தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக நான் பலமுறை கேட்டிருந்தேன். ஆனால், தொடர்ந்து எனது கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் எழுத்துப் பூர்வமாக 26-03-2014 அன்று இந்த விண்ணப்பத்தை நான் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்திருந்தேன். ஆனால், வழக்கம் போல எந்த பதிலையும் எமக்கு அவர்கள் அனுப்பவில்லை. அதன் தொடர்ச்சியாகவே, நாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாகவே தமிழ்ச் சங்க உறுப்பினராக பலர் பின்னர் சேர்க்கப்பட்டனர்.
விண்ணப்பம்
அனுப்புதல்:
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி – 605 001. கைப்பேசி: 94431 05825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com
இணையதளம்: http://pudhuvaitamilbloggers.org/
http://epithamizh.org/
வலைப்பூ: http://rajasugumaran.blogspot.com/
http://puduvaibloggers.blogspot.in/
சேரல்:
தலைவர் அவர்கள்
புதுவைத் தமிழ்ச்சங்கம்
வெங்கட்டா நகர்,
புதுச்சேரி-605011.
வணக்கம்,
நான் புதுச்சேரியில் வசித்துவருகிறேன் புதுவையில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் என்ற அமைப்பை நடத்திவருகிறேன். தமிழ் ஆர்வலர். எனவே என்னை தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
இரா.சுகுமாரன்
நாள்: 26-03-2014
இடம்: புதுச்சேரி