slide

slide2
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு ...!
slide2
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு ...!
slide3
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
slide4
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...

திங்கள், 20 ஜனவரி, 2020

காசி.வில்லவன் அவர்கள் எழுதிய பதிவுக்கு இது பதில்-1

 காசி.வில்லவன் அவர்கள் எழுதிய பதிவுக்கு இது பதில்

முகநூல் நண்பர்களுக்கு வணக்கம்.
*தமிழ்ச் சங்கத்தின் து.தலைவர் ப.திருநாவுக்கரசு அவர்கள் அனுப்பிய செய்திக்கு ஒரு சுருக்கமான பதில்*
1. விளம்பரத்திற்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது என்ன கோமாளிக் கூத்து? அதுவும் மரக்கன்றுகள் வழங்குகிறோம் என்ற பெயரில் இப்படி ஒரு நாடகம் தேவையா?
*திருவள்ளுவர் சிலை நீங்கள் வைத்ததே ஒரு விளம்பரம் தான். விருது, விழாக்களைத் தவிர மொழி, இனத்திற்காக எள்ளளவும் பணியாற்றாத நீங்கள், தேர்தலில் உங்கள் சாதனையாக இதனைப் பேசத்தானே இந்த நாடகம் இது தேவையா*?
2. ஆக மனிதர்களைத் தோல் உரித்துப் பார்த்தால் பதவி மோகம், அதிகார போதை தான் உள்ளே புகுந்து குடைந்து ஆட்டிப் படைக்கிறது.
*உண்மை தான் பதவி மோகம் தான் உங்களை இப்படி பேச வைக்கிறது*
3. தனிமனிதப் பகைமையை, காழ்ப்புணர்ச்சியை நீக்கி விட்டுப் பார்த்தால் இது ஒன்றுமே இல்லாத விவகாரம்.
*தனிமனிதப் பகைமையா? உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பங்காளிச் சண்டையா? சொத்துத் தகறாரா? ஒழுங்காகத் தமிழ்ச் சங்கத்தை நடத்துங்கன்னா ஏதோ பேசுரீங்க*
4. திருவள்ளுவருக்குச் சிலை வைப்பது தப்பா?
*திருவள்ளுவர் சிலை வைப்பது தவறு இல்லை. ஆனால், யாரைக்கேட்டு வைத்தீர்கள்.? தமிழ்ச்சங்கம் என்ன “உங்கள் அப்பன் வீட்டு சொத்தா?" தலைக்கு ஆயிரம் என பல லட்சம் ரூபாயைக் கொடுத்தவர் களிடம் சொல்லாமல் அவர்களுக்கு அழைப்புக் கூட அனுப்பாமல் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமல் செய்வதற்கு நீங்கள் யார்?. உங்கள் மோசடிகளைப் பற்றி கேட்காதவர்களுக்கும் தலையாட்டி பொம்மைகளை மட்டுமே வைத்து நடத்த இது என்ன உங்க மாமியார் வீட்டு சொத்தா? பொதுக்குழுவிற்குத் தெரியாமல் நீங்கள் செய்தது “ஒரு மாபெரும் மோசடியாகும்”.*
5. தடையை மீறி ஆர்ப்பாட்டம் தமிழ் அமைப்பினர் 50 பேர் கைது "என்கிறது. மற்றொரு செய்தி "தமிழ்ச் சங்கம் எதிரே மரக்கன்றுகள் வழங்கும் போராட்டம்- 17 பேர் கைது"
*பொய்களில் உங்களை மிஞ்சிவிட்டதாக நினைக்கிறீர்களா?* *வந்தவர்கள் 65 இங்கு கைதானவர்கள் 20 பேர் காவல்துறை நீங்கள் எல்லாம் வர வேண்டாம் என பலரை வண்டியில் ஏற்றவில்லை. அதனால் தனியாக அவரவர் வண்டியில் வந்து அங்கும் பலர் கைதானர்.*
6. கைதானவர்கள் 50 பேரா? 18 பேரா? 17 பேரா? ஆக இத்தனை விதமான பொய் புரட்டு நிறைந்த ஒரு *கோமாளி* கூடத்திற்குப் பத்திரிகைகள் துணைபோய் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
*இத்தனை நாட்களாக செய்தியையே போடாமல் பார்த்துக் கொண்டீர்கள். நிலைமை மாறிவருவதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். உங்களை நாங்கள் ஒருபோதும் கோமாளி என்று சொல்லப் போவதில்லை! நாங்களும் அப்படிச் சொன்னால் உண்மையான கோமாளி யார் என்பது தெரியாமல் போய்விடும். கோமாளிகள் யார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும்*
7. இது வன்முறையைத் தூண்டும் உள் நோக்கம் கொண்டது எனக் கருதி காவல்துறை தடைவிதிக்கிறது. தடையை மீறிப் போராடியது மட்டுமல்ல அதைச் செய்தியாக்கி அனைத்து பத்திரிகைகளிலும் பெரிய அளவிலான புகைப்படமும் செய்தியும் வெளிவர ஆவன செய்து இருக்கிறார்கள்.
*105 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்ச் சங்கத்தில் இன்று 904 பேர்கள் உறுப்பினர்கள் (ஆண்டு 2017) அதன் மூலம் உறுப்பினர் கட்டணமாக பெற்றது எட்டு லட்சம் ரூயாய். அந்த எங்கள் பணத்தை வைத்து வித விதமாய் “பத்திரிக்கைகளுக்கு போசு” கொடுத்த நீங்கள் இந்த ஒரு படத்திற்கே அரண்டு போகிறீர்களே ஏன்?*
8. அரசுப் பள்ளிகளில் பயிலும் நம் தமிழக் குழந்தைகளுக்கு அடிப்படை தழிழ் அறிவோ, ஆங்கில அறிவோ இல்லாமல் உயர்கல்வியை எட்டிப்பிடிக்க முடியாத அவலத்தைத் துடைக்க எத்தனை பேர் பங்களித்திருக்கிறார்கள்? இவர்கள் தத்தெடுத்துக் கொண்ட பள்ளிகள் எத்தனை?
*ஐயா உங்க முதுகுக்கு பின்னாடி திருப்பிப் பாருங்க! நீங்கள் இதுவரை செய்த சாதனைகள் என்ன என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். முகநூலில் உங்கள் பெயர் ஆங்கிலத்தில் தான் உள்ளது.*
9. பக்கத்து இருக்கையில் இருப்பவர்களாவது தமிழில் கையொப்பம் போட முன் வந்தது உண்டா? குடும்பத்தாரின் பெயர்களில் எத்தனை பெயர்களைத் தனித்தமிழில் மாற்றிப் பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கிறார்கள்?
*தமிழ்ச் சங்கம் செய்யவேண்டிய தெல்லாம் செய்யாம மத்தவங்கள ஏன் செய்யல்லன்னு கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.*
10. திருவள்ளுவர் சிலை திறப்பு ஏற்பாட்டில் பெங்களூரு டில்லி போன்ற மாநகரங்களில் வெடித்த எதிர்ப்பும் அதனால் திருவள்ளுவர் சிலை சாக்கு உறைகளுக்குள் மூடிவைக்கப் பட்ட வேதனையும் தமிழ்கூறும் நல்லுலகம்
*தமிழ் மக்களே எதிர்க்கிறார்கள் என்றால் உங்கள் நிலை என்ன யோசியுங்கள். சிலை வைப்பவர் எப்படிப்பட்டவர்களாக இருப்பார் என்று பாருங்கள்!.*
11. இத்தனை எதிர்ப்பு, செலவையும் தாண்டி புதுவைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவரைக் கம்பீரமாக வீற்றிருக்கச் செய்த தலைவர் முத்துவிற்கும் சங்க நிர்வாகிகளுக்கும் முடிந்தால் ஒரு நன்றி செல்வோம்; *தவறு செய்தால் கண்டிப்பாகத் தட்டிக் கேட்போம்* தனிமனிதப் பகை, வெறுப்பு காழ்ப்புகளைப் புறந்தள்ளி விட்டுத் தமிழால் இணைவோம் தமிழுக்காக இணைவோம் வாருங்கள் நண்பர்களே!
*தவறு செய்தால் கண்டிப்பாகத் தட்டிக் கேட்போம் என வீர வசனம் பேசுகிறீர்கள்* *தட்டிக் கேட்போம் என்று நீங்கள் குறிப்பிட்டது "சால்ரா" தட்டுவதுத்தானே!* அதற்கு வாய்ப்பில்லை *நீங்க உண்மையிலேயே மானமுள்ளவராக இருந்தால் கீழ்க் கண்டவைகளைத் தட்டிக் கேட்டுவிட்டு எங்களுக்கு பதில் சொல்க:*
1. *வரவு செலவுக் கணக்கை ஆறு ஆண்டுகளாக தணிக்கை செய்யாதது ஏன்?*
2.*ஆண்டுதோறும் கூட்ட வேண்டிய பொதுக்குழுவை ஒருமுறை கூட கூட்டாதது ஏன்?*
3. *பொதுக் குழுவைக் கூட்டாமல், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமல் மாநாட்டை நட்த்தியது ஏன்?*
4. *பொதுக் குழு உறுப்பினர்களுக்கே பல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு அனுப்பாதது ஏன்?*
5. *தமிழ் ஆர்வலர்கள் பலரை உறுப்பினராக சேர்க்க மறுத்து உங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே மீண்டும் மீண்டும் உறுப்பினர்களாகச் சேர்ப்பது ஏன்?*
6. *வரவு செலவு பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாதது ஏன்?*
7. *ஏற்கனவே, புதுவைத் தமிழ்ச் சங்கம் நிதியை சரியாக பயன்படுத்தாத நிலையில் புதுச்சேரி அரசிடம் ரூபாய் ஐந்து இலட்சத்தை நிதியாக பெற்றது. அதற்கு எவ்விதமான வரவு செலவுக் கணக்குகளையும் உறுப்பினர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை?.*
8. புதிதாக பல உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நிலையில் உறுப்பினர்களில் பெரும்பான்மையோருக்கு தமிழ்ச் சங்கம் நடத்திய மாநாட்டிற்கும், சிலை திறப்பு நிகழ்ச்சிக்கும் அழைப்பே அனுப்பாதது ஏன்?*
9. *எங்கள் பணத்தில் மாநாடு நடத்தி எங்களையே அழைக்காத தமிழ்ச் சங்கம் யாருக்காக இந்த மாநாட்டை நடத்தியது என்று உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு தமிழ்ச் சங்கம் ஏன் இதுவரை பதிலளிக்கவில்லை?*
10. *இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவிடில் நீங்கள் உடனடியாகப் பதவி விலகத் தயாரா?*
இதுதான் பலரின் கேள்விகள்!!
"காசி.வில்லவன் அவர்கள் எழுதிய பதிவுக்கு இது பதில்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

செயலற்றத் தமிழ்ச் சங்கம் - பதிவர் அலுவலகம் தகவல்

புதுவைத் தமிழ்ச் சங்கம் செயல்படாத சங்கம் என இந்திய அரசின் பதிவுத்துறை அலுவலகம் பதில் அளித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்  கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளது.

பதிவு சட்டப்படி வரவு செலவு கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்து அந்த அறிக்கையை பதிவர் சங்கத்தில் கொடுத்து ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக நிதித் தணிக்கை ஏதும் செய்யவில்லை. புதுவைத் தமிழ்ச் சங்கம் தனது உறுப்பினர்களுக்குக் கூட நிதி தொடர்பாக தகவலை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை என்பதோடு பொருளாளர் என்பவரை பெயரளவான நிர்வாகியாக மட்டுமே தமிழ்ச் சங்கம் வைத்துள்ளது. 

வரவு செலவினை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி முறைப்படியாக நிர்வகிக்க வேண்டும். ஆனால்  நிதியை முறைப்படி வங்கியில்  செலுத்து வதில்லை. இதனால், வரவு செலவில் பல முறைகேடுகள்  நடந்துவருவதாக பலர் புகார் கூறிவரும் நிலையிலும் கணக்கினை பொது வெளியில் வெளியிட தமிழ்ச் சங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. 

தாமாக உறுப்பினராக சேர்ந்தவர்கள் ரூ 1000/-  வாழ்நாள் கட்டணமாக கட்டியே சேர்ந்தனர்.  

ஆனால், தமிழ்ச் சங்க நிர்வாகம் சுமார் 500 பேர்களுக்கு தாங்களே உறுப்பினர் கட்டணம் செலுத்துவதாகக் கூறி தனக்கு வேண்டியவர்களை மட்டும் உறுப்பினர் களாகச் சேர்த்துக் கொண்டனர். இவர்களை வைத்தே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இப்படி உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்ட 500 பேர்களுக்கு தமிழ்ச் சங்க நிர்வாகம் பணம் கட்டியதாகவும் தெரியவில்லை. 

இதனிடையில், இந்த சங்கத்தினை செயலற்ற சங்கம் என பதிவுத் துறை கூறியுள்ளது.  இப்படியாக செயலற்ற சங்கத்திற்கு அரசு ரூ ஐந்து இலட்சம் தமிழ்ச் சங்க மாநாட்டுக்கு நிதியாக வழங்கியுள்ளது. ஏற்கனவே, முறையாக நிதியை கையாளாத, தணிக்கை செய்து அறிக்கை அளிக்காத தமிழ்ச் சங்கத்திற்கு அரசு நிதி அளித்ததை சமூக அமைப்புகள் பல கண்டித்துள்ளன. 



வெள்ளி, 10 ஜனவரி, 2020

கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக் கொண்டே இருங்கள்...


புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் வரவு செலவுக் கணக்குகளைக் காட்டவில்லை. முறைப்படியாக சங்கம் நடத்தப்படவில்லை. பொதுவெளியில் பலர் இதுபற்றி பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால், இதுவரை எந்தவித பதிலையும் தமிழ்ச் சங்கம் அளிக்கவில்லை. அதனால் தமிழ் மக்களே நீங்களும் கேளுங்கள். ஏன் வரவு செலவுக் கணக்கை காட்ட மறுக்கிறார்கள்.


வெள்ளி, 3 ஜனவரி, 2020

மரம் வெட்டிச் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பதிவு ரத்தான அமைப்பு விருது தரலாமா? கவிஞர் பாரதிதாசன் பேரன் கோ.செல்வம் கேள்வி

நண்பர்களே. வணக்கம் தமிழ்ச் சங்கம் தொடர்பாக நான் எழுப்பிய வினாக்களுக்கு பலர் இன்று பதில் அனுப்பி வருகின்றனர்.
இந்த பிரச்னை பற்றிய கேட்கும் கேள்வி மற்றும் ஐய்யங்களுக்கு யாரேனும் விடை தாருங்கள் அய்யா, அம்மா,🙏🙏🙏🙏🙏

மரம் வெட்டிகளின் கூட்டம் இது.
தமிழ்ச்சங்கத்தின் 5 ஆண்டுகள் கணக்கு எங்கே ? சொல்லுங்கள்.
பதிவு ரத்தான அமைப்பு கூட்டம் போடுவதும் , விருது தரலாமா.
அதை தமிழா நீ எப்படி  பெறலாம்🤔🤔🤔🤔🤔🤔🤔
  1. செயல் படாத அமைப்பு மரம் வெட்டலாமா?
  2.  மரம் வெட்ட டெண்டர் கோரப் பட்டதா?.
  3. மரம் வெட்டபடும் என அறிவிப்பு செய்ப்படதா?
  4. தமிழ்ச்சங்க அரங்கம் காமராஜ் அரசு நூல் நிலையம் அல்லவா, அதன் பெயர் பலகை  எங்கே?
  5. மரம் வெட்டப்பட்ட காரணம் அங்கு ஐய்யன் சிலை அங்கு வருகிறதாம்,  வள்ளுவர் சிலை அரசு பேருந்து நிலையத்தில் உள்ளது, தமிழ்ச்சங்கம் உயிர்ப்புடன் இருக்க பாடுபட்ட திருமிகு சிவ.கண்ணப்பா சிலை அங்கு  வைக்க வேண்டும்.
  6. மரத்தை வெட்டாமல் சிலை வைக்கலாம், மரம் இருக்க சென்னை அண்ணா நூலகம் முத்தமிழ் அறிஞர் அவர்களால் கட்டபட்டு இன்றும் உள்ளது. எனவே நிழல் தரும் மரம் வெட்டபட்டு உள்ளதற்க்கு வனத்துறை அனுமதி உண்டா ?
  7. இவர்கள் தரும் பாராட்டும், பரிசும், விருதுகளுக்கு நாம் வேண்டியபடி ஆடவேண்டுமா.
  8. இப்போது உள்ள தமிழ்ச்சங்க  ஆட்சி மன்றக் குழுவை கலைத்து விட்டு உறுப்பினர்கள் பட்டியலை சட்டப் படி சரி பார்க்க , முறைப்படி நிர்வாகம் செய்ய தமிழக நீதிபதிகள் அடங்கிய  ஒரு குழுவை புதுவை அரசோ நடுவண் அரசோ உடனே நியமித்து உறுப்பினர்களிடம்  ஆய்வு செய்து தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளையும் கருத்தில் கொண்டு தமிழ்ச் சங்கம் காப்போம்.
இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் யாரோடும் தனிப்பட்ட பகை எமக்கு இல்லை.

இது தொடர்பாக உள்ள பிரச்னை பற்றி இந்த நீதிபதிகள் கூட்டும்   ஆண்டுப் பொதுக்குழுவில் விளக்கம் தரட்டும்.

அலைகள் ஓய்வதில்லை.

நன்றி

கவிஞர் புதுவை கோ செல்வம்
பாவேந்தர் பாரதிதாசன் பேரன் மற்றும்
புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் 
சென்னை 26.
27.12.19.

வெள்ளி, 13 டிசம்பர், 2019

புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு எதிராக நாங்கள் ஏன் போராடுகிறோம் ?

 சேரல்:

அனைத்து உறுப்பினர்கள் 

புதுவைத் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி

 

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்ப் பணியாற்றுவதில் தமிழகத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத பெருமையும், வரலாறும், சிறப்பும் கொண்டது புதுச்சேரி. தமிழ்ப் பணியாற்றுவதில் தமிழகத்திற்கு முன்னோடியாகவும் புதுச்சேரி பலவற்றில் இருந்தது. அத்தகைய பெருமையைக் கட்டிக் காப்பதற்கு பதிலாக, புதுச்சேரி தமிழ்ச் சங்கம் நிதி முறைகேடு, முறையாக சங்கத்தை நிர்வகிக்காதது உள்ளிட்ட பல புகார்களின் காரணமாக புதுவைத் தமிழ்ப் பொருமக்களின் நற்பெயருக்கு கேடு உண்டாக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. அவற்றில் சிலவற்றை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

1.புதுவைத் தமிழ்ச் சங்கம் கடந்த 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு ஒருமுறைகூட கூட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மே/சூன் மாதங்களில் பொதுக்குழு கூட்டப்படும் என தமிழ்ச் சங்க விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ச் சங்கத்தின் கணக்குகள் தகுதியான தணிக்கையாளரைக் கொண்டு தணிக்கை செய்யப்பட வேண்டும் என தமிழ்ச் சங்கம் விதி உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அவை சங்கப் பதிவருக்குக் கொடுக்கப்படிருக்க வேண்டும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

3.  இவ்வாறு கணக்குகளை தணிக்கை செய்து பதிவர் சங்கத்தில் அளிக்காமல் போனதால் இந்த சங்கம் சட்டப்படி செயலற்ற சங்கம் என சங்கங்களின் பதிவாளார் தகவல் உரிமைச் சட்டப்படி பதிலளித்துள்ளார்.

4. தமிழ்ச் சங்க நிர்வாகம் நிதி தொடர்பாக சரியான நடைமுறைகளை கொண்டிருக்கவில்லை என்பதை தொடர்ச்சியாக பலர் பலமுறை சுட்டிக் காட்டிய போதும் அது பற்றி தமிழ்ச் சங்க நிர்வாக எந்தவிதமாக முறையான பதிலையும் வழங்கியதில்லை. மாறாக சுட்டிக் காட்டுபவர்களை ஏதோ காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய் தகவல் அளிப்பதாக அவர்கள் பரப்புரை செய்கிறார்களே தவிர தாங்கள் நேர்மையாக இருப்பதாக சொல்லும் அவர்கள் அதனை ஒரு போதும் நிருப்பிக்க தயாராக இல்லை.

5.   குறிப்பாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி பாக்கி, மின்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கி, குடிநீர்க்கட்டணம் ஆகியவை முறையாக செலுத்தி தமிழ்ச் சங்கத்தை ஒழுங்காக நிர்வகிக்கவில்லை.

6. ஏற்கனவே, புதுவைத் தமிழ்ச் சங்கம் நிதியை சரியாக பயன்படுத்தாத நிலையில் புதுச்சேரி அரசிடம் ரூபாய் ஐந்து இலட்சத்தை நிதியாக பெற்றது. அதற்கு எவ்விதமான வரவு செலவுக் கணக்குகளையும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை.

7. புதிதாக பல உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நிலையில் உறுப்பினர்களில் பெரும்பான்மையோருக்கு தமிழ்ச் சங்கம் நடத்திய மாநாட்டிற்கு அழைப்பே அனுப்பவில்லை. உறுப்பினர்கள் கட்டணத்தில் நடத்திய மாநாட்டிற்கு உறுப்பினர்களுக்கே அழைப்பு அனுப்பாத  தமிழ்ச் சங்கம் இது.

8.  எங்கள் பணத்தில் மாநாடு நடத்தி எங்களையே அழைக்காத தமிழ்ச் சங்கம் யாருக்காக இந்த மாநாட்டை நடத்தியது என்று உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு தமிழ்ச் சங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.

 

நிலைமை இவ்வாறு இருக்க சங்க நிர்வாகிகள் இது போன்ற முறையற்ற செயல்களை மறைப்பதற்காக பலரை சந்தித்து விருதுகளை வழங்கி சமாதானம் செய்து வருவதை நாம் அறிகிறோம். பல அறிவிற் சிறந்த பெருமக்கள் இது போன்ற சிறிய விருதுகளுக்காக தங்களைச் சமாதானம் செய்து கொள்வதும், பல தவறான செயல்களை கண்டு கொள்ளாமல் போவதும், அதனோடு சிலர் ஆதரித்து செயல்படுவதும் மிகுந்த வருத்தமளிக்கும் செயலாக உள்ளது

புதுவைத் தமிழ்ச் சங்கம் கடந்த 2013 ஆண்டு அளவில் சுமார் 105 பேர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. புதுவையின் பல தமிழ் உணர்வாளர்கள் தமிழறிஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. புதுவையின் சாக்கித்திய அகாதமி விருதாளரும் தமிழறிஞருமான பிரபஞ்சன் உள்ளிட்டவர்களைக் கூட இந்தத் தமிழ்ச் சங்கம் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. தமிழறிஞர்கள் இல்லாத தமிழ்ச் சங்கம் என பலர் தெரிவித்த எதிர்ப்பின் விளைவாகவே பிரபஞ்சன், தமிழறிஞர் தங்கப்பா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்

மேலும் பல தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும், போராடித்தான் தங்களை தமிழ்ச் சங்க உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பல கட்ட தொடர்ப் போராட்டத்தின் பின்பு தான் தமிழ் உணர்வாளர்களும், அறிஞர்கள் பலரும் உறுப்பினர்களாக சேர அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இதற்கு முன்பாக தமிழுக்காக எவ்விதமான செயல்பாட்டிலும் கலந்து கொள்ளாத பலரை புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களாகச் சேர்த்தனர்

இதன் காரணமாக தமிழ்ச் சங்கம் ஒரு குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைத் தவிர வேறு எந்த உண்மையான தமிழ் அறிஞர்கள் யாரும் அந்தத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகியாக வருவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத நிலை உள்ளது.  

ஒரு வேளை வர வேண்டுமானால், புகழ்பாடி அடிமையாக இருந்தால் தவிர வேறு வாய்ப்பே இல்லை.

முறத்தால் புலியை விரட்டிய வீரத்தமிழ்த்தாய் என புறநானூற்று பெருமை பேசிவிட்டு, அடிமையாய் நின்று வெல்வது தமிழுக்கும் தமிழனின் மானஉணர்ச்சிக்கும் கேடானது

 

வியாழன், 12 டிசம்பர், 2019

பாவேந்தர் பாரதிதாசன் பேரன் கோ செல்வம் புதுவைத் தமிழ்ச் சங்கம் மீது புகார்

புலனத்தில் வந்த செய்தி அப்படியே அளிக்கப்பட்டுள்ளது.


வணக்கம் நண்பர்களே!

மற்றும் திரு.திருநாவுக்கரசு புதுவைத் தமிழ்ச் சங்க பொருளாளர் அவர்களே.

நேற்று  பெயர், ஊர், பொறுப்பு எதுவும் இல்லாத முகநூல் பதிவு ஒன்றை எனக்கு அஞ்சல் (forward) செய்து இருந்தீர்கள்.

நான் அது குறித்து கட் செவி வழி பிறகு பேசுகிறேன் என்றேன் 

 1). உங்கள் பதிவில் பாவேந்தர் பந்தங்கள் பற்றிய ஒரு விமர்சனம் கண்டேன்.  இதுகுறித்து  மேலும் *விளக்கம்* வேண்டும்.

2). இந்த  முக நூல்  நீங்கள் பதிவை நீங்கள் forward அஞ்சல் வழி செல் பேசியில் அனுப்பும் போது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவுகள், விமர்சனங்கள், தக்க முறையில் நகல்கள், இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

3) தற்போது புதுவைத் தமிழ்ச் சங்கம், மாதக் கூட்டம் நடத்தும் ஒரு சாதாரண அமைப்பாக மட்டுமே  இல்லாமல், தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய ஒரு களமாக அமைய வேண்டும் 

4) ஆண்டுதோறும் அமைப்பின் தணிக்கை செய்யப்பட்ட சான்று பெற்ற கணக்கு வெளியிடப்பட வேண்டும் .

5) ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற வேண்டும்.

6) பள்ளி, கல்லூரிகளில் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய பணிகள் நடைபெற வேண்டும்.

7) தமிழ் மொழி மற்றும், நம் இனத்துக்கு ,நம் தமிழ் அறிஞர்களுக்கு  எதிராக செய்யப்படும், அறிவிக்கப்படும் திட்டங்கள், கருத்துக்கு எதிராக புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து பிற அமைப்புகளை இணைத்து போராட வேண்டும்.

8) தெரு கூத்து கலைஞர் திரு கோனரியார் மறைவால் ஆட்சி மன்றக் குழுவில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும்.

9) தமிழ்ச் சங்கம் தனிமனித துதி பாடும் அமைப்பு அல்ல.

10 )எங்கள் தந்தையால் அடையாளம் காட்டப்பட்டவர் தற்போதய தலைவர் கலை மாமணி முனைவர் முத்து ஐய்யா அவர்கள். அவர் செயல் பாடுகள் பாராட்டுக்கு உரியது அதில் ஐயம் ஏதும் இல்லை.

11) அதிகார பூர்வ, அங்கீகாரம் பெற்ற  வாக்காளர் பட்டியல் / உறுப்பினர்கள் பட்டியல் முழு விரங்களுடன்  விரைவில் வெளியிட வேண்டும்.

12) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றதாக வெளியாகி உள்ள தகவல் உண்மையா அதன் தன்மை குறித்த ஆட்சிகுழுவின் நிலைபாடு என்ன என தெரிவிக்க வேண்டுகிறேன்.

13). மேலும் சங்கக் கட்டடம் விரிவாக்கம் செய்ய வேண்டும். பழுது நீக்கம் செய்ய வேண்டும்.

14) சங்கத்தின் பணியாளர்கள் ஊதியம், நிர்வாக செலவுகள்  சங்க நிதியம் மூலமே தரப்பட வேண்டும்.

15) உறுப்பினர்களில் மூத்த தமிழ் அறிஞர்கள் கொண்ட வழி காட்டல் குழு அமைக்க வேண்டும்.

16 ) அடுத்த ஆண்டு பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெறுமா? 

நான் மேலே சொன்ன கருத்துக்கள் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர், 1967 முதல் அதனுடன் தொடர்பு உடையவன், அதற்கு கட்டிடம் கட்ட பாடுபட்ட தமிழ் மாமணி மன்னர் மன்னன் மகன், கலை மாமணி புதுவை கோ.பாரதி அண்ணன்,

பல ஆண்டுகள் தமிழ்ச் சங்க மனைக்கு வேலி போட்டுக் காத்தவர்களில் நானும் ஒருவன், பாவேந்தர் பாரதிதாசன் பேரன், மண்ணின் மைந்தன், இப்படி பல உரிமைகளில் இவற்றைக் கேட்கிறேன்

உங்கள் விளக்கம் வேண்டும்.

வேண்டும் எனில் பதிவுத் அஞ்சலில் இதனை அனுப்பி வைக்கிறேன்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கவிஞர் புதுவை கோ செல்வம்,
பாவேந்தர் பாரதிதாசன் பேரன் மற்றும்
புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை
தலைவர் மற்றும் முன்னாள் உதவி இயக்குனர் 
நிகழ்ச்சி புதுச்சேரி வானொலி நிலையம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹04.12.19

செவ்வாய், 29 அக்டோபர், 2019

தமிழ்ச் சங்கத்திற்கு வாக்களிக்க மட்டும் தான் கூட்டம் வருமா?

புதுவைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கூட்டங்களில் பொதுவாக உறுப்பினர்கள் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. ஏனெனில், பெரும்பாலும் துதிபாடிகள் கூட்டமாகத் தான் அந்தக் கூட்டங்கள் அமைந்துள்ளன.

எனவே, தமிழ்ச் சங்கம் அடிக்கடி விருதுகள் அறிவித்துக் கூட்டம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த விருதுகளை வாங்குவதற்குக் கூடப் பலர் வருவதில்லை என்பது தான் வேடிக்கை......


வியாழன், 1 ஆகஸ்ட், 2019

கூகுல் தேடலில் தமிழ்ச் சங்க ஊழல் படங்களை காட்டலில் முன்னேற்றம்

தமிழ் மொழியை விட சமக்கிருத மொழி பழைமையானது எனத் தமிழக அரசின் ஆங்கிலப் பாடநூலில் குறிப்பிட்டது குறித்தோ அல்லது 10, 12 வகுப்பில் மொழிப்பாடமாகத் தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு  செய்தால்  போதும்  எனத் தமிழக அரசு அறிவித்த  போதும் அது குறித்துப் புதுவைத் தமிழ்ச் சங்கம் ஏதேனும் கண்டனங்களைத் தெரிவித்தார்களா? என்று இன்று நான் இணையத்தில் தேடினேன். 

ஆனால், என் கண்ணுக்கு ஒன்றும் தென்படவில்லை. இன்று புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று படங்களில் தேடியபோது மொத்தமுள்ள பதினொரு (11) படங்களில் ஒன்பது (9) படங்கள் தமிழ்ச் சங்கத்தின் முறைகேடுகள் குறித்த படங்கள் தான் வந்தது முன்பு தேடியபோது 15 படங்களில் 6 படங்கள் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேடு குறித்து வந்த நிலையில் இன்று 11 ப்டத்திற்கு 9 படங்கள் முறைகேடு குறித்து முன்னேற்றம் கண்டுள்ளதைக் கவனித்தேன். இந்த இணைப்பை கிளிக் செய்து நீங்களும் பாருங்களேன் புதுவைத் தமிழ்ச் சங்கம்



ஞாயிறு, 17 மார்ச், 2019

ஊழல் எனத்தேடினால் இனி தமிழ்ச் சங்கம் எனப் பொருள் வருமா?

புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று நீங்கள் இன்று கூகுலில் தேடினால் தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பான செய்திப் படங்கள் தான் முந்தி நிற்கின்றன.

இனி ஊழல் என்று இணையத்தில் தேடினால் அதற்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று விரைவில் பொருள் வருமா தெரியவில்லை. மூன்று வரிசையில் மொத்தமாக ஆறு படங்கள்  தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடு தொடர்பான படங்களாகும்.




கேள்வி கேட்பவர்களை நீங்கள் புறக்கணிக்கலாம். ஆனால், உலகத்தின் கண்களில் இருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதைத் தான் இந்த செய்திகள் நமக்குச் சொல்பவை. 

முன்பெல்லாம் தமிழ்ச் சங்கத்தை எதிர்த்த சுவரொட்டிகள் ஒட்டிய போது பல எதிர்ப்புக் குரல்கள் தொலைபேசி வழியாக வந்தன. ஆனால், இப்போது அப்படி வருவதில்லை. ஏனெனில் புதுவைத் தமிழ்ச் சங்கம் குறித்து இன்று பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

முகநூலிலும் வெளியில் இருப்பவர்கள் கூட எந்த எதிர்ப்புக் குரலும் எங்களுக்கு தெரிவிப்பது இல்லை. காரணம் நாங்கள் எதையும்  ஆதாரம் இல்லாமல் எழுதுவதில்லை என்பது தான். 

இந்த வலைப்பதிவில் கூட தொடர்புடைய ஒரு  படம் இல்லாமல் ஒரு செய்தி கூட இல்லை என்பதை  நீங்கள் அறியலாம். 



வெள்ளி, 15 மார்ச், 2019

புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழினத்திற்காக போராடியதாக செய்தி உண்டா?


நற்றமிழில், தமிழகத்தில்
நல்லெண்ணம் இல்லாத
நரிக்கூட்டத்தைக்
கற்றுவைக்க அமைப்பதினும்
கடிநாயை அமைத்திடலாம்!
                                                 - பாரதிதாசன்

தமிழ்ச் சங்கம் என்பது உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டால், அல்லது தமிழ் மொழிக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் புதுவையில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளும் போராடியதைப் பார்த்திருக்க முடியும். 

புதுவைத் தமிழ்ச் சங்கம் மொழிக்காகவும் இனத்திற்காகவும் ஒருபோதும் போராடியதில்லை. ஈழத்தமிழர்களுக்காக உலகெங்கும் போராடிய போது புதுவைத் தமிழ்ச் சங்கம் மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவர்கள் போராடுவதெல்லாம் பதவிக்காக மட்டும் தான்.

எனக்குத் தெரிந்து இவர்கள் இயற்றிய ஒரே தீர்மானம்:
"புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது தான்."

இந்த முறை மாநாட்டில் ஏதோ தீர்மானம் நிறைவேற்றினார்களாம்...

இணையத்தில் தேடிப்பாருங்கள் தப்பித் தவறி தமிழினத்திற்காக போராடியதாக செய்தி வந்திருக்கிறதா பாருங்கள் வாய்ப்பு இல்லை. (வேறு சில அமைப்புகளுடன் நடத்தும் போது செய்திகள் உள்ளது.)




வியாழன், 14 மார்ச், 2019

ஊழல் தமிழ்ச் சங்கத்தை முதல்வர் சரி செய்வாரா?

புதுவை முதல்வர் அவர்கள் தமிழுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

முதல்வர் அப்படி உதவி செய்வதாய் இருந்தால் முதலில் இந்த ஊழல் தமிழ்ச் சங்கத்தின் முறைகேடுகளை சரி செய்வது தான் முதன்மையான பணியாகும் அதனை செய்வாரா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





...........................................
தமிழ் சங்க பொன்விழா மாநாடு: தமிழுக்கும்,தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் நாராயணசாமி உறுதி

புதுவை மாநிலத்தில் தமிழுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் நமது அரசு உரிய மரியாதை செலுத்தி வருகிறது. புதுவை மாநில மக்களின் நலன் கருதி தற்போது நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன் என்றால் இதன் மூலம் அரசு தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அறியலாம்.

புதன், 13 மார்ச், 2019

முத்துவின் ஊழல் மோசடி பற்றி சுவரொட்டி ஒட்டியதால் அதிக வாக்களித்தார்களாம்!

தமிழ்ச் சங்கத் தேர்தல் முடிந்தவுடன்  முத்து அவர்கள் அளித்த பத்திரிக்கை அறிக்கையை கீழே அளித்துள்ளோம். தினமலர் செய்தி (14-02-2017)

தேர்தலில் முறைகேடு நடந்ததை ஒட்டி முத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. உள்ளூரின் கடுமையான எதிர்ப்பு உள்ளதால் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புகளை இணைத்தால் தான்  இதனை தமிழ்ச் சங்கம் போல் நடத்த முடியும் என்பதை அறிந்துள்ளார்.  உள்ளூரில் விலை போகவில்லை. வெளியூரில் வியாபாரம் செய்தாக வேண்டியுள்ளது. 

அப்போது எடுத்த முடிவின் படிதான் அவர் உள்ளூரில் உள்ள தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு அனுப்பாமல் வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி இருந்தார் என்பதை இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். 

இவரின் மோசடிகளைப் பற்றி சுவரொட்டி ஒட்டியதால் தான் தமிழ்ச் சங்கத்தினர் இவருக்கு அதிக வாக்கு அளித்தார்களாம்.  மோசடி என்று சுவரொட்டி ஒட்டியதாலேயே வாக்களித்தார்கள் என்றால், அவர் எத்தகையவர்களை  உறுப்பினர்களாக சேர்த்து வைத்துள்ளார் என்பதைப் பாருங்கள்.


செவ்வாய், 12 மார்ச், 2019

தமிழ்சங்கம் மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றாத வாக்குறுதிகள்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக முத்து தேர்வு செய்த போது வெளிவந்த செய்தி இது.

இந்த செய்தியில் முத்து அவர்கள் குறிப்பிட்ட மூன்று செய்திகளை நாம் நினைவு கூற வேண்டியுள்ளது. 

  • ஒரு அணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெறுவது சங்க வரலாற்றில் இதுவே முதல் முறை. :     
  • அவர் சொல்லும் செய்தி என்னவென்றால் இதுவரை இல்லாத அளவு தேர்தல் மிக மோசமான வடிவில் நடந்தது என்பது தான் அது. அரசியல் கட்சி போல பணம் "பிரியாணி உணவு" வாகனங்களில் அழைத்து வந்து  வாக்களிக்க வைத்தது. வெளியூரிலிருந்து அழைத்து வந்து மண்டபத்தில் தங்க வைத்து வாக்களிக்க வைத்தது என்ற பல்வேறு முறை கேடுகளும் தான்  இந்த முறை அவர்கள் அணி மட்டுமே வெற்று பெறக் காரணமாக இருந்தது. 

  • சங்கத்தில் மேல்மாடி கட்டவும், தொலைபேசி அலைபேசி கணினி வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.      பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருட்டிணன் தமிழ்ச் சங்க மேல்மாடி கட்டுவதற்கு ஒதுக்கிய 36 இலட்சம் நிதியை தன் சோம்பேரித் தனத்தினாலேயே அந்த நிதியை பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களைப் போன்றோர் நிர்வாகத்தில் இருக்கும் வரை எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. தேர்தல் நேரத்தில் சொன்ன எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை
  • சங்கத்தின் கணக்கில் இருந்து இதுவரை நான் நிதியை எடுத்ததே இல்லை. : சங்கத்தின் நிதியையும் தன் சொந்த நிதி என்று இவர் கருதுவதால் அது சங்கத்தின் நிதி என்று அவர் ஒருபோதும் கருதியதே இல்லை. ஏனெனில் சங்கத்தில் வந்த வருமானம் எதையும் இவர் வங்கிக் கணக்கில் செலுத்துவதே இல்லை. பொருளாளர் என்பவரை ஒரு பெயருக்காகவே வைத்துள்ளனர். 
  • கடந்த 2013-2017 காலகட்டத்தில் திரு தி.கோவிந்தராசு அவர்கள் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளராக இருந்தார். அவர் பொருளாளராக இருந்தவரை அவரிடம் தமிழ்ச் சங்க நிதி தொடர்பான எந்த கணக்கையும் அவரிடம் ஒப்படைக்கவில்லை.  இதனைக் கண்டித்து அவர் பணி விலகுவதாகவும் அறிவித்தார். எதற்கும் அஞ்சாத முத்து எந்தக் கணக்கையும் அவரிடம் ஒப்படைத்ததில்லை. 

  • 2010 முதல் 2013 ஆண்டு நிறைவடைந்த பொருளாளரிடமிருந்து கணக்கை 2017-ஆண்டு தொடக்கத்தில் தேர்வு செய்த பொருளாளருக்கு கணக்கு மாற்றியதாக தகவல். அப்படியானால் 2013 ஆம் ஆண்டுமுதல் 2017 ஆண்டு தொடக்கம் முதல் பொருளாளரிடம் கணக்கு ஒப்படைக்கவில்லை என்பது தான் உண்மை.
  • வங்கியிலும் பணம் செலுத்தவில்லை. "ஆம் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் பணம், வாடகைப் பணம்  உள்ளிட்ட எல்லாம் முத்துவின் பணம் தான்"
  • நிதி குறித்து சரியான கணக்கில்லை என்று உறுப்பினர்கள் கூறிய போது ஒரு கூட்டத்தில் 

வெள்ளி, 8 மார்ச், 2019

தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை பொது நூலகமாக்க கோரிக்கை

19-04-2017 புதுச்சேரி ராசீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர்  ரகுபதி அவர்கள் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தை பொது நூலகமாக்க மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பொது நூலகக் கட்டிடம் கட்டுவதற்கு என ரூ 20 லட்சம் நிதி பெற்று தமிழ்ச் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது. 

ஆனால், அந்த கட்டிடத்தில் நூலகம் என்ற பெயர் பலகை வைக்காமலேயே இவர்கள் செய்தித் தாள்கள், வார இதழ்கள் ஆகியவற்றை கடந்த 2006 ஆண்டு முதல் 2015 வரை கலைப் பண்பாட்டுத் துறை ரூ 48,167 வழங்கியுள்ளது. 

இருப்பினும் இதனை முழுமையான பொது நூலகமாக செயல்படுத்தாமல் முற்றிலும்  தமிழ்ச் சங்கக் கட்டிடமாக மாற்றி நிகழ்வுகள் அரங்கமாக வாடகைக்கு விட்டு, வியாபார நோக்கோடு செயல்படுத்தி வருகின்றனர். 

இதனால், பொது மக்களுக்கோ, தமிழ் வளர்ச்சிக்கோ, தமிழ் ஆர்வலர்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.
எனவே, பொது மக்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பயன் பெறும் வகையில் பொது நூலகத்தை அக்கட்டத்தில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.