மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலரும் மனித உரிமை செயல் பாட்டாளரான கோ. சுகுமாரன்- புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஏன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் என்பதை விரிவாக பேசினார்.
தமிழ்ச் சங்கத்தை முன்னேற்றுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்காக எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருட்டிணன் அவர்கள் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தின் மேற் பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ஒதுக்கி இருந்தார். ஆனால், தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அந்த பணத்தை பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த தொகை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது.
தமிழ்ச் சங்க கட்டிட ஆவணம் தொலைந்து விட்டது என்று சொல்கிறார்கள். பல ஆண்டுகளாக புதிய ஆவணத்தை ஏன் இவர்கள் விண்ணப்பித்து பெறவில்லை என்பது மர்மமாக இருக்கிறது. .. உள்ளிட்ட முறைகேடுகளை பட்டியலிட்டார்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக