புதுவை முதல்வர் அவர்கள் தமிழுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளார்.
முதல்வர் அப்படி உதவி செய்வதாய் இருந்தால் முதலில் இந்த ஊழல் தமிழ்ச் சங்கத்தின் முறைகேடுகளை சரி செய்வது தான் முதன்மையான பணியாகும் அதனை செய்வாரா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
...........................................
தமிழ் சங்க பொன்விழா மாநாடு: தமிழுக்கும்,தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் நாராயணசாமி உறுதி
புதுவை மாநிலத்தில் தமிழுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் நமது அரசு உரிய மரியாதை செலுத்தி வருகிறது. புதுவை மாநில மக்களின் நலன் கருதி தற்போது நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன் என்றால் இதன் மூலம் அரசு தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக