19-04-2017 புதுச்சேரி ராசீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அவர்கள் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தை பொது நூலகமாக்க மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பொது நூலகக் கட்டிடம் கட்டுவதற்கு என ரூ 20 லட்சம் நிதி பெற்று தமிழ்ச் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது.
ஆனால், அந்த கட்டிடத்தில் நூலகம் என்ற பெயர் பலகை வைக்காமலேயே இவர்கள் செய்தித் தாள்கள், வார இதழ்கள் ஆகியவற்றை கடந்த 2006 ஆண்டு முதல் 2015 வரை கலைப் பண்பாட்டுத் துறை ரூ 48,167 வழங்கியுள்ளது.
இருப்பினும் இதனை முழுமையான பொது நூலகமாக செயல்படுத்தாமல் முற்றிலும் தமிழ்ச் சங்கக் கட்டிடமாக மாற்றி நிகழ்வுகள் அரங்கமாக வாடகைக்கு விட்டு, வியாபார நோக்கோடு செயல்படுத்தி வருகின்றனர்.
இதனால், பொது மக்களுக்கோ, தமிழ் வளர்ச்சிக்கோ, தமிழ் ஆர்வலர்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.
எனவே, பொது மக்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பயன் பெறும் வகையில் பொது நூலகத்தை அக்கட்டத்தில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, பொது மக்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பயன் பெறும் வகையில் பொது நூலகத்தை அக்கட்டத்தில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக