இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திங்கள், 2 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல்.- பேராசிரியர் நா.இளங்கோ

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல்.
https://www.facebook.com/nagailango/posts/10219479249285237
-----------+++++++++----------
ஆண்டுதோறும் பொதுக்குழுவைக் கூட்டாமல் சங்க கணக்குகளைத் தணிக்கை செய்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள், புதுவைத் தமிழ்ச் சங்கத்தைப் பாழடித்து வருகின்றனர்.
எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்குப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க விரும்பிய உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்காமல் அடிதடி, மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளின் மூலம் தமிழ்ச் சங்கத்தைச் சீர்குலைத்து விட்டனர்.
இந்த லட்சணத்தில் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் சிலரைத் தகுதி நீக்கம் செய்யவும் பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலை கொள்ளவும் கண்டனக் குரல் எழுப்பவும் உரிய தருணமாக இச்சூழலை நான் கருதுகிறேன்.
-முனைவர் நா.இளங்கோ.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல் மேலும் தொடர்கிறது.
-----------+++++++++----------
ஆண்டுதோறும் பொதுக்குழுவைக் கூட்டாமல் சங்க கணக்குகளைத் தணிக்கை செய்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் தன் விருப்பம் போல் தமிழ்ச் சங்கத்தை விருது வழங்கும் சங்கமாக மாற்றி வருகின்றனர்.
எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்குப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க விரும்பிய உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்காமல் அடிதடி, மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளின் மூலம் தமிழ்ச் சங்கத்தின் பெருமையைச் சீர்குலைத்து விட்டனர். இந்த லட்சணத்தில் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் சிலரை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யவும் பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலை கொள்ளவும் கண்டனக் குரல் எழுப்பவும் உரிய தருணமாக இச்சூழலை நான் கருதுகிறேன்.
நான்காவது முறையாக மீண்டும் மீண்டும் வே. முத்து, மு. பாலசுப்பிர மணியன் குழுவே தமிழ்ச் சங்கத்தைச் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளனர். இது ஜனநாயக விரோதப் போக்கு. இச்செயலை ஜனநாயக சக்திகள் கண்டிப்பாக எதிர்த்தல் வேண்டும்.
-முனைவர் நா.இளங்கோ.

புதுவைத் தமிழ்ச் சங்க அவலம் -8
-----------------+++++++-----------------
தமிழ்ச் சங்கத்தில் என்ன சிக்கல்?
------------++++++++----------
வெ.முத்து எப்பொழுது தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு வழியாக உள்ளே நுழைந்தாரோ அன்று தொடங்கியது புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அழிவுக் காலம்.
பதவி, புகழ், பட்டங்களை என்ன விலை கொடுத்தும் வாங்கிவிட முடியும் என்பது அவர் கொள்கை.
புதுவைத் தமிழன்பர்கள் இரண்டு அணியாகப் பிளவுபட்டு நிற்க அவரே முதல் காரணம். மற்றவர்கள் துணைக் காரணம்.
சிந்திப்பீர், செயல்படுவீர்.

புதுவைத் தமிழ்ச் சங்க அவலம் -9
----------------++++++++-----------------
புதுச்சேரி தமிழ் சங்க தலைவர் வெ.முத்து தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள செய்தியின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது அந்தப் பகுதியைப் படித்துப்பாருங்கள்.
-------------++++++++------------
மாதம் 25 ஆயிரம் செலவாகிறது என்கிறார். வரவு 19 ஆயிரம் என்று சொல்லுகிறார்.
ஆனால் தமிழ்ச் சங்க இருப்பு நிதி 9 இலட்சத்தில் 12 இலட்சமாக உயர்ந்துள்ளது என்கிறார். (இந்த 12 இலட்சம் யாருடைய வங்கிக் கணக்கில் உள்ளது?)
எல்லாமே தன்னுடைய சொந்த காசில் செலவு செய்வதாக சொல்கிறார்.
-------------------+++++++-----------------
இந்த அறிக்கையில் உள்ள முரண்பாடுகளைக் கூர்ந்து கவனியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக