புலனத்தில் வந்த செய்தி அப்படியே அளிக்கப்பட்டுள்ளது.
வணக்கம் நண்பர்களே!
வணக்கம் நண்பர்களே!
மற்றும் திரு.திருநாவுக்கரசு புதுவைத் தமிழ்ச் சங்க பொருளாளர் அவர்களே.
நேற்று பெயர், ஊர், பொறுப்பு எதுவும் இல்லாத முகநூல் பதிவு ஒன்றை எனக்கு அஞ்சல் (forward) செய்து இருந்தீர்கள்.
நான் அது குறித்து கட் செவி வழி பிறகு பேசுகிறேன் என்றேன்
1). உங்கள் பதிவில் பாவேந்தர் பந்தங்கள் பற்றிய ஒரு விமர்சனம் கண்டேன். இதுகுறித்து மேலும் *விளக்கம்* வேண்டும்.
2). இந்த முக நூல் நீங்கள் பதிவை நீங்கள் forward அஞ்சல் வழி செல் பேசியில் அனுப்பும் போது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவுகள், விமர்சனங்கள், தக்க முறையில் நகல்கள், இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3) தற்போது புதுவைத் தமிழ்ச் சங்கம், மாதக் கூட்டம் நடத்தும் ஒரு சாதாரண அமைப்பாக மட்டுமே இல்லாமல், தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய ஒரு களமாக அமைய வேண்டும்
4) ஆண்டுதோறும் அமைப்பின் தணிக்கை செய்யப்பட்ட சான்று பெற்ற கணக்கு வெளியிடப்பட வேண்டும் .
5) ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற வேண்டும்.
6) பள்ளி, கல்லூரிகளில் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய பணிகள் நடைபெற வேண்டும்.
7) தமிழ் மொழி மற்றும், நம் இனத்துக்கு ,நம் தமிழ் அறிஞர்களுக்கு எதிராக செய்யப்படும், அறிவிக்கப்படும் திட்டங்கள், கருத்துக்கு எதிராக புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து பிற அமைப்புகளை இணைத்து போராட வேண்டும்.
8) தெரு கூத்து கலைஞர் திரு கோனரியார் மறைவால் ஆட்சி மன்றக் குழுவில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும்.
9) தமிழ்ச் சங்கம் தனிமனித துதி பாடும் அமைப்பு அல்ல.
10 )எங்கள் தந்தையால் அடையாளம் காட்டப்பட்டவர் தற்போதய தலைவர் கலை மாமணி முனைவர் முத்து ஐய்யா அவர்கள். அவர் செயல் பாடுகள் பாராட்டுக்கு உரியது அதில் ஐயம் ஏதும் இல்லை.
11) அதிகார பூர்வ, அங்கீகாரம் பெற்ற வாக்காளர் பட்டியல் / உறுப்பினர்கள் பட்டியல் முழு விரங்களுடன் விரைவில் வெளியிட வேண்டும்.
12) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றதாக வெளியாகி உள்ள தகவல் உண்மையா அதன் தன்மை குறித்த ஆட்சிகுழுவின் நிலைபாடு என்ன என தெரிவிக்க வேண்டுகிறேன்.
13). மேலும் சங்கக் கட்டடம் விரிவாக்கம் செய்ய வேண்டும். பழுது நீக்கம் செய்ய வேண்டும்.
14) சங்கத்தின் பணியாளர்கள் ஊதியம், நிர்வாக செலவுகள் சங்க நிதியம் மூலமே தரப்பட வேண்டும்.
15) உறுப்பினர்களில் மூத்த தமிழ் அறிஞர்கள் கொண்ட வழி காட்டல் குழு அமைக்க வேண்டும்.
16 ) அடுத்த ஆண்டு பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெறுமா?
நான் மேலே சொன்ன கருத்துக்கள் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர், 1967 முதல் அதனுடன் தொடர்பு உடையவன், அதற்கு கட்டிடம் கட்ட பாடுபட்ட தமிழ் மாமணி மன்னர் மன்னன் மகன், கலை மாமணி புதுவை கோ.பாரதி அண்ணன்,
பல ஆண்டுகள் தமிழ்ச் சங்க மனைக்கு வேலி போட்டுக் காத்தவர்களில் நானும் ஒருவன், பாவேந்தர் பாரதிதாசன் பேரன், மண்ணின் மைந்தன், இப்படி பல உரிமைகளில் இவற்றைக் கேட்கிறேன்
உங்கள் விளக்கம் வேண்டும்.
வேண்டும் எனில் பதிவுத் அஞ்சலில் இதனை அனுப்பி வைக்கிறேன்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
கவிஞர் புதுவை கோ செல்வம்,
பாவேந்தர் பாரதிதாசன் பேரன் மற்றும்
புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை
தலைவர் மற்றும் முன்னாள் உதவி இயக்குனர்
நிகழ்ச்சி புதுச்சேரி வானொலி நிலையம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹04.12.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக