இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

விருதுக்காக நடத்தப்படும் புதுவைத் தமிழ்ச் சங்கம்


நன்றி :  பாவலர். சு.ச

இதோ அவர் வரிகள்:

ஏன்  இதன்மேல் ஏக்கம்? 
===================*

விருதுகளை  விற்றுவரும்
வணிகக்  கும்பல் 
     விதவிதமாய் 
     சந்தைகட்டி
     வீண்அ  லம்பல்
அருவருப்பாய்  இருக்கிறதே
அவர்கள்  கொள்கை 
     அறிவுமது  
     நழுவிதத்தான்
     அலையும்   செய்கை 
எருமுட்டை  மதிப்பும்தான்
     அதற்கும்  உண்டா? 
     எவரெவரோ
     பெறுகின்றார்
     எக்குத்  தப்பாய்
இருதயத்தில்  கைவைத்தே
     எண்ணிப்   பாரீர்
     எதற்காக  
     அவைவாங்க
     காசு  தாரீர்! 

குழுவாகச்  செயற்பட்டு
கூட்டம்   கூடி
     குள்ளநரி     
     மனத்ததுடனே
     எங்கும் ஓடி
புழுவாக நெளிந்துத்தான்
     புரட்டுப்  பேசி
     புதுப்பொலிவாய்
     நடப்பதுபோல்
     வேடம்   காட்டி
எழுச்சியென்றும்
புரட்சியென்றும்
     விருதை   நீட்டி
     இழிசெய்கை
     புரிவோரே
     இனித்தி  ருந்து
அழுக்குகளை  அகத்தினுள்ளே
     சுமத்தல்  நீக்கு 
     அரந்தமிழை  
     அசிங்கமாக்கும்
     உமது   போக்கு! 

தகுதிக்கே  மதிப்பளிக்க
     தமிழ்தான்  மேவும்
     தரம்மலிந்த 
     பரிசுகளால்
     தரணி  தாழும்
மிகுதியாக  
பணமிருந்தால்
     மிடுக்காய்  வந்து
     மேடைகளில்  
     நலம்புரிந்து
     மேன்மை  காண்க
பகுத்தறியும்  பண்பாட்டை
     புதைத்தே  விட்டு
     படித்தவரும்
     பணம்கொடுத்து
     பரிசு  பெற்றால்
நகைப்பாகும்  
நாணமற்ற
    நிலைப்பா  டாகும்
    நாகரிகம்  பூமியிலே
    நச்சாய்  மாறும்!! 

பாவலர் சுச.

சனி, 14 நவம்பர், 2020

தமிழ்ச் சங்கம் அரசியல் கட்சிகளுக்கு தாரைவார்ப்பு

புதுவைத் தமிழ்ச்சங்கப் பாதுகாப்புக் குழு வணக்கம் நண்பர்களே.
நீங்கள் படத்தில் காண்பது ஒரு தேசியக் கட்சியின் அலுவலகம் அல்ல.

1967முதல் பல தமிழறிஞர்கள் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழர் கலை மேம்பாட்டுக்கென பாடுபட்டு  உருவாக்கியபுதுவைத் தமிழ்ச் சங்கம் குடி கொண்டிருக்கும் அரங்கமாகும்.
 
இங்கு நேற்று 07.11.2020 ஓர் அரசியல் கட்சிக்கூட்டம் முன் வாசல் பூட்டப்பட்டு நடைபெற்ற காட்சி. இன்று 08.11.2020 பிற்பகல் வரை அங்கு கொடிகள் பறந்துள்ளன.அந்த அரங்கம் மற்றும் அதன் இணைப்புக்கட்டடம்   மக்கள் வரிப்பணத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மேனாள் மாண்புமிகு புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டவையாகும். இங்கு வாசலைப் பூட்டிய  கூட்ட அரங்கில் அதன் சுற்றுச்சுவர்களில்  ஒரு தேசிய கட்சி கொடிகள் பறக்கும் காட்சியை பார்க்கிறோம்.மேலும் அதன் இணைப்புக் கட்டடத்தில் வேறு ஒரு தேசிய எதிர்க்கட்சியின் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்குகிறது அதையும் காண்கிறோம்.

பிரமாதம் 

நாம் இதற்கு புதுவைத் தமிழ்ச் சங்க முறைகேடுகள் செய்து பதவிக்கு வந்த தற்போதைய ஆட்சிக்குழுவினரை பாராட்டுவோம்.ஒரே கூரையின் கீழ் எதிர் எதிர் இரு  தேசிய இயக்கங்கள் வேறு எங்கும் காண முடியாத அற்புதக் காட்சி.

ஆனால் சட்டத்தையும் ஒப்பந்தத்தையும் மீறி இந்த இடங்களை வாடகைக்கு விட்டுள்ளனர்என்று மக்கள் மத்தியிலே கருத்து உள்ளது..கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு இருந்த மரத்தை வனத்துறை அனுமதியின்றி வெட்டினர்.
தற்போது ஓராண்டு ஆயிற்று.தேர்தல் பரப்புரையில் தலைவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பல மரங்கள் நடுவோம் என்றார்.அதனை நாம் நிச்சயமாக நினைவுபடுத்தியாக  வேண்டும். புதுவைத் தமிழ்ச் சங்க இடங்களை அரசியல் கட்சிக்கூட்டங்களுக்கு தரலாமா. இது சரியா மாநில அரசு மக்களுக்கு பதில் சொல்லவேண்டும்.

கவிஞர் புதுவை கோ செல்வம் 
ஒருங்கிணைப்பாளர் 
புதுவைத் தமிழ்ச்சங்கப் பாதுகாப்புக் குழு
08.11.2020

சனி, 15 ஆகஸ்ட், 2020

நமது முரசு சுவரொட்டி விளம்பரம் - தமிழ்ச் சங்கம்

தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.

விதி மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகை: புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

விதி மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகை: புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

By செ.ஞானபிரகாஷ்
Published: 12 Aug, 20 08:34 pmModified: 12 Aug, 20 08:34 pm
*இந்து தமிழ் செய்தி*
 
விதியை மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகைக்கு விட்டது உட்பட பல்வேறு காரணங்களால் புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்தக் கோரி புதுச்சேரி அரசை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடம் மூத்த வழக்கறிஞர் சி.பி.திருநாவுக்கரசு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டது. இடம் தமிழ்ச் சங்கத்துக்குச் சொந்தமாக இருந்தாலும், கட்டிடம் அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்குச் (DRDA) சொந்தமானது.

இக்கட்டிடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகம் அமைக்கவே நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி ஆண்டுதோறும் கணக்குகளைத் தணிக்கைச் செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அளிப்பதில்லை உட்பட பல விஷயங்களைச் சுட்டிக்காட்டி, கட்டிடத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்து அரசு கையகப்படுத்திடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் அறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்தவும், சங்கப் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இன்று அண்ணா நகரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (DRDA) முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் அழகர், இலக்கியப் பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம், தன்னுரிமைக் கழகத் தலைவர் சடகோபன், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் ரகுபதி உட்பட 12 அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "புதுவைத் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் சங்கக் கட்டிடத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் ஒப்பந்தத்தை மீறி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வாடகை விட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை அறிந்தும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் இழைத்துள்ளனர். இதனால் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.
 

புதுச்சேரி ஊரக வளர்ச்சி முகமையைக் கட்டித்து ஆர்ப்பாட்டம்


காசி வில்லவன் அவர்களின் முகநூல் பதிவுக்கு பதில்-2

காசி வில்லவன் அவர்களுக்கு பதில்-2

புதுவைத் தமிழ்ச்சங்கத்  தேர்தலில் 
யாருக்கு உங்களின் வாக்கு?


//ஒரு அன்பர் கொஞ்சமும் சளைக்காமல் கேள்விக் கணைகளையும் குற்றச்சாட்டுகளையும்  முகநூலில் பதிவிட்டுக் கொண்டே வருகிறார் ஒரு கர்ம யோகியைப் போல. ஒரு சங்கம் குறிப்பாகத் தமிழ்ச்சங்கம் தப்புத்தாளம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதில் அவர் காட்டும் அக்கறை, எடுத்துக் கொள்ளும் சிரமப்பாடுகள்,செய்யும் செலவு, செலவழிக்கும் நேரம் குடும்பத்தில் தன் மனைவி மக்களுக்காகக் கூட இந்த அளவு செய்து இருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது//

*உண்மைதான். பல கேடு கெட்ட மனிதர்கள் உண்மையை பேசாதபோது அவரின் செயல்பாடு பாராட்டத்தக்கது. நல்லது செய்யும் ஒருவர் பெயரைக் கூட உங்களால் வெளிப்படையாகக் கூற முடியவில்லையே ஏன்?*


//சொல்லப்போனால் இவர்கள்தான் திரு முத்துவின் தலைமையிலான   அணியினரின் வெற்றிக்குக் கங்கணம்  கட்டிக் கொண்டு  உழைப்பவர்கள்  என்று கூட சொல்லத் தோன்றுகிறது. கைப் பணத்தைச் செலவு செய்து திரு முத்து விற்குப் பேர் புகழ் விளம்பரம் அரசியல் செல்வாக்குத் தேடிக்கொடுப்பதில் இவர்களே முன்னணி வகிக்கிறார்கள். //

*உண்மைதான், ஆடம்பர மோகத்தினால் வாழும்  ஒரு பெண்ணை விபச்சார வழக்கில் காவல் துறை கைது செய்தது. பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் அவளது படமும் வெளிவந்தது. அவள் சொன்னாள் ஆகா என்ன அருமை!!. என் விபச்சாரத் தொழிலுக்கு இந்த காட்சி ஊடகங்கள் இப்படி ஒரு இலவச விளம்பரத்தை கொடுத்துள்ளார்களே நன்றி என்றாளாம்! - வேறுபாடில்லை*


//இவர்கள் வெளியிடும் அறிக்கைகள்,முன் வைக்கும் குற்றச்சாட்டுகள், செய்தித்தாள் விளம்பரங்கள் அவரது இருப்பை, வெற்றி வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளன.//

*உண்மைதான் ஐயா, பத்திரிக்கை அறிக்கைகளில், இவர்களை பித்தலாட்டக்கார்கள் என்று தான் அறிக்கை அளிக்கிறார்கள். பலரை உறுப்பினராக சேர்க்க அவரே பணம் கட்டுவதாக சொல்கிறார். அப்படி பணம் கட்டினாரா? வெளிப்படையாக ஏன் தெரிவிப்பதில்லை. "பொய்யர்கள்" என்று சொன்னாலும் அதனை விளம்பரம் என நம்பும் முட்டாள்களையா அவர் உறுப்பினராக சேர்த்துள்ளார். மோசம் ! படுமோசமையா !!.*


//. எதிரியை வீழ்த்த இவர்கள் வகுக்கும் வியூகங்கள் அவரை விழிப்படையவும், விறுவிறுப்படையவும்  செய்து விடுகின்றன.//
 
*இவர்கள் எதிரிகளா? இல்லை நாம் அப்படி கருதவில்லை.*

 *பித்தலாட்டங்களை மறைக்க விறுவிறுப்பாகவும் விழிப்பாகவும் இருக்கிறீர்கள் என்பதை அறிவோம்*

//"இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் " என்ற பழியிலிருந்து இவர்கள் தான் அவரைக் காப்பாற்றி வருகிறார்கள். அந்த வகையில் அவர் அவர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் .நல்லது. //

*உண்மைதான் ஐயா, “கெடுப்பார் இலனும் கெடும்” ஆனால், முத்து அவர்களின் புரட்டுகளுக்கு முட்டுக் கொடுத்து அவரை கெடுப்பவர்களே உங்களைப் போன்ற உடனிருப்பவர்கள் தானே.*

*அதனை இடித்து திருத்த முயற்சிப்பவர் யார் என்பது உங்களுக்கு தெரிகிறது. கெடுக்க முயற்சிக்கவில்லை. தெரிந்தும் இப்படி பேசுகிறீர்கள். ஆனால், அந்த கேவலத்துக்கு வக்காலாத்து வாங்கி பதிவு போடுவது மேலும் ஒரு கேவலம் எனப் படவில்லையா ஐயா, ஒரு வெற்றுத் தாள் விருதுக்கும், போலி புகழுக்கும் ஆசைப்பட்டு இப்படி பதிவு போடுவதை விட்டுவிடுங்கள். திருத்த முயற்சி செய்பவரின் பின் நில்லுங்கள் காலம் உங்களை வாழத்தும்.*

//இவர்களின் குற்றச்சாட்டு அனைத்தையும்  புறந்தள்ளி விட்டு ஒன்றை மட்டும் பார்ப்போம்.  எல்லோரையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கித் தேர்தல் நடத்துகிறார் என்பது முக்கியமானது. . அவர் வீட்டு வேலைக்காக யாரையும் 

 வாங்கி வியாபாரம் செய்யவில்லை. கைப்பணத்தைச் செலவு செய்து உறுப்பினர்களைச் சேர்த்து சங்கத்தை வலிமை படுத்திச் செயல்படுகிறார்.//

*பணத்தை செலவழித்து இப்படி செய்வது சனநாயக முறை தேர்தலா? வியாபாரமல்லவா? தமிழ்ச் சங்கம் தமிழ் அறிஞர்களுக்கான இடம். இதில் அன்றாட வாழ்க்கையையே ஓட்ட போராடி வரும் எளிய மக்கள் எப்படி மக்களுக்காகவும் மொழிக்காகவும் தொண்டாற்ற முடியும். கேள்விகள் கேட்க இயலாத தமிழ்ப் பணிகளில் எவ்வித தொடர்பும் இல்லாத எளிய மக்கள் பலரை உறுப்பினராக சேர்த்துள்ளார்*

*வியாபாரிகள் சங்கத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை உறுப்பினராக்கி இருக்கிறீர்களே வியாபாரம் செய்யாதவர்களை அவர்கள் உறுப்பினராக்கிக் கொள்வார்களா?.*

*வாக்குக்காக இவர்களை எல்லாம் சேர்த்துவிட்டு  தமிழ் வளர்ப்பதாக ஒரு மோசமான விளக்கம் அளிப்பது மோசடியானது.*


//முடிந்தால் மற்றவர்கள் உறுப்பினர்களைச் சேர்த்து தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியைப் பிடிக்க யாரும் தடை இல்லையே...//

*தமிழறிஞர்கள், உணர்வாளர்கள் என யாரையும் தமிழ்ச் சங்கம் உறுப்பினராக சேர்த்துக் கொள்வதில்லை. பெரும்பாலும் தலையாட்டி பொம்மைகள், உணர்வு மழுங்கிப் போனவர்கள். கூலிக்கு மாரடிக்கும் சில அடிமைகளை சேர்த்து வைத்துக் கொண்டு அவர்களுக்கும் அரசியல் தேர்தல் போல பரிசுகள் கொடுத்து பெறும் வெற்றி கேவலமானது.*


//அப்படி  இருக்க அவர் பணம் கொடுத்து எல்லோரையும் விலைக்கு வாங்கி விட்டார் என்று எப்படிச் சொல்வது?//

*பலர் விருதுக்கு விலைபோனார்கள்.*

//தமிழ் அறிஞர்கள், புலவர்கள் என்ன விலைக்கு வாங்கும் சந்தைப் பொருளா?/ /

*பாவேந்தர் பாரதிதாசன் குடும்பத்தில் கடைசி நேரத்தில் “கோ.பாரதியை” சரி கட்டினீர்கள். ஐயா ஆதிகேசவனுக்கு இருக்கை இல்லை "பாரதிக்கு " இடம் என பேசியதாக செய்தி வந்தது. மணிமேகலை அவர்களையும் சரி கட்டி வந்தீர்கள் ஆனால், கடைசியில் “கோ.செல்வம்” போராடிய பின் பாரதிதாசன் குடும்பத்தின் கைக்கு மீண்டும் தமிழ்ச் சங்கம் போய்விடுமோ என பயந்து எல்லோரையும் கழற்றி விட்டார்கள்.*

//அல்லது பணத்திற்காக சுய மரியாதையை விட்டுக் கொடுக்கும் சுரணை கெட்டவர்களா?//

*தமிழ்ச் சங்க உறுப்பினர்களை நீங்கள் அப்படித்தான் நினைக்கிறீர்கள். நாங்கள் தெரிந்தும் ஆதரிக்கும் சிலபேரை அப்படி நினைக்கிறோம்*

//காலத்தின் கட்டாயம் திரு.முத்துவைப் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமை ஏற்க வைத்து இருக்கிறது என்பதை யாரே மறுக்க வல்லார்? நிற்க.//

*உங்கள் குரலுக்கு நிச்சயம் ஒரு கூலி உண்டு*.

//மக்களாட்சி முறையில் ஏதேனும் ஒரு அணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்ய முடியும்..…... பல்வேறு செயல்பாடுகளையும்  சீர்தூக்கிப் பார்த்து  என் தரப்பிலான காரணங்களை முன் வைக்க விழைகிறேன்.//
 
    //1.புதுவைத் தமிழ்ச்சங்கப் பொன்விழாக் கொண்டாட்டம்.  புதுவை தமிழ் இலக்கிய வரலாற்றில் அது ஒரு மைல் கல்.  திரும்பிப் பார்க்க வைக்கும்  விழாவாக அது பொலிந்தது. அறிந்ததே .இதில் சுரண்டிச் செல்ல என்ன இருக்கிறது?  //
 
  *உறுப்பினர்கள் பலருக்கே அழைப்பு இல்லாமல் எவருக்காக இந்த விழா நடத்தினர். பங்கேற்பாளர்களும் வெற்று சால்ரா கும்பல் மட்டுமே கலந்து கொண்ட “மாநாடு” இது*.                                                                                             

2. //திருவள்ளுவர் சிலை திறப்பு விழா. தமிழின் ஒட்டு மொத்த அடையாளமாகத் திகழும் வள்ளுவருக்குச்சிலை எடுத்து விழா நடத்தியது புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் மற்றுமொரு சாதனை //
 
*திருவள்ளுவர் சிலை இல்லாத ஊருக்கு மட்டும் சிலை கொடுப்பவர்களிடம் புதுவையில் இல்லை எனப் பொய் சொல்லி வாங்கி வைத்த சிலை இது பெருமையா*? 
 
*திருவள்ளுவர் கருத்துக்கு எதிரானது இது*.      
         
 3. மறைந்த தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகளின்  பிறந்த நாள், நினைவு நாள்களில் விழா எடுத்தது அவர் தம் பெருமைகளை நினைவு கூர்ந்தது;  மலர் அஞ்சலி செய்து மரியாதைசெலுத்தியது.// 

*இதைத் தவிர நீங்கள் எதுவும் செய்ததில்லை. ஆனால், செத்துப் போன தமிழ்ச் சங்க உறுப்பினர்களை கண்டுக்க மாட்டீங்க! அவங்க செத்தாங்களா இருக்காங்களான்னு பார்க்காம தேர்தல் வாக்காளர் பட்டியலில் சேர்த்து வைத்துள்ளீர்கள் இதில் பெருமை கொள்ள என்ன உண்டு*

//4.தமிழுக்கு அரும் பணி ஆற்றியவர்களைக் கண்டெடுத்து விருது வழங்கி சிறப்பித்தது//

*சில தமிழறிஞர்கள் உணர்வை மழுங்கடிதீர்கள். உங்களை எதிர்த்துப் போராடாமல் இருக்க வழங்கிய விருதுகள் அவை. சிலருக்கு வழங்கியது அடிமை சாசனம்.*

//5.கடல் கடந்த அயலகத் தமிழர்களுக்கும் கலை இலக்கிய அங்கீகாரம் அளித்து விழாவெடுத்துச் சிறப்பித்தது. //

*உலகம் முழுதும் அம்பலப்பட்டுக் கிடக்கிறது புதுவைத் தமிழ்ச் சங்கம். சமூக ஊடகங்கள் தமிழ்ச் சங்கத்தை கழவி கழுவி ஊற்றுகிறது. இது தான் சிறப்பா?*

6.தொடர்ந்து நூல் வெளியீட்டு விழா, கவியரங்கம், .........

*இப்படி எல்லாம் செய்து தமிழ் வளர்த்தீர்களா?  ஆங்கிலத்தில் தலைப்பெழுத்திட்டு தமிழ் தான் எனப் பேசும் போதே நீங்கள் எப்படி தமிழ் வளர்க்கிறீர்கள் என்பது அறிந்தது தான்* 

//வெளியூர், வெளி மாநிலம், வெளி நாட்டு கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு , தமிழகர்களின் உலகு தழுவிய உறவிற்கு அடித்தளம் அமைத்தது .//

*ஒரு சேதி தெரியுமா உங்களுக்கு இவர்களே விருதுப் பட்டயத்தை புதுவையிலேயே செய்து கொண்டு வெளிநாட்டுத் தமிழர்களிடம் அங்கே கொடுத்து  வழங்கப்பட்டதாக புகைப்படம் எடுத்துக் கொண்டு இங்கு வந்து பத்திரிக்கைகளில் செய்தி கொடுக்கும் நிகழ்ச்சியை சொல்கிறீர்களா? இதைத்தான் உலகம் தழுவி செய்கிறீர்கள் என்பதைப் பலர் அறிவர்?.*

///திரு முத்து அவர்களின் அணிக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்.//

துதிபாடுவது நமக்கு  வேலை இல்லை.///

*துதி பாடி முடித்து விட்டு இல்லை என்கிறார்களே*!

 தமிழுக்காக இணைவோம் வாருங்கள் நண்பர்களே !   

*மானமுள்ளத் தமிழர்கள் யாரும் வர வாய்ப்பில்லை.*

//கவிஞர் காசிவில்லவன்//

*ஐயா கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி உங்கள் முகநூல் கணக்கில் உங்கள் பெயர் "Danassou Kasivillavan"  என ஆங்கிலத்தில் (பிரஞ்சு) தான்  உள்ளது.  மேலும் சில அடிமைகளும் இப்படித்தான் பெயரை ஆங்கிலத்தில் வைத்துள்ளார்கள் இப்படி வைத்துக் கொண்டு தமிழ் வளர்க்கிறோம் என்று பேசுவது நகைப்புக்குரியது.*

*அன்புடன்- இரா.சுகுமாரன்.*

புதன், 8 ஜூலை, 2020

தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததற்குக் கண்டனம்

*ஊடகச் செய்தி*
    
*உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததற்குக் கண்டனம்!*  

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (04.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:- 

புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டடம் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, அக்கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததைச் சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டடம் மூத்த வழக்கறிஞர் சி.பி.திருநாவுக்கரசு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டது. தமிழ்ச் சங்கத்திற்கு இடம் சொந்தமாக இருந்தாலும், கட்டடம் அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்குச் (DRDA) சொந்தமானது. இதுகுறித்து அப்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இயக்குநர் இடையே பதிவுச் செய்யப்பட்ட ஒப்பந்தம் உள்ளது.

இக்கட்டடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகம் அமைக்கவே பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் மேற்சொன்ன ஒப்பந்தத்தை மீறி கட்டடத்தை வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்து வருகின்றனர். மேலும், இவ்வாறு வசூலாகும் பணத்திற்கும் முறையாகக் கணக்கு வைக்காமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஒப்பந்தத்தில் கூறியபடி ஆண்டுதோறும் கணக்குகளைத் தணிக்கைச் செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அளிப்பதில்லை. பணப் பயன் பெறும் வகையிலும், நூலகம் தவிர வேறு பயன்பாட்டிற்குக் கட்டத்தைப் பயன்படுத்தவும் கூடாது என ஒப்பந்தத்தில் கூறியதை அப்பட்டமாக மீறி செயல்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களின் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, கட்டடத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்து அரசு கையகப்படுத்திடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது (W.P.No. 2071 of 2020).

இந்நிலையில், கடந்த 24.06.2020 அன்று, தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு நிலுவையில் உள்ள போது, இவ்வாறு கட்டடத்தை ஒப்பந்தத்தை மீறி வேறு பயன்பாட்டிற்கு விட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

எனவே, புதுச்சேரி அரசு இதில் தலையிட்டு தமிழ்ச் சங்கக் கட்டடம் உள்ளது உள்ளபடியே (Status Quo) இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவண், 

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

இரா. மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இர.அபிமன்னன், தலைவர், இராவணன் பகுத்தறிவு இயக்கம்.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

திங்கள், 2 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல்.- பேராசிரியர் நா.இளங்கோ

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல்.
https://www.facebook.com/nagailango/posts/10219479249285237
-----------+++++++++----------
ஆண்டுதோறும் பொதுக்குழுவைக் கூட்டாமல் சங்க கணக்குகளைத் தணிக்கை செய்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள், புதுவைத் தமிழ்ச் சங்கத்தைப் பாழடித்து வருகின்றனர்.
எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்குப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க விரும்பிய உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்காமல் அடிதடி, மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளின் மூலம் தமிழ்ச் சங்கத்தைச் சீர்குலைத்து விட்டனர்.
இந்த லட்சணத்தில் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் சிலரைத் தகுதி நீக்கம் செய்யவும் பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலை கொள்ளவும் கண்டனக் குரல் எழுப்பவும் உரிய தருணமாக இச்சூழலை நான் கருதுகிறேன்.
-முனைவர் நா.இளங்கோ.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல் மேலும் தொடர்கிறது.
-----------+++++++++----------
ஆண்டுதோறும் பொதுக்குழுவைக் கூட்டாமல் சங்க கணக்குகளைத் தணிக்கை செய்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் தன் விருப்பம் போல் தமிழ்ச் சங்கத்தை விருது வழங்கும் சங்கமாக மாற்றி வருகின்றனர்.
எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்குப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க விரும்பிய உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்காமல் அடிதடி, மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளின் மூலம் தமிழ்ச் சங்கத்தின் பெருமையைச் சீர்குலைத்து விட்டனர். இந்த லட்சணத்தில் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் சிலரை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யவும் பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலை கொள்ளவும் கண்டனக் குரல் எழுப்பவும் உரிய தருணமாக இச்சூழலை நான் கருதுகிறேன்.
நான்காவது முறையாக மீண்டும் மீண்டும் வே. முத்து, மு. பாலசுப்பிர மணியன் குழுவே தமிழ்ச் சங்கத்தைச் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளனர். இது ஜனநாயக விரோதப் போக்கு. இச்செயலை ஜனநாயக சக்திகள் கண்டிப்பாக எதிர்த்தல் வேண்டும்.
-முனைவர் நா.இளங்கோ.

புதுவைத் தமிழ்ச் சங்க அவலம் -8
-----------------+++++++-----------------
தமிழ்ச் சங்கத்தில் என்ன சிக்கல்?
------------++++++++----------
வெ.முத்து எப்பொழுது தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு வழியாக உள்ளே நுழைந்தாரோ அன்று தொடங்கியது புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அழிவுக் காலம்.
பதவி, புகழ், பட்டங்களை என்ன விலை கொடுத்தும் வாங்கிவிட முடியும் என்பது அவர் கொள்கை.
புதுவைத் தமிழன்பர்கள் இரண்டு அணியாகப் பிளவுபட்டு நிற்க அவரே முதல் காரணம். மற்றவர்கள் துணைக் காரணம்.
சிந்திப்பீர், செயல்படுவீர்.

புதுவைத் தமிழ்ச் சங்க அவலம் -9
----------------++++++++-----------------
புதுச்சேரி தமிழ் சங்க தலைவர் வெ.முத்து தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள செய்தியின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது அந்தப் பகுதியைப் படித்துப்பாருங்கள்.
-------------++++++++------------
மாதம் 25 ஆயிரம் செலவாகிறது என்கிறார். வரவு 19 ஆயிரம் என்று சொல்லுகிறார்.
ஆனால் தமிழ்ச் சங்க இருப்பு நிதி 9 இலட்சத்தில் 12 இலட்சமாக உயர்ந்துள்ளது என்கிறார். (இந்த 12 இலட்சம் யாருடைய வங்கிக் கணக்கில் உள்ளது?)
எல்லாமே தன்னுடைய சொந்த காசில் செலவு செய்வதாக சொல்கிறார்.
-------------------+++++++-----------------
இந்த அறிக்கையில் உள்ள முரண்பாடுகளைக் கூர்ந்து கவனியுங்கள்.

ஞாயிறு, 1 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்க தேர்தல் முறைகேடுகள் குறித்து பேராசிரியர் நா. இளங்கோ





கூகுள் குரல் தட்டச்சு மூலம் தட்டச்சிடப் பட்டது. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை.!!..



புதுச்சேரியில் தமிழ்ச்சங்கம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை சந்திக்கிறது. இப்பொழுது இருக்கிற ஆட்சிக்குழு அதாவது, கடந்த ஆட்சிக் குழு மூன்று முறை அதனுடைய தலைவரும் செயலரும் பொறுப்பேற்று தமிழ்ச்சங்கத்தின் நடத்தினார்கள். இப்போது நான்காவது முறையும் அவர்கள் போட்டியிடுகிறார்கள். பெரும்பாலும், அவர்கள் வெற்றி பெறுவதற்கு உரிய வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதற்கான சில காரணங்களும் அவர் வைத்திருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், அவர்களுக்கு வேண்டிய கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவர்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவர்கள் சேர்த்து உறுப்பினராக வைத்திருக்கிறார்கள். தனக்கு ஓட்டுப் போட கூடியவர்களை பொதுமக்களில் தமிழறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள் யாரேனும் உறுப்பினராக சேர வேண்டும் என்று விரும்பினால் அவர்களை அவர்கள் அவர்களை அனுமதிப்பது இல்லை. எனவே தனக்கு வேண்டியவர்களை வைத்து நடத்துகிற ஒரு தேர்தலாக தமிழ்ச் சங்கத் தேர்தலில் இருக்கிறது.

கடந்து மூன்று முறை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது ஒரு முறை கூட அவர்கள் முறையாக பொதுக்குழுவை கூட்டவில்லை ஒரு முறை கூட அவர்கள் முறையாக கணக்கு காண்பிக்கவில்லை பொதுக்குழுவில் அதுகுறித்து விவாதிக்க வில்லை வங்கிக்கணக்கு முறைப்படி இப்பொழுது இருக்கிற பொருளாளர் ஒரு பெயரில் மாற்றப்படவில்லை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இந்த சங்கம் ஒரு காலாவதியான சங்கம் என்று சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் கடந்த 2020 ஜனவரி வரை. இப்படி ஒரு காலாவதியான சங்கமாக  அதை நடத்திக்கொண்டு, வசூலிக்கிற பணத்திற்கு சரியான கணக்கும் காட்டாமல் பொதுக்குழுவை கூட்டாமல், விவாதிக்காமல், தமிழுக்கு அபூர்வமான எந்தப் பணியையும் செய்யாமல் இந்த சங்கம் இயங்கி கொண்டு இருக்கிறது. 

குறிப்பாக, முத்து அவர்களும், பாலசுப்பிரமணியன் அவர்களும் இந்த சங்கத்தின் உடைய தலைவர் செயலராக இருந்து தன்னை வளர்த்துக் கொள்வதில் தங்களுடைய புகழை பெருக்கிக் கொள்வதில் தங்களுக்கு விருதுகளை வாங்கிக் கொள்வதில் அவர்களுக்கு உள்ள ஆர்வம் தமிழ் வளர்ச்சிக் தமிழுக்கான ஆக்கபூர்வமான பணிகளை செய்வதற்கு அவர்கள் செயல்படுத்தவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் அவர்கள் நடத்தியதெல்லாம் வெறும் விழாக்களும் விருது வழங்கும்  நிகழ்ச்சிகளும் தான். விருதுகளும், நிகழ்ச்சிகளும் ஒரு அமைப்பிற்கு தேவைதான். அது எப்போதாவது நடக்கலாம், ஆனால், அதையே முழுநேரப் பணியாக எடுத்துக் கொண்டு அவர்கள் செய்கிறார்கள். தமிழுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கோ, தமிழ் ஆட்சி மொழியாக  ஆவதற்கோ தமிழை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கும் தாய்மொழி வழிக் கல்விக்கோ, பெயர்ப் பலகைகளில் தமிழ் மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவோ எதற்காகவும் அவர்கள் குரல் கொடுத்ததில்லை. அதற்காக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை, அதற்காக போராட்டங்களை நடத்தியது இல்லை. ஒரு சங்கம் ஜனநாயக பூர்வமாக இயங்க வேண்டும் என்கிற அந்த அடிப்படையை மீறி, தனிநபர் சொத்து போல தனி நபருடைய கையிருப்பில் வைத்துக் கொள்கிற ஒரு தனியார் அமைப்பு போல தமிழ்ச்சங்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


 நாங்கள் இதை எதிர்த்து தான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சொல்லும் பதில் என்னவென்று சொன்னால், எல்லாம் பொய் தான்!!. எல்லாம் நாங்கள் சரியாக செய்கிறோம்! சரியாக செய்கிறோம்!! குறிப்பாக முத்து வந்த பிறகுதான் உலகத்திற்கே தமிழ்ச்சங்கம் தெரிந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள்!!! உலகத்திற்கு தமிழ்ச் சங்கம் தெரிந்தது, எப்படி என்றால், வெளியிலிருந்து வருகிறவர்கள் அழைத்து வந்து இவர்கள் விருது கொடுக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு போகும்போது அங்கே போய் விருது வாங்கிக் கொண்டு வருகிறார்கள். அதனால், தெரிகிறதேத் தவிர தமிழுக்குப் பணிசெய்து இந்த தமிழ்ச் சங்கம் வெளியே தெரியவில்லை.  

எனவே, தொடர்ந்து இதனை ஒரு குற்றச் சாட்டாக வைத்துக் கொண்டிருக்கிறோம் எங்களில் யாருக்கும் பதவி ஆசை கிடையாது குறிப்பாக நான் எந்த பதவிக்கும் எந்தக் காலத்தில் போட்டியிட விரும்பாதவன் எங்களுக்கு பதவி நோக்கமல்ல, யார் இருக்கிறார்கள் என்பது கூட எங்களுக்கு நோக்கமல்ல. தமிழ்ச்சங்கம் தமிழை வளர்க்கிற சங்கமாக தமிழுக்கு ஆக்கபூர்வமான பணியாற்றக் கூடிய சங்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கடந்த 9 ஆண்டுகளாக அதை செய்யாதவர்கள், இப்பொழுது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதை செய்வார்கள் என்று நம்புவதற்கு என்னுடைய மனம் இடம் தரவில்லை. எனவே, இப்படி தொடர்ந்து அவர்களை அந்த பொறுப்பில் வந்தால் இது தனிநபர் கைக்கு மாறி, தனியார் சொத்து போல ஆகிவிடும். காலங்காலமாக இந்தத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி அதற்காகப் பாடுபட்ட தமிழறிஞர்கள் உடைய நம்பிக்கையும் கனவையும் தகர்ப்பதாக அது மாறிவிடும். எனவே, வியாபாரிகளின் கையில் தமிழ்ச்சங்கம் போய்விடக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம் சிந்திப்பீர்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்

புதுவைத் தமிழ்ச் சங்கக கட்டிடம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக கோ.சுகுமாரன்...



கூகுள் குரல் தட்டச்சு மூலம்  தட்டச்சு செய்யப்பட்டது.. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை.!!..

புதுவைத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பு இருந்து கொண்டிருக்கிறது இந்த புதுவைத் தமிழ்ச்சங்கம் முறையாக செயல்படாத காரணத்தினால் மறைந்த அண்ணன் அழகிரி அவர்கள் தலைமையில் புதுச்சேரியை தமிழ் பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கினோம். இந்த குழுவினுடைய நோக்கம் புதுவைத் தமிழ்ச் சங்கத்தை சரியான பாதையில் செயல்பட வைப்பதற்காகவும் புதுச்சேரியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த குழுவை ஏற்படுத்தினோம்.

 இந்த குழு சார்பாக புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருத்தவரை அது ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு சங்கமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று சொன்னாலே, அது அரசாங்கத்தின் கட்டுப்பட்ட ஒரு அமைப்பு .ஆனால், இவர்கள் எந்த வகையிலும் தமிழுக்கு பங்களிப்பு செய்யாமல் சட்ட விரோதமாகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது 2002 முதல் 2006 முடிய தமிழ்ச் சங்க கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்திற்கு அப்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் சிபி திருநாவுக்கரசு அவர்கள் 20 லட்சம் ரூபாய் அவருடைய பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தது கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் அரசாங்க நிதி பெற்று கட்டப்பட்ட ஒரு கட்டடம், இந்தக் கட்டடம் கட்டுவதற்காக தமிழ்ச் சங்கத்தில் அப்போது தலைவராக இருந்த பாவேந்தர் பாரதிதாசன் அவருடைய மகனார் மன்னர்மன்னன் அவர்களும் புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இருவரும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தமிழ்ச்சங்கத்தினுடைய கட்டிடம் என்பது தமிழ்ச் சங்கத்தை நிர்வாகம் செய்வதற்காக கட்டடம் அல்ல. அந்தக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட கட்டடம் அதைச் சொல்லித்தான் அந்தநிதி பெற்றிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அந்த கட்டிடத்தில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்தாலும், அல்லது ஏதாவது பணப்பயன் ஏற்படுகின்ற வகையில் அதை கட்டணத்தை பயன்படுத்தினாலோ தவறு என்றுச் சொல்லி இந்த ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். ஆனால், இதுநாள் வரையில் அந்த தமிழ் சங்கத்திலே நூலகம் இயங்கவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவில்லை. மாறாக தங்களுக்கு வேண்டியவருக்கு எல்லாம் இடம் கொடுத்து கூட்டம் நடத்தக் கூடிய ஒரு கூட்ட அரங்காக அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில் வரக்கூடிய வருவாய் கூட முறையாக ஒரு கணக்கு வைக்கவில்லை. நிறைய ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 இந்த அடிப்படையில் இந்த விதிமுறை நடக்க இருக்கின்ற காரணத்தினால் இந்த கட்டடம் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடம் என்ற அடிப்படையிலேயே எப்பொழுது வேண்டுமானாலும் அந்த கட்டடத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான அது ஒப்பந்தத்தில் ஒரு பிரிவு வைத்து இருக்கின்ற காரணத்தினால் விதியை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிற அந்த கட்டடத்தை அரசாங்கம் எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதை முறையாக செயல்படுத்த வேண்டும் எனச் சொல்லி தன்மையிலே டில்லி சென்றபோது இதற்கான தொடர்புடைய அமைச்சகத்தில் ஒரு மனு அளித்தேன். அந்த மனுவை பொதுச் செயலாளருக்கும் மற்றவர்களுக்கும் அளித்திருக்கிறோம். ஆளுனர் அந்த மனுவை உடனடியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அவர்களுக்கு அனுப்பி வைத்து விளக்கம் கேட்டிருக்கிறார்.

 அதாவது தமிழ்ச்சங்கம் முறையாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம். தமிழ்ச்சங்கம் என்று சொன்னாலே இன்றைக்கு புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் மத்தியில் ஊழல் முறைகேடு நிறைந்த சங்கமாக இந்த சங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

புதுவைத் தமிழ்ச் சங்கம் குறித்து பொறிஞர் இரா.தேவதாசு




கூகுள் குரல் தட்டச்சு மூலம் தட்டச்சிடப் பட்டது. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை



நம்முடைய தாய்மொழி தமிழ் மொழி அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது நான் சொல்ல இது என்ன யுனசுகோ நிறுவனம் சொல்கிறது. அவருடைய தாய் மொழியை பேச மறுப்பது நாள் பிறமொழி சொற்களை கலந்து பேசினால் அவருடைய தாய் மொழி பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் அழிந்துவிடும் பட்டியலிலே அந்தந்த தாய்மொழிகள் இடமளிக்கிறது அதில் நமது தாய் மொழியான தமிழ் மொழியும் இடம் பெற்று இருக்கிறது என்று ஒரு வருத்தமான செய்தியே என யுனசுகோ நிறுவனம் தன்னுடைய ஆய்வுகளில் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் எல்லாம் நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று சொன்னால் நம்முடைய தமிழ்ச் சங்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து அவர்களுடைய நிலைப்பாட்டுடன் போராடினால் நம்முடைய தமிழ் மக்களுக்கு மொழியை மீண்டும் பேசவும் எழுதவும் இளைய தலைமுறையினரை மழலை இறை தமிழ்க்கல்வி கற்க வேண்டிய கடமைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. அதை நாம் செய்கிறோமா அதுக்கு தான் நம்ம தமிழ் மொழி நம்முடைய தமிழ்ச் சங்கங்கள் அதற்காகப் பாடுபட வேண்டும் அந்த நிலைப்பாட்டை புதுவைத் தமிழ்ச்சங்கம் செயல் என்றுதான் எங்களுடைய கவலை அதுதான் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

 ஏன் இதை சொல்கிறேன் என்று சொன்னால் ஒரு அமைப்பு வலுவாக இருந்தால்தான் அந்த அமைப்பினுடைய செயல்பாடுகள் சிறப்பாக அமைப்பு வலுவாக இருக்கணும்னா அதனுடைய சட்டதிட்டங்கள் துணைவிதிகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் அது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் உறுப்பினர்கள் செய்கின்ற செயல்பாடுகள் எல்லாம் கொண்டு செல்ல வேண்டும் இதைத்தான் நாங்கள் கேட்கிறோம் 01/1968 என்ற பதிவை பதிவு செய்யப்பட்டது சங்கங்கள் என்னுடைய பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட பொன் விழாவை கண்டு தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஒரு நூறு உறுப்பினர்களே இருந்த இந்த தமிழ்ச் சங்கம் இன்று 1000 உறுப்பினர்களை அடைந்திருக்கிறது .

அப்போது இந்த சங்கத்தின் உடைய சட்ட திட்டங்கள் முறையாக பின்பற்றப்பட்டு இருக்கிறதா இதனுடைய கணக்கு வழக்குகள் முறையாக உறுப்பினர்களுக்கு சென்றடைந்து இருக்கிறதா இதனுடைய செயல்பாடுகள் எல்லாம் மக்கள் உற்றுநோக்கி இருக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?. 

9 ஆண்டுகாலமாக ஆட்சிக் குழுவில் இருப்பவர்களிடம் எத்தனையோ முறை தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் ரொம்ப ரொம்ப வேதனைக்குரிய செய்தி ஒரு அமைப்பை மொழிக்காகவும் மக்களுக்காகவும் செயல்படாமல் தங்களைப் பற்றிய செய்திகளுக்கும், தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்கும், தங்களைப் பற்றிய பெருமைகளை பேசுவதற்கும், ஒரு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதை நாம் அனுமதிக்கவே முடியாது. சங்கத்தினுடைய சட்டவிதிகள் துணைவிதிகள் அழகாக இருக்கிறது. ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதம் பொதுக்குழுவைக் கூட்டி உறுப்பினர் எல்லாம் கூட்டு ஆண்டுதோறும் என்னென்ன செலவு செய்து இருக்கிறார் அந்த கணக்கை தணிக்கை செய்து உறுப்பினர்களிடம் கொடுங்க வேண்டும். உறுப்பினர் படிச்சு பார்த்துட்டு அவனுடைய ஐயப்பாடுகளை உங்ககிட்ட சொல்ல போறோம் நீங்க அந்த கருத்துக்களை சொல்லுங்க அது ஒரு வலுவான ஒரு அமைப்பை பார்க்கும் அமைப்பு கருத்துமோதல்கள் வந்து அதற்கான தீர்வு கண்டு அந்த செயல்பாடுகளை செஞ்சு பாருங்க தமிழ்ச்சங்க எங்கே போய் நிற்கும்.

அய்யாவிடம் பலமுறை நான் நேரிலும் சொல்லி இருக்கிறேன் கடிதங்களும் கொடுத்திருக்கிறான் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக இது மாதிரி செய்றீங்களா உங்கள நீங்க கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இதில் என்ன பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதில் உங்களுக்கு என்ன சிக்கல் கணக்கு காட்டுவது என்ன சிக்கல் இது என நாங்க பலமுறை கேட்க்கிறோம். 

ஆண்டுக்கணக்கை பதிவர் அலுவலகத்தில் ஒப்படைக்காமையால்  சங்கம் செயலிழந்துவிட்டது. நாங்கள் சங்கங்களின் பதிவாளர் மிகத்தெளிவாக தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கு பதிலளித்திருக்கிறார். புதுவைத் தமிழ்ச்சங்க தன்னுடைய நிலை என்ன என்று கேட்டபோது புதுவைத் தமிழ்ச்சங்கம் ஆறு ஆண்டுகளாக அதனுடைய கணக்கு வழக்குகளை தணிக்கை செய்து எங்களிடத்தில் சமர்ப்பிக்கவில்லை எங்களிடத்தில் பொதுக்குழு கூட்டம் தகவல் இல்லை எங்களிடத்தில் புதுப்பிக்கவில்லை. அதனால் அந்த சங்கம் சட்டப்படி செயலிழந்து விட்டது.. என்றால் இது தான்  உங்களின் 9 ஆண்டு ஆட்சிக் காலத்தின் சிறப்பு.  தமிழுக்காக ஒரு போராட்டம் செய்து இருக்கிறீர்களா? குரல் கொடுத்து இருக்கிறீர்களா? உங்களுடைய பெருமையை பேசுவதற்கு அல்ல தமிழ்ச் சங்கம்.

புதுவைத் தமிழ்ச்சங்கம் குறித்து பெ.பராங்குசம் அவர்கள்




கூகுள் குரல் தட்டச்சினால் தட்டச்சு செய்யப்பட்டது. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை.


தமிழ் சங்கங்கள் என்று சொன்னாலே தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் பாடுபடுகின்ற ஒரு சங்கமாக உலகம் போராட்டங்களையும் கொண்டிருக்கும் போது ஒரு தொழிற்சங்கம் ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது புதுச்சேரி சென்று தமிழ் அமைப்புக்கள் ஒன்றுகூடி வழங்கப்பட இருப்பதாகவும் ஆனால் புதுச்சேரி தங்களின் கலந்துகொள்ளாது அந்த களப்பணியாற்ற வேண்டும் அப்போதுதான் நலம் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க என்ற பாவேந்தர் சொல்ல வரிக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும் புதுச்சேரி தமிழ்ச்சங்கம் அது பற்றி கவலைப் படுவதே துரோகம் இழைப்பது போல் ஒரு நாளைக்கு ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள் விழா நடத்துவது மாதமாக விழா நடத்துவது ஆண்டு விழாவை நடத்துகிறார்கள் தமிழர்கள் 1035 உறுப்பினர்கள் தெரிகிறது அவர்கள் எங்கே போனார்கள் தேர்தலுக்குப் பிறகு சேர்த்துக் கொள்கிறார்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது
யாருக்கு ஆசை கிடையாது அவரே தலைவராக இருக்க முடியவில்லை என்பதே

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தப்புத் தாளங்கள் - நக்கீரன் 8-2-2020

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் வில்லியனூரில் நடந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொதுக்குழுவைக் கூட்டாமல் தேர்தலுக்காக மட்டும் சிறப்புப் பொதுக்குழுவை கூட்டுகின்றனர். வரவு செலவு கணக்குக் காட்டவில்லை.

உறுப்பினர்கள் பலருக்கு பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புகள் அனுப்பவில்லை.

இதனைத் தட்டிக் கேட்டவர்களை குண்டர்களை வைத்து மிரட்டித் தாக்கினர். இதில் பாவேந்தர் பாரதிதாசனார் பெயரன் பாதிக்கப்பட்டார்.

வரவு செலவுக் கணக்குகள் தணிக்கை செய்து பதிவர் அலுவலகத்தில் கொடுக்காமையால் தமிழ்ச் சங்கத்தை செயலற்ற சங்கம் என அறிவித்துள்ளனர். 


தமிழ்ச் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு - தினகரன்

Add caption