புதுச்சேரி முதல்வர் அவர்களிடம் கடந்த 31-01-2017 அன்று தமிழ்ச் சங்க முறைகேடுகள் பற்றிய புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த புகாரை ஏற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள இயலுமா என சட்டத்துறைக்கு அனுப்பி கேட்பதாக தெரிவித்தார்.
......................
தமிழ்ச் சங்கம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினரின் மூலமாக அரசு நிதி வழங்கி இருப்பதால், அரசு தமிழ்ச் சங்கத்தினை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. அல்லது அதனை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் உள்ளது. அதனை இந்த அரசு செய்து தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மாண்புமிகு புதுச்சேரி முதல்வர்
அவர்களுக்கு புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு அளிக்கும் கோரிக்கை மனு:
ஐயா,
புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் திரு முத்து அவர்கள் 2007
ஆம் ஆண்டுகள் பொருளாளராகவும், அதன்பின் ஆறு
ஆண்டுகள் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவரது காலங்களில் முறையாக
ஆண்டு தோறும் மே/ஜுன் மாதங்களில் கூட்ட
வேண்டிய பொதுக்குழு ஒருமுறைகூட கூட்டப்படவில்லை. ஆறு
ஆண்டுகளில் ஒருமுறைகூட செலவுக் கணக்குகளை காட்டவில்லை. நிதி
முறையீடுகளுக்கு உரிய பதில் இல்லை.
தொடர்ந்து தானே தலைவராக இருக்கும் நோக்கில் சங்கத்தில்
தனக்கு வேண்டியவர்களை கமுக்கமாக உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். தேர்தலில் அவரே
போட்டியிட வேண்டுமென்று ஆதரவாளர்கள்களைக் கூட்டி சிறப்பு பொதுக்குழுவில ஒப்புதல் பெற்றுள்ளார். இந்நிலையில் சங்கத்தின்
உறுப்பினர்கள் முன்னாள் நீதியரசர் சேது. முருகபூபதியைக்
கொண்டு கடந்த சனவரி 7 ஆம் தேதி கூட்டி வரும் பிப்ரவரி 12
ஆம் தேதி தேர்தலை அறிவித்துள்ளார்கள்.
தேர்தல் தேதியில் பல குறைபாடுகள் உள்ளன. வாக்களர்
பட்டியலை உறுப்பினர்கள் பார்வையிட வாய்ப்பே வழங்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில்
இறந்தவர்கள் பெயர்கள் உள்ளது. ஒருவர்
பெயரே இரண்டு இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. முகவரியே
குறிப்பிடாமலும் பெயர்கள் வாக்காளர் பட்டியலில்
உள்ளது.
முத்து அவர்கள் தமக்கு ஆதரவாக புதிதாக சேர்த்த
உறுப்பினர்களை பிறர் அறிந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கில் உறுப்பினர்கள் சேர்க்கை வரிசை எண்ணை
குறிப்பிடாமல் அகர வரிசையில் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.வாக்களர் உறுப்பினர்
பட்டியலில் புகைப்படம் சேர்க்கப்படவில்லை.
இதனால் தேர்தலில் கள்ள வாக்கு பதிவு
செய்ய வாய்ப்புள்ளது.
தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையர் வெளியிடவில்லை.
முறைகேடாக தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு தேர்தலை அறிவித்துள்ளது. இதில் தேர்தல்
நெறிமுறைகளில் உள்ள தேதிக்கும், தேர்தல் அட்ட வணையில் உள்ள
தேதிக்கும் முரண்பாடுகள் உள்ளன.
தேர்தல் விதிமுறைகளின் படி வேட்பாளரின் பெயர் மற்றும் தலைப்பெழுத்தும்
தமிழில் எழுத வேண்டும் என்ற விதி முறை உள்ளது. ஆனால், அவ்வாறு போட இயலாது என்று மறுத்த திரு
முத்து அவர்களின் வேட்பு மனு
தொடர்ச்சி --2
-2-
தள்ளுபடி செய்யப்பட
வேண்டிய நிலையில் அது முறைகேடாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது போல் தேர்தல்
ஆணையர் ஒருதலைப் பட்சமாகசெயல்படுவதால், இந்த தேர்தல்
நியாயமாக நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கருதுகிறோம்.
இவ்வகையான செயலால் அப்பாவி தமிழ் அறிஞர்கள்
உறுப்பினர்கள் பலர் பாதிக்கப்படுவதால், ஒருவகையான பதட்டம்
நிலவுகிறது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை
உருவாகும் நிலையும் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
எனவே, இந்த விசயத்தில் அரசே ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற
நீதிபதி ஒருவரை நியமித்து சரியான வாக்காளர் பட்டியல் வெளியிட்டு நியாயமான முறையில்
தேர்தலை நடத்தித்தர ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
இரா. அழகிரி