இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

செயலற்றத் தமிழ்ச் சங்கம் - பதிவர் அலுவலகம் தகவல்

புதுவைத் தமிழ்ச் சங்கம் செயல்படாத சங்கம் என இந்திய அரசின் பதிவுத்துறை அலுவலகம் பதில் அளித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்  கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளது.

பதிவு சட்டப்படி வரவு செலவு கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்து அந்த அறிக்கையை பதிவர் சங்கத்தில் கொடுத்து ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக நிதித் தணிக்கை ஏதும் செய்யவில்லை. புதுவைத் தமிழ்ச் சங்கம் தனது உறுப்பினர்களுக்குக் கூட நிதி தொடர்பாக தகவலை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை என்பதோடு பொருளாளர் என்பவரை பெயரளவான நிர்வாகியாக மட்டுமே தமிழ்ச் சங்கம் வைத்துள்ளது. 

வரவு செலவினை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி முறைப்படியாக நிர்வகிக்க வேண்டும். ஆனால்  நிதியை முறைப்படி வங்கியில்  செலுத்து வதில்லை. இதனால், வரவு செலவில் பல முறைகேடுகள்  நடந்துவருவதாக பலர் புகார் கூறிவரும் நிலையிலும் கணக்கினை பொது வெளியில் வெளியிட தமிழ்ச் சங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. 

தாமாக உறுப்பினராக சேர்ந்தவர்கள் ரூ 1000/-  வாழ்நாள் கட்டணமாக கட்டியே சேர்ந்தனர்.  

ஆனால், தமிழ்ச் சங்க நிர்வாகம் சுமார் 500 பேர்களுக்கு தாங்களே உறுப்பினர் கட்டணம் செலுத்துவதாகக் கூறி தனக்கு வேண்டியவர்களை மட்டும் உறுப்பினர் களாகச் சேர்த்துக் கொண்டனர். இவர்களை வைத்தே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இப்படி உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்ட 500 பேர்களுக்கு தமிழ்ச் சங்க நிர்வாகம் பணம் கட்டியதாகவும் தெரியவில்லை. 

இதனிடையில், இந்த சங்கத்தினை செயலற்ற சங்கம் என பதிவுத் துறை கூறியுள்ளது.  இப்படியாக செயலற்ற சங்கத்திற்கு அரசு ரூ ஐந்து இலட்சம் தமிழ்ச் சங்க மாநாட்டுக்கு நிதியாக வழங்கியுள்ளது. ஏற்கனவே, முறையாக நிதியை கையாளாத, தணிக்கை செய்து அறிக்கை அளிக்காத தமிழ்ச் சங்கத்திற்கு அரசு நிதி அளித்ததை சமூக அமைப்புகள் பல கண்டித்துள்ளன. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக