புதுவைத் தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்ய இருப்பதாக அதன் தலைவர் திரு முத்து அவர்கள் தெரிவித்ததாக புதுவைத் தமிழ்பாதுகாப்புக் குழு தலைவர் திரு அழகிரி தெரிவித்தார்.
தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்ன பதில் சொல்வார் என்பதை முன்னமே அறிவோம். காலம் கடத்துவது அவரது முடிவாகும் ஏற்கனவே ஒரு மாதகாலம் ஆன நிலையில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல் மேலும் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் அழகிரி தெரிவித்தார்.
பத்து நாள் என்பதை மேலும் நீட்டித்து, பின்னர் அவர் சொல்ல இருக்கும் பதில் " பொதுக்குழுவில் இப்போது உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது" என கூறுவார் என்றே நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் கடந்த கால அனுபவம் அப்படித்தான் உள்ளது.
எனவே. நாங்கள் சென்ற வாரத்திற்கு முன் எடுத்த முடிவின் படி நகரம் முழுவதும் தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து முதல்கட்டமாக சுவரொட்டி ஒட்டுவது என முடிவெடுத்தபடி எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை நடைபெறும்.
சென்ற வாரம் "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" அமைக்கப்பட்ட பின்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முத்து அவர்களை சந்தித்து விருப்பமுள்ளவர்களை தமிழ்ச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
எனவே, இன்று காலை "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" வின் தலைவர் திரு. இரா.அழகிரி அவர்களிடம் தமிழ்ச் சங்கத்தின் தலைவரை இக்குழு சந்திப்பதற்கான நேரத்தை தொலை பேசி மூலம் பேசி உறுதிப்படுத்தும்படி கேட்டிருந்தேன்.
இரண்டு முறை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முத்து அவர்கள் தொலை பேசி அழைப்பை ஏற்கவில்லை. எனவே, குழு சந்திப்பதற்கான நாள் மற்றும் நேரம் உறுதிப்படுத்த வேண்டி நேரில் நானும் (இரா.சுகுமாரன்) திரு அழகிரி அவர்களும் திரு. முத்து அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தோம்.
உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழுவில் முடிவெடுத்து தெரிவிப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார். அதுவரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படின் இக்குழு சந்திப்பதா அல்லது மேல் நடவடிக்கை மேற்கொள்வதா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக