7 பிப்ரவரி, 2019

புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு புதுவை அஞ்சலகம் எதிரில் நடந்தது.
இதில் எங்கள் பதிவேட்டில் 85 பேர்கள் கையொப்பம் இட்டிருந்தனர். பதிவு செய்யாமல் 12 பேர் என மொத்தமாக 97 பேர்கள் கலந்து கொண்டனர்.
நீண்ட நேரம் நடைபெற்றதால் வருவதும் போவதுமாக இருந்தனர் அமர்வதற்கு நாற்காலிகள் ஏற்பாடு செய்யவில்லை என்பதால் பரவலாக நின்றிருந்தனர்.
இது ஒரு அடையாள ஆர்ப்பாட்டமாகும், என்பதால் பெருமளவு உறுப்பினர்களை அழைக்கவில்லை. ஆனால் நிகழ்வு குறித்து அஞ்சலில் சிலருக்குத் தெரிவித்து இருந்தோம். பலருக்கு போலி முகவரி கொடுத்து உறுப்பினராக்கப்பட்டதால் பல கடிதங்கள் எங்கள் முகவரிக்கே திரும்பி வந்துள்ளது.
தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் உள்ளிட்ட நிகழ்வுகளை விரைவில் நடத்த இருக்கிறோம். அதில் பகுதிவாரியாக இணைத்து செயல்பட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
வருகை தந்த அனைவருக்கும் புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுவைத்  தமிழ்ச் சங்கம்  பிப்ரவரி 2019 இல் பொன்விழா மாநாடு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சிறிய நிகழ்ச்சியை தாங்களே முடிவு செய்து நடத்திவருகின்றனர். ஆனால், பன்னாட்டு அளவில் சில இலட்சங்களை செலவு செய்து நடத்த இருப்பதாக அறிவித்துள்ள தமிழ்ச் சங்கம் பொதுக்குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இப்படி கமுக்கமாக உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமல் பொன்விழா ஏற்பாடு செய்து நடத்துவது என்பது ஏற்கனவே செய்த நிதிமுறைகேடுகளை மூடி மறைப்பதற்காகவே செய்யப்படுவதாக தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர்.

இது போன்ற முறைகேடுகளை தமிழ்ச் சங்கம் தொடர்ந்து செய்துவருவது  மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

இதனை கண்டித்து புதுச்சேரி அஞ்சலகம் எதிரில்  பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழறிஞர்கள் ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்க!!

தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடித நகல் கீழே