புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு புதுவை அஞ்சலகம் எதிரில் நடந்தது.
இதில் எங்கள் பதிவேட்டில் 85 பேர்கள் கையொப்பம் இட்டிருந்தனர். பதிவு செய்யாமல் 12 பேர் என மொத்தமாக 97 பேர்கள் கலந்து கொண்டனர்.
நீண்ட நேரம் நடைபெற்றதால் வருவதும் போவதுமாக இருந்தனர் அமர்வதற்கு நாற்காலிகள் ஏற்பாடு செய்யவில்லை என்பதால் பரவலாக நின்றிருந்தனர்.
இது ஒரு அடையாள ஆர்ப்பாட்டமாகும், என்பதால் பெருமளவு உறுப்பினர்களை அழைக்கவில்லை. ஆனால் நிகழ்வு குறித்து அஞ்சலில் சிலருக்குத் தெரிவித்து இருந்தோம். பலருக்கு போலி முகவரி கொடுத்து உறுப்பினராக்கப்பட்டதால் பல கடிதங்கள் எங்கள் முகவரிக்கே திரும்பி வந்துள்ளது.
தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் உள்ளிட்ட நிகழ்வுகளை விரைவில் நடத்த இருக்கிறோம். அதில் பகுதிவாரியாக இணைத்து செயல்பட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
வருகை தந்த அனைவருக்கும் புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக