இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 3 ஜனவரி, 2020

பதிவு ரத்தான அமைப்பு விருது தரலாமா? கவிஞர் பாரதிதாசன் பேரன் கோ.செல்வம் கேள்வி

நண்பர்களே. வணக்கம் தமிழ்ச் சங்கம் தொடர்பாக நான் எழுப்பிய வினாக்களுக்கு பலர் இன்று பதில் அனுப்பி வருகின்றனர்.
இந்த பிரச்னை பற்றிய கேட்கும் கேள்வி மற்றும் ஐய்யங்களுக்கு யாரேனும் விடை தாருங்கள் அய்யா, அம்மா,🙏🙏🙏🙏🙏

மரம் வெட்டிகளின் கூட்டம் இது.
தமிழ்ச்சங்கத்தின் 5 ஆண்டுகள் கணக்கு எங்கே ? சொல்லுங்கள்.
பதிவு ரத்தான அமைப்பு கூட்டம் போடுவதும் , விருது தரலாமா.
அதை தமிழா நீ எப்படி  பெறலாம்🤔🤔🤔🤔🤔🤔🤔
  1. செயல் படாத அமைப்பு மரம் வெட்டலாமா?
  2.  மரம் வெட்ட டெண்டர் கோரப் பட்டதா?.
  3. மரம் வெட்டபடும் என அறிவிப்பு செய்ப்படதா?
  4. தமிழ்ச்சங்க அரங்கம் காமராஜ் அரசு நூல் நிலையம் அல்லவா, அதன் பெயர் பலகை  எங்கே?
  5. மரம் வெட்டப்பட்ட காரணம் அங்கு ஐய்யன் சிலை அங்கு வருகிறதாம்,  வள்ளுவர் சிலை அரசு பேருந்து நிலையத்தில் உள்ளது, தமிழ்ச்சங்கம் உயிர்ப்புடன் இருக்க பாடுபட்ட திருமிகு சிவ.கண்ணப்பா சிலை அங்கு  வைக்க வேண்டும்.
  6. மரத்தை வெட்டாமல் சிலை வைக்கலாம், மரம் இருக்க சென்னை அண்ணா நூலகம் முத்தமிழ் அறிஞர் அவர்களால் கட்டபட்டு இன்றும் உள்ளது. எனவே நிழல் தரும் மரம் வெட்டபட்டு உள்ளதற்க்கு வனத்துறை அனுமதி உண்டா ?
  7. இவர்கள் தரும் பாராட்டும், பரிசும், விருதுகளுக்கு நாம் வேண்டியபடி ஆடவேண்டுமா.
  8. இப்போது உள்ள தமிழ்ச்சங்க  ஆட்சி மன்றக் குழுவை கலைத்து விட்டு உறுப்பினர்கள் பட்டியலை சட்டப் படி சரி பார்க்க , முறைப்படி நிர்வாகம் செய்ய தமிழக நீதிபதிகள் அடங்கிய  ஒரு குழுவை புதுவை அரசோ நடுவண் அரசோ உடனே நியமித்து உறுப்பினர்களிடம்  ஆய்வு செய்து தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளையும் கருத்தில் கொண்டு தமிழ்ச் சங்கம் காப்போம்.
இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் யாரோடும் தனிப்பட்ட பகை எமக்கு இல்லை.

இது தொடர்பாக உள்ள பிரச்னை பற்றி இந்த நீதிபதிகள் கூட்டும்   ஆண்டுப் பொதுக்குழுவில் விளக்கம் தரட்டும்.

அலைகள் ஓய்வதில்லை.

நன்றி

கவிஞர் புதுவை கோ செல்வம்
பாவேந்தர் பாரதிதாசன் பேரன் மற்றும்
புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் 
சென்னை 26.
27.12.19.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக