நன்றி : பாவலர். சு.ச
இதோ அவர் வரிகள்:
ஏன் இதன்மேல் ஏக்கம்?
===================*
விருதுகளை விற்றுவரும்
வணிகக் கும்பல்
விதவிதமாய்
சந்தைகட்டி
வீண்அ லம்பல்
அருவருப்பாய் இருக்கிறதே
அவர்கள் கொள்கை
அறிவுமது
நழுவிதத்தான்
அலையும் செய்கை
எருமுட்டை மதிப்பும்தான்
அதற்கும் உண்டா?
எவரெவரோ
பெறுகின்றார்
எக்குத் தப்பாய்
இருதயத்தில் கைவைத்தே
எண்ணிப் பாரீர்
எதற்காக
அவைவாங்க
காசு தாரீர்!
குழுவாகச் செயற்பட்டு
கூட்டம் கூடி
குள்ளநரி
மனத்ததுடனே
எங்கும் ஓடி
புழுவாக நெளிந்துத்தான்
புரட்டுப் பேசி
புதுப்பொலிவாய்
நடப்பதுபோல்
வேடம் காட்டி
எழுச்சியென்றும்
புரட்சியென்றும்
விருதை நீட்டி
இழிசெய்கை
புரிவோரே
இனித்தி ருந்து
அழுக்குகளை அகத்தினுள்ளே
சுமத்தல் நீக்கு
அரந்தமிழை
அசிங்கமாக்கும்
உமது போக்கு!
தகுதிக்கே மதிப்பளிக்க
தமிழ்தான் மேவும்
தரம்மலிந்த
பரிசுகளால்
தரணி தாழும்
மிகுதியாக
பணமிருந்தால்
மிடுக்காய் வந்து
மேடைகளில்
நலம்புரிந்து
மேன்மை காண்க
பகுத்தறியும் பண்பாட்டை
புதைத்தே விட்டு
படித்தவரும்
பணம்கொடுத்து
பரிசு பெற்றால்
நகைப்பாகும்
நாணமற்ற
நிலைப்பா டாகும்
நாகரிகம் பூமியிலே
நச்சாய் மாறும்!!
பாவலர் சுச.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக