இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 12 மார்ச், 2019

தமிழ்சங்கம் மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றாத வாக்குறுதிகள்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக முத்து தேர்வு செய்த போது வெளிவந்த செய்தி இது.

இந்த செய்தியில் முத்து அவர்கள் குறிப்பிட்ட மூன்று செய்திகளை நாம் நினைவு கூற வேண்டியுள்ளது. 

  • ஒரு அணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெறுவது சங்க வரலாற்றில் இதுவே முதல் முறை. :     
  • அவர் சொல்லும் செய்தி என்னவென்றால் இதுவரை இல்லாத அளவு தேர்தல் மிக மோசமான வடிவில் நடந்தது என்பது தான் அது. அரசியல் கட்சி போல பணம் "பிரியாணி உணவு" வாகனங்களில் அழைத்து வந்து  வாக்களிக்க வைத்தது. வெளியூரிலிருந்து அழைத்து வந்து மண்டபத்தில் தங்க வைத்து வாக்களிக்க வைத்தது என்ற பல்வேறு முறை கேடுகளும் தான்  இந்த முறை அவர்கள் அணி மட்டுமே வெற்று பெறக் காரணமாக இருந்தது. 

  • சங்கத்தில் மேல்மாடி கட்டவும், தொலைபேசி அலைபேசி கணினி வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.      பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருட்டிணன் தமிழ்ச் சங்க மேல்மாடி கட்டுவதற்கு ஒதுக்கிய 36 இலட்சம் நிதியை தன் சோம்பேரித் தனத்தினாலேயே அந்த நிதியை பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களைப் போன்றோர் நிர்வாகத்தில் இருக்கும் வரை எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. தேர்தல் நேரத்தில் சொன்ன எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை
  • சங்கத்தின் கணக்கில் இருந்து இதுவரை நான் நிதியை எடுத்ததே இல்லை. : சங்கத்தின் நிதியையும் தன் சொந்த நிதி என்று இவர் கருதுவதால் அது சங்கத்தின் நிதி என்று அவர் ஒருபோதும் கருதியதே இல்லை. ஏனெனில் சங்கத்தில் வந்த வருமானம் எதையும் இவர் வங்கிக் கணக்கில் செலுத்துவதே இல்லை. பொருளாளர் என்பவரை ஒரு பெயருக்காகவே வைத்துள்ளனர். 
  • கடந்த 2013-2017 காலகட்டத்தில் திரு தி.கோவிந்தராசு அவர்கள் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளராக இருந்தார். அவர் பொருளாளராக இருந்தவரை அவரிடம் தமிழ்ச் சங்க நிதி தொடர்பான எந்த கணக்கையும் அவரிடம் ஒப்படைக்கவில்லை.  இதனைக் கண்டித்து அவர் பணி விலகுவதாகவும் அறிவித்தார். எதற்கும் அஞ்சாத முத்து எந்தக் கணக்கையும் அவரிடம் ஒப்படைத்ததில்லை. 

  • 2010 முதல் 2013 ஆண்டு நிறைவடைந்த பொருளாளரிடமிருந்து கணக்கை 2017-ஆண்டு தொடக்கத்தில் தேர்வு செய்த பொருளாளருக்கு கணக்கு மாற்றியதாக தகவல். அப்படியானால் 2013 ஆம் ஆண்டுமுதல் 2017 ஆண்டு தொடக்கம் முதல் பொருளாளரிடம் கணக்கு ஒப்படைக்கவில்லை என்பது தான் உண்மை.
  • வங்கியிலும் பணம் செலுத்தவில்லை. "ஆம் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் பணம், வாடகைப் பணம்  உள்ளிட்ட எல்லாம் முத்துவின் பணம் தான்"
  • நிதி குறித்து சரியான கணக்கில்லை என்று உறுப்பினர்கள் கூறிய போது ஒரு கூட்டத்தில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக