இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 10 ஜனவரி, 2017

எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தல்களில் போட்டியிடலாம்

ஒருமுறை தேர்தலில் வெற்றி பெற்றால் வாழ்நாள் முழுதும்  நிர்வாகியாக நீடிக்கலாம் என்ற தீர்மானத்தையும் விரைவில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்

பிப்.12-இல் புதுவை தமிழ்ச் சங்கத் தேர்தல்

By புதுச்சேரி,| DIN | Published: 10th January 2017 08:23
புதுவை தமிழ்ச் சங்கத்துக்கான தேர்தல் வரும் பிப்.12-ல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புதுவை தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்களின், பொதுக்குழுக் கூட்டம் வில்லியனூரில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார்.
 செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில், வரவு, செலவு கணக்குகளை படித்து, பொதுக்குழு ஒப்புதல் வழங்கிய பிறகு, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்ய, தேர்தல் ஆணையராக முன்னாள் நீதிபதி சேதுமுருகபூபதியை நியமித்து பொதுக் குழுவில் தீர்மானித்தனர்.
 பின்னர், நிறைவேற்றிய தீர்மானங்கள்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழறிஞர் வ.செ.குழந்தைசாமி, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, கவிஞர் இன்குலாப், புதுவை தமிழறிஞர்கள், தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதுவை தமிழ்ச் சங்க ஆட்சிக் குழுவிற்கு 11 உறுப்பினர்களை, வரும் பிப்.20-க்குள் தேர்தல் நடத்தி தேர்வு செய்து தருமாறு, தேர்தல் ஆணையர் சேதுமுருகபூபதியிடம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழுவுக்கும், ஆட்சிக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
 இதனையடுத்து, தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் முருகபூபதி கூறியது: புதுவையில் வரும் பிப்.12-இல் தமிழ்ச் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
 தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சங்கப் பொருளாளர் கோவிந்தராசு நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக