இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 1 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்கக கட்டிடம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக கோ.சுகுமாரன்...



கூகுள் குரல் தட்டச்சு மூலம்  தட்டச்சு செய்யப்பட்டது.. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை.!!..

புதுவைத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பு இருந்து கொண்டிருக்கிறது இந்த புதுவைத் தமிழ்ச்சங்கம் முறையாக செயல்படாத காரணத்தினால் மறைந்த அண்ணன் அழகிரி அவர்கள் தலைமையில் புதுச்சேரியை தமிழ் பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கினோம். இந்த குழுவினுடைய நோக்கம் புதுவைத் தமிழ்ச் சங்கத்தை சரியான பாதையில் செயல்பட வைப்பதற்காகவும் புதுச்சேரியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த குழுவை ஏற்படுத்தினோம்.

 இந்த குழு சார்பாக புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருத்தவரை அது ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு சங்கமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று சொன்னாலே, அது அரசாங்கத்தின் கட்டுப்பட்ட ஒரு அமைப்பு .ஆனால், இவர்கள் எந்த வகையிலும் தமிழுக்கு பங்களிப்பு செய்யாமல் சட்ட விரோதமாகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது 2002 முதல் 2006 முடிய தமிழ்ச் சங்க கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்திற்கு அப்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் சிபி திருநாவுக்கரசு அவர்கள் 20 லட்சம் ரூபாய் அவருடைய பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தது கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் அரசாங்க நிதி பெற்று கட்டப்பட்ட ஒரு கட்டடம், இந்தக் கட்டடம் கட்டுவதற்காக தமிழ்ச் சங்கத்தில் அப்போது தலைவராக இருந்த பாவேந்தர் பாரதிதாசன் அவருடைய மகனார் மன்னர்மன்னன் அவர்களும் புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இருவரும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தமிழ்ச்சங்கத்தினுடைய கட்டிடம் என்பது தமிழ்ச் சங்கத்தை நிர்வாகம் செய்வதற்காக கட்டடம் அல்ல. அந்தக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட கட்டடம் அதைச் சொல்லித்தான் அந்தநிதி பெற்றிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அந்த கட்டிடத்தில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்தாலும், அல்லது ஏதாவது பணப்பயன் ஏற்படுகின்ற வகையில் அதை கட்டணத்தை பயன்படுத்தினாலோ தவறு என்றுச் சொல்லி இந்த ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். ஆனால், இதுநாள் வரையில் அந்த தமிழ் சங்கத்திலே நூலகம் இயங்கவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவில்லை. மாறாக தங்களுக்கு வேண்டியவருக்கு எல்லாம் இடம் கொடுத்து கூட்டம் நடத்தக் கூடிய ஒரு கூட்ட அரங்காக அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில் வரக்கூடிய வருவாய் கூட முறையாக ஒரு கணக்கு வைக்கவில்லை. நிறைய ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 இந்த அடிப்படையில் இந்த விதிமுறை நடக்க இருக்கின்ற காரணத்தினால் இந்த கட்டடம் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடம் என்ற அடிப்படையிலேயே எப்பொழுது வேண்டுமானாலும் அந்த கட்டடத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான அது ஒப்பந்தத்தில் ஒரு பிரிவு வைத்து இருக்கின்ற காரணத்தினால் விதியை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிற அந்த கட்டடத்தை அரசாங்கம் எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதை முறையாக செயல்படுத்த வேண்டும் எனச் சொல்லி தன்மையிலே டில்லி சென்றபோது இதற்கான தொடர்புடைய அமைச்சகத்தில் ஒரு மனு அளித்தேன். அந்த மனுவை பொதுச் செயலாளருக்கும் மற்றவர்களுக்கும் அளித்திருக்கிறோம். ஆளுனர் அந்த மனுவை உடனடியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அவர்களுக்கு அனுப்பி வைத்து விளக்கம் கேட்டிருக்கிறார்.

 அதாவது தமிழ்ச்சங்கம் முறையாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம். தமிழ்ச்சங்கம் என்று சொன்னாலே இன்றைக்கு புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் மத்தியில் ஊழல் முறைகேடு நிறைந்த சங்கமாக இந்த சங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக