நற்றமிழில், தமிழகத்தில்
நல்லெண்ணம் இல்லாத
நரிக்கூட்டத்தைக்
கற்றுவைக்க அமைப்பதினும்
கடிநாயை அமைத்திடலாம்!
- பாரதிதாசன்
தமிழ்ச் சங்கம் என்பது உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டால், அல்லது தமிழ் மொழிக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் புதுவையில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளும் போராடியதைப் பார்த்திருக்க முடியும்.
புதுவைத் தமிழ்ச் சங்கம் மொழிக்காகவும் இனத்திற்காகவும் ஒருபோதும் போராடியதில்லை. ஈழத்தமிழர்களுக்காக உலகெங்கும் போராடிய போது புதுவைத் தமிழ்ச் சங்கம் மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவர்கள் போராடுவதெல்லாம் பதவிக்காக மட்டும் தான்.
எனக்குத் தெரிந்து இவர்கள் இயற்றிய ஒரே தீர்மானம்:
"புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது தான்."
இந்த முறை மாநாட்டில் ஏதோ தீர்மானம் நிறைவேற்றினார்களாம்...
இணையத்தில் தேடிப்பாருங்கள் தப்பித் தவறி தமிழினத்திற்காக போராடியதாக செய்தி வந்திருக்கிறதா பாருங்கள் வாய்ப்பு இல்லை. (வேறு சில அமைப்புகளுடன் நடத்தும் போது செய்திகள் உள்ளது.)
நீங்கள் என்ன எழுதினாலும் அவர்கள் உங்களைக் கண்டு கொள்வதில்லையே ஏன்?
பதிலளிநீக்கு