புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் பல
ஆண்டுகளாகத் தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் தம்மைத் தமிழ்ச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளும் படிபல ஆண்டுகளாகக்
கோரி வருகின்றனர். ஆனால், தமிழ்ச் சங்கம் ஒருபோதும் இவர்களின் கோரிக்கையை செவி
சாய்க்கவில்லை. எனவே, தற்போது பல்வேறு
தமிழ் மற்றும் சமுதாய இயக்கங்கள் தம்மை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகக்
களம் இறங்கியுள்ளது.
பேராசிரியர் இளங்கோ தமிழ்ச் சங்கத்திடம் தான் ஒரு போதும் தேர்தலில் நிற்க போவதில்லை.
அதில் பதவி வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் உறுப்பினராக ஆகவும் விரும்பவில்லை
ஏற்கனவே தமக்குப் பல வேலைகள் உள்ள படியால் இதனுடன் என்னால் செயல்பட இயலாது. என்று
குறிப்பிட்டுத் தம்மைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராக மட்டும் இணைத்துக் கொள்ள
வேண்டும் என்று கேட்டேன். தமிழ்ப் பேராசிரியாரான என்னைக்கூட சேர்த்துக் கொள்ள
மறுப்பதின் காரணம் உங்கள் எல்லோருக்கும் புரிந்திருக்கும்.
கோ.சுகுமாரன் பேசும் போது நான் மனித உரிமை தளங்களில் இயங்கி வருகிறேன். எனவே,
எனக்கு இதில் இணைந்து எந்தப் பொறுப்பும் ஏற்க இயலாது. ஆனால், நான் இதனுடன்
இணைந்துள்ளமைக்குக் காரணம் தமிழ்ச் சங்கம் நேர்மையற்ற முறையில் இவர்களை இணைத்துக்
கொள்ள மறுக்கிறது எனவே தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஆதரவாக நானும்
என்னை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட விரும்புகிறேன்.
இரா. அழகிரி நான் பல்வேறு இயக்கப் பணிகளில் இணைந்து செயலாற்றுகிறேன். தமிழ்ப்
பணிகளைச் செய்ய வேறு பலர் இருக்கிறார்கள். நாங்கள் வேறு பணிகளைச் செய்பவர்கள்.
நான் போராட்ட குணம் நிறைந்தவன் பல்வேறு போராட்டங்களில் இணைத்துக் கொண்டு உரிமைகளை
மீட்டுத் தரவேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளதால் நான் தமிழ் உணர்வாளர்களுக்கு
ஆதரவாக நானும் என்னை இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இரா.சுகுமாரன் : நான் பல்வேறு நண்பர் பணிசெய்யும் குழுவில்
இருக்கிறேன். ஆனால் அந்தக் குழுவில் பெரிய அளவில் இப்போதெல்லாம் இணைந்து பணி
செய்வதில்லை.
வெளியில் உங்களுக்குப் பல்வேறு பணிகள் காத்துக் கிடக்கிறது அதில்
நன்றாக இணைந்து செயல்படுங்கள் வெறும் கவிதைப் போட்டியும் கட்டுரைப் போட்டியும்
நடத்தி தமிழை வளர்த்துவிட முடியாது. எனவே இது போன்ற அமைப்புகளில் உங்களை இணைத்துக்
கொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். என எனது நண்பர் ரவிசங்கர் என்னிடம் சொன்ன தகவல்,
இன்றும் என் நினைவில் இருக்கிறது. எனவே, தமிழ்ச் சங்கத்தில் இணைந்து நானும்
இணைந்து ஒன்று செய்துவிடப் போவதில்லை.
இருப்பினும் தமிழறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஆதரவாக நானும்
இதில் இணைத்துக் கொண்டிருக்கிறேன்.
அன்பு நண்பர்களே நீங்களும் அவர்களுக்கு ஆதரவாக இணைத்துக்
கொள்ளுங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக