புதுச்சேரி தமிழ்ச் சஙகம்
தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதற்கான சங்கம் என்று நீங்கள் கருதினால் அது மிகவும்
தவறான கருத்தாகும்.
சிலர் கூற்றுப்படி அது ஒரு சாதிச் சங்கம் போல் செயல்படுகிறது
என்று சொல்லப்படுகிறது. நீங்கள்
தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டுமானால் அந்த குறிப்பிட்ட சாதியாக
இருக்க வேண்டும் என்ற நிலை புதுச்சேரியின் அவலமாகும்.
தமிழுக்கு தொடர்பு இல்லாதவர்களைக் கூட சாதி அடிப்படையில் அவர்களிடம்
உறுப்பினர் கட்டணம் கூட வாங்காமல் இப்போது பொறுப்பில் இருப்பவர்களே அந்த
தொகையை செலுத்து உறுப்பினர்களாக சேர்த்து விடுகின்றனர்.
ஆனால்
பல தமிழ் அறிஞர்கள் பிற சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தமிழ்சங்கத்தில்
உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை.
இந்த
வார இதழில் வந்துள்ள செய்தியை படியுங்கள். பல
செய்திகள் வெளிவரும்,
தமிழ்ச் சங்கத்தில்
தலைவராக இருந்த முத்து அவர்கள்
ஒரு செல்வந்தர் எனவே, வெளி நாட்டில்
உள்ள தமிழர்களுக்கு நிதி அளித்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தமக்கு
விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வாராம். அது போலத்தான்
பல நாடுகளில் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு விருது
வழங்கப்பட்டதாக சிலர் என்னிடம் தெரிவித்தனர்.