இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுவைத்  தமிழ்ச் சங்கம்  பிப்ரவரி 2019 இல் பொன்விழா மாநாடு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சிறிய நிகழ்ச்சியை தாங்களே முடிவு செய்து நடத்திவருகின்றனர். ஆனால், பன்னாட்டு அளவில் சில இலட்சங்களை செலவு செய்து நடத்த இருப்பதாக அறிவித்துள்ள தமிழ்ச் சங்கம் பொதுக்குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இப்படி கமுக்கமாக உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமல் பொன்விழா ஏற்பாடு செய்து நடத்துவது என்பது ஏற்கனவே செய்த நிதிமுறைகேடுகளை மூடி மறைப்பதற்காகவே செய்யப்படுவதாக தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர்.

இது போன்ற முறைகேடுகளை தமிழ்ச் சங்கம் தொடர்ந்து செய்துவருவது  மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

இதனை கண்டித்து புதுச்சேரி அஞ்சலகம் எதிரில்  பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழறிஞர்கள் ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்க!!

தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடித நகல் கீழே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக